
இரவில் ஆந்தைகள்
காக்கையின் கூட்டைக் கலைத்தன…
குஞ்சுகளைக் கொன்று தின்றன…
விடிந்தது ….
காக்கைகள் ஆந்தையை
கொத்திக்கொதிக் கொன்றது…
இரவைப் பார்த்துப்
பாடம் கற்றவன்
அஸ்வத்தாமன்….
தூங்கிக்கொண்டிருந்த
பாண்டவக் குழந்க்தைகளைக் கொன்றான்..
தர்மத்திற்காக
அதில் ஒன்று தப்பியது…
பகலில்
அவனைக் கொல்ல
பார்த்தன் துடித்தான் …
விழிப்போடிருந்த கண்ணன்
“அஸ்வத்தாமா நீ சிரஞ்சீவியாக
என்றுமே இருப்பாய்
துன்பத்தோடு” என்று சபித்தான்..
இன்றும் தெருக்களில்
பலர் அஸ்வத்தாமனாக
அலைகின்றனர் துன்பத்தில்….
தப்பிய தர்மவானின் கைகள்தான்
பகைமறந்து அவர்களை அணைக்கிறது…
( 09.09.2015)
