கு. ப. ரா/ ராஜேந்திரன் கனவு
ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று மாலை சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன், தன் புதிய தலைநகர் கங்கைகொண்ட சோபுரத்து அரண்மனையின் உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பக்கத்தில் அவருடைய சகோதரி வேங்கி நாட்டு அரசி குந்தவை உட்கார்ந்துகொண்டு சக்கரவர்த்தியின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.ராஜந்திர சோழனுக்கு …
>>