அழகியசிங்கர்/ உலகப் புத்தகத் தினத்தை ஓட்டிக் கவிதைகள்
‘என்றார் எக்காளமாய்கோடி வீட்டு கோவிந்தனிடம் சொன்னேன்‘இன்னும் கதை எழுதுவதை நிறுத்தவில்லையா’என்றான் படுபாவி
>>‘என்றார் எக்காளமாய்கோடி வீட்டு கோவிந்தனிடம் சொன்னேன்‘இன்னும் கதை எழுதுவதை நிறுத்தவில்லையா’என்றான் படுபாவி
>>வெய்யிலோ மழையோஆளுக்கொரு குடை! நிழல் அவசியம்! நிழல்பயணம் தொடரகுடை மிகவும் அவசியம்! குடையில்லையெனில்நிழலில்லைநிழலில்லையெனில்நடக்கவோர் சாலையில்லைசாலையற்ற சாலையில்நீள்வது முட் பாதை! முட்களில் கால் படாமல்முட் கீறல் இல்லாமல்வீடு போய் சேரமனதின் நுனியில்ஏதோ ஒரு தவிப்பு! முட்களில் வந்தமர்ந்துஏமாறுகின்றன படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்! அடுத்த நொடிவண்ணப் …
>>குழந்தை சிரிப்புகுதுகலமான பேச்சுகுறை சொல்லா மனசு எல்லோரும் ஒன்றே அவனுக்குஅவன் விரும்புவதும் நன்றே எல்லா நிகழ்வுகளிலும்அவன் உண்டுஅவனுக்கு நிகர் யார் உண்டு? என் கவிதைகளின்முதல் ரசிகன்என் உடன் பிறவா சகோதரன் பாராட்டுவதில்அவன் இந்திரன்படைப்பதில் அவன்பிரம்மதேவன் அவன் கவிதைகளில்எப்பொழுதும் ஒலிக்கும்ஒரு “பூபாளம்”மீண்டும் படித்தால் “சொல் …
>>10.04.26 அன்று விருட்சம் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசித்த எனது கவிதைகள்.. 1.அசைகிறது ஓர் அஸ்திவாரம் ஆண்டவனின் வளாகத்தில்அன்றுகுறை தீர்க்கும் வரம்தரு நாள்.பொன்வேண்டும்,பெண் வேண்டும்,மாடிமனைவேண்டும், புகழ் வேண்டும்,பிறவாமைவேண்டும். என்முறை;உனக்கென்ன வேண்டும்?குழந்தை வரம்..மகனா? மகளா?.முதலில் மகன்.எப்படி?அறிவாய்,அழகாய்.,..தந்தோம். அடுத்து மகள்..எப்படி?.அறிவாய்,அழகாய்..ஆயுள் வேண்டாமா?ஆமாம் ஆயுளும் வேண்டும்.அப்படியேதந்தோம். …
>>கவிதைமதுவருந்திமனமருந்திஉணர்வருந்திஉறவருந்திசுவையருந்திநட்பருந்திநடப்பருந்திரசிப்பருந்திலயிப்பருந்தி அளவற்றஅன்பர்களின்தோழமைச்சுகமருந்திவாழ்வருந்திஎல்லோரையும் கொண்டாடிக் களிப்புறும்வரமருந்தி சிலிர்ப்புற வைத்துப்பெருமிதம்கொள்ள வைத்தீரேமதுவந்தி இயற்கை செய்தகொடுமையென்னஉம்உயிரருந்தி!
>>10/04/26 அன்று வாசித்த மூன்று கவிதைகள் 1.துளி சீரான லயத்தோடுகூரையின் கீழ் முற்றத்தில் விழுந்ததுகைகளை நீட்டி களிக்கிறாள் கயல் தூசி போன மகிழ்ச்சியில் சிலிர்த்த மரம் காற்றின்தடவலுக்கு ஏற்ப நீர் நடனம் ஆடுகிறது.நின்று பார்க்கிறான் ராமன். சுமை தீர்ந்த நிறைவும் பிரிந்த …
>>அந்த கபடமில்லாச் சிரிப்பு போச்சு.!அந்த களங்கமில்லா மனசு போச்சு.!அந்த குறைகாண முடியா குணம் போச்சு..!அந்த உற்சாக வார்த்தை ஊற்று போச்சு..!அந்த மனதார பாராட்டும் வாய் போச்சு..! அந்த மித்ரச் சண்டை போச்சு..!அந்த ஆழ்மனத்து ஆறுதல் போச்சு..!அந்த அற்புத கவிதைச்சோலை போச்சு..!அந்த உடுக்கையிழப்பு …
>>இன்று விருட்சம் சொல்புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் கடவுச்சீட்டு இந்த நிலவொளிஎனது நிழல்களைப்பறித்துக் கொண்டுவிட்டது மெல்ல மெல்லஊர்ந்து வந்துஎன்னைத் தீண்டிவிட்டு செல்கிறதுசிறு வெளிச்சம் விலாசத்தை தொலைத்தகாற்றுஎன் முன்பு மண்டியிட்டுஅழுகிறது யாருமற்ற வனத்தில்மனிதனின் காலடித்தடங்களைதேடிக் கொண்டிருக்கிறேன்வெளியேறும் வழி தெரியாமல் இந்த …
>>1. தண்ணீர்த் தகராறு ராத்திரி இழுத்துவிட்டவாய்க்கால் தண்ணிஅடுத்தவன் வயலுக்குமாத்திப் பாயுது பக்கத்து வயலும்பசியாறப் பார்த்துஇந்த வயலுக்குஎரிச்சல் இல்லை கண்மாய்த் தண்ணீபிரிச்சு விட்டகணக்கு நேரம்தவறிப் பாய்வதால் அறுவடை நெல்லோடகணக்குத் தவறுமுன்னுவாய்க்கால் சண்டைவரப்பிலே நடக்குது 2. வரவும் செலவும் வருவேன் என்று சொல்லிவிட்டுவராமல் இருந்தால் …
>>10-4 2026 அன்று கவிதை வாசிப்போம் நிகழ்வில் வாசித்து அளித்த கவிதைகள் (1)நசையுறு மனம் கேட்பின்…. நசையறு மனம் கேட்டேன்;அது,பிசகு என்றுபின்பே உணர்ந்தேன்.பற்றின்றி பாரில்பிழைக்க முடியுமாமனதில் ஈரமின்றிதரணியில் இருக்கலாகுமாநம்பிக்கை இன்றிநடத்த முடியுமா வாழ்வினை?அன்பின்றி மேதினியில்உயிரொன்று பிழைக்குமா?ஆசையின்றி அவனியில்இசைய இயலுமா?ஈரமின்றி மனதில்கருணை கனியுமா?விழைவின்றி …
>>10-4-26அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட மூன்று கவிதைகள் 1 அவரவர்க்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள்நான்கு மூலைச்சந்திப்பில் ஓரமாக நின்றுகொண்டுஒற்றை விரல் நீட்டிக்காற்றில் கணக்கு போடுபவரை. ஆறேழு காகங்கள்பறந்தலைந்து கொண்டிருக்கையில்அமைதியாக அமர்ந்திருக்கும்காலொடிந்த காக்கையை மல்லிகை ரோஜாமலர்ச் செடிகளுக்கிடையில்மறைந்து வளர்ந்துதலைநீட்டும் முள்செடி ஒன்றை. கோயில் …
>>அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்மாடத்துத் தொட்டிச் செடிகளில்குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்ஜன்னல் திரைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்வாசலில் நுழையும் வெயில்அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்கைகளைத் தூக்கி …
>>அம்மாவின் பூனை அதிரன் பூரணம் என அதற்குபெயர் வைத்திருந்தாள் அம்மா.அவள் என்ன பேசினாலும்புரியும் அதற்குஅதுபோல்அம்மாவிற்குஅதன் “மியாவ்கள்” ஒரு மியாவில் புரிந்து விடும்அதற்கு என்ன வேண்டும் என. சில நேரம் பசிசில நேரம் ஸ்பரிசம். பூரணத்திற்கு நாங்கள் எல்லாம்ஒரு பொருட்டல்லஅம்மா வீட்டில் இல்லை …
>>எத்தனை அவதாரங்கள்எடுப்பாய் பெண்ணே?அடங்கிய மகளாய்ஆரம்பித்த உன்ஒப்பனை அடக்க மனைவியாய்அதட்டும் மகளுக்குஅனுசரணை தாயாய்பேரன் பேத்தி வளர்க்கும்செவிலியாய்காதில் மூக்கில் இருப்பதைக்கழட்டும் போதுஉயிரிருந்தும் சவமாய்!எத்தனை பாத்திரம் ஏற்பாய் பெண்ணே?
>>இருப்பது இரு இட்லிதான்எனத் தெரிந்துபசியேயில்லையெனசிரித்த முகத்துடன்சொல்லி தம்பிக்குகொடுத்த போதேநடிப்பு ஆரம்பம். இது போல நாடகம் எல்லா வீடுகளிலும்நிகழ்ந்து கொண்டேஇருக்கின்றனமேடையில் தவிரமற்ற இடங்களிலும்,ஒப்பனையின்றிஒத்திகையின்றி… 27.03.24) (மீள் பதிவு)இன்று உலக நாடக தினம்.
>>தன்னை அளப்பதற்குத்தயாரித்த அளவுகோலை மற்றவரை அளப்பதற்குமாற்றி முயற்சித்தால் வளையும் நெளியும்ஒடியும் உடையும் அளவுகோல் இழப்பதுஅவரவர் இஷ்டம் அவரவர் கையில்அவரவர் அளவுகோல்
>>சமீபத்தில்வைரமுத்துக்கு ஞானபீட பரிசு தருவதாகக்கூறி உள்ளார்கள்பலர் இவரை வாழ்த்தநேரிடையாகப் படை எடுக்கிறார்கள்யார் யார் என்னைஆதரிக்கிறார்களென்றுபட்டியல் போட்டுத் தெரிவிக்கிறார் வைரமுத்து இன்னும் பலரோஇவருக்குப் பரிசு பெறத் தகுதியில்லைஎன்று முழக்கம் போடுகிறார்கள்கையெழுத்து வாங்கிகடிதம் அனுப்பி உள்ளார்கள் இருக்கட்டும்நான் எந்தக் கட்சி என்றால்என்னை ஒரு பொருட்டாகயாரும்மதித்துக் …
>>1 மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன். இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். …
>>1.மனித யந்திரம் தூறல் மழைபெருமழையாகிவிட்டது.சே!என்ன மழை,இப்படியா?என்றனர் ஒரு சிலர்.பனி காலம் வந்தது,குளிரில் பற்கள் நடனமாடின.இந்த குளிர் தாங்கவில்லை, என்றும் பலர். அருணனுக்கு ரோசம் பொங்கியது.இனி என் காலம்..வெயில் சுட்டு எரித்தது.என்ன கொடுமை என்று வெயிலை வசைபாடினவர்கள் எத்தனையோ!மனித மனம்எதிலும் குறை காண …
>>நுகர்தல் பால் முறுகும் வாசம்.ஏலமும் வெல்லமும் மணக்கிறது.யாரோ அப்பளம் பொரிக்கிறர்கள்எங்கிருந்தோ சின்ன வெங்காயம்எண்ணெய்யில் வதக்கும் நெடிநுகர்தலில் பசியாறும் என்னையும்போ போ என விரட்டுகிறார்கள். தேய்வு நேற்றுக் கூடப் பார்த்தேன்.கடலின் மேலெழுந்து சிரிப்பதைஅலைகள் தொட்டுவிட ஆர்ப்பரிக்கும்இன்ப வாதையைத் தந்த நீஇன்று ஏன் முழுதாக …
>>வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டுபோய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். குகையிலிருந்த …
>>13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் தங்கேஸ்வாசித்த 3 கவிதைகள் கவிதை 1 சொற்கள் உயிர்க்கும் போது வனாந்தரத்தில் அலைந்தஒரு வார்த்தையைப் பிடித்து வந்துகவிதைக்குள் ஏற்றி வைத்தேன்கண் முன்னால் ஒரு காடுமுளைத்து விட்டது. சிறகடிக்கும் சொற்களை என்னால்கட்டுப்படுத்த முடியவில்லை பச்சைக் கடலில் நீந்தும் …
>>இன்று அரங்கில் வாசித்த கவிதைகள். உலகில் அமைதி பரவட்டும்உணர்வில் மனிதம் பெருகட்டும்அலறும் குரல்கள் இல்லாதஅகில மாக விளங்கட்டும்புலரும் பொழுதே புவிநிமிரபூபா ளமிசை ஒலிக்கட்டும்அலையும் சக்தி ஆக்கமுறஅறிவை அன்பே வெல்லட்டும்.(12.03.2026) பிறந்த மேனியாய்இருந்த மேனியைத்தாங்கிய தூளியே ! அம்மாவின் புடவைஅதுவே எனதுமுதல் உடைமை …
>>13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள் 1.எழுதி வைப்பேன் இந்த மழைத்துளிஇதோ வந்துகொண்டிருக்கிறது வானம் எனும் ஊரிலிருந்துநெடுந்தொலைவு பயணம் செய்துமண் நோக்கி வரும் இதைவரவேற்க நினைக்கிறேன். மனத்துள் மத்தாப்பை ஒளிரச்செய்துமகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்உயிர்நிலைக்காக நான்உவகையுடன் காத்திருக்கிறேன். …
>>13-3-2026, இணைய கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதைகள் (1) பகிர்தல் பகிர்தலில் எப்போதும் பதற்றம்! பாத்திரம் அறிந்துதான் பகிர்கிறேனா? பகிர்ந்தவர் பெற்றதை நிறைவாக நினைக்கிறாரா! தேவை அறிந்துதான் பகிர்ந்துள்ளேனா? என்னை எவராவதுகண்காணிக்கிறார்களா? என் மதிப்பு உயர்கிறதா? இதை எல்லாம் மீறிஇன்னொன்றும் உள்ளதே! அடுத்த …
>>இன்று விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வாசித்த கவிதைகள். விருந்தினர் மனம் களிக்கஇன்சொல்இன்முகம் இனிய வரவேற்பு.. காலையில் கதிரவனைப்பூக்கள்இதழ்விரித்துபுன்னகை புரிந்து புதுமணம்வீசி வரவேற்கும். விழாக்கள் என்றால் மேடையும்அரங்கும்நிறைக்கும் அன்பர்களுக்குஒருவர் உரை அதுவரவேற்புரை. வீட்டில் ஓர் அறை அது பேர்பெரும்வரவேற்பரை என்று. காலையிளம் பொழுதைக் …
>>உலகில் அமைதி பரவட்டும்உணர்வில் மனிதம் பெருகட்டும்அலறும் குரல்கள் இல்லாதஅகில மாக விளங்கட்டும்புலரும் பொழுதே புவிநிமிரபூபா ளமிசை ஒலிக்கட்டும்அலையும் சக்தி ஆக்கமுறஅறிவை அன்பே வெல்லட்டும்.
>>கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் உயிர்மெய் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம்
>>பொல பொலவெனபொழுது விடிகையிலேஎழு எழு எனமனது கூறும்படு படுவெனஉடல் கெஞ்சும்கம கமவெனகாலை காஃபிமணக்கையிலேநம நமவெனநா கேட்கையிலேகிடு கிடுவெனஎழத்தான் வேண்டும் ! 22/12/2025 எல்.ரகோத்தமன்/மழை மேகம் – விருட்சம் நாளிதழ்
>>கணிக்க முடியாமல்கனியாத நீர் துளிகளைசுமந்த மேகக்கூட்டம்அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன வானில்! எப்போது கனியும்!எங்கு போய் கொட்டித்தீர்க்கும்? சில்லென்ற மழைத் தூரல்காற்றில் தவழும் மண்வாசனைவானவில்லின் வசீகரம்மழை ஓய்ந்த அமைதிஈரம் கலந்த குளிர் காற்றுபச்சிலை சொரியம் நீர் முத்துகள்சிறகு சிலிர்க்கும் பறவைகள்விரிந்த கருங்குடைப் பூக்கள் …
>>அங்கிங்கெனாத படிஎங்கும் நிறைந்தவனாம்! பாமாலை பல பாடிமூச்சை உள்ளடக்கிபூக்களால் அர்ச்சித்துகாணக் கிடைக்காதவன், தெருவோரம் துவண்டுபடுத்திருந்த பாட்டிக்குப்பசியாற பணம்அளித்தபின் அவள் வாயிலிருந்துவந்த வார்த்தை ‘தெய்வமே’..! என்னுளிருக்கும்தெய்வத்தை இன்று நான்கண்டுகொண்டேன்! தெய்வமே! உனக்கு நன்றி! -.
>>கிழக்கு வானைச் சிவப்பாக்கிக்கீறி மெல்ல வருகிறவன்பழக்க மான நம்கதிரோன்பார்க்கப் பார்க்கப் பரவசந்தான்தழைக்க வேண்டும் தரணியெனதகத கவென ஒளிபொழிவான்உழைக்க ஊக்க மருந்தாகிஉயிருக் கேற்ற சூடாவான் குப்பை செத்தை அழுக்கெல்லாம்குறைக ளின்றிப் பொசுக்கிடுவான்துப்பும் சுடரைப் பதமாகபுல்லும் கல்லும் கொளவைப்பான்உப்புச் சுவையாம் கடல்நீரைஉயரே மாற்றி மழைபொழிவான்எப்பு …
>>என்னை இனிமேல் அம்மாஏமாற்ற முடியாது, ஏனென்றால்நான் சிறுவன் அல்லஎன்னை இனிமேல் தத்துவங்களும்அரசியலும் ஏமாற்ற முடியாது.ஏனென்றால்நான் இளைஞன் அல்லஎன்னை இனிமேல் மதமும்கலையும்ஏமாற்ற முடியாது. ஏனென்றால்நான் நடுத்தர வயதினன் அல்ல.என்னை இனிமேல்மாத்திரைகளும் மரியாதைகளும்ஏமாற்ற முடியாது ஏனென்றால்நான் முதியவனல்ல. நான்இப்போது மூப்பைக் கடந்தவன்,சின்னஞ்சிறு குழந்தையைப் போல.யாராவது …
>>எங்குசென்று விடும்என் தாய் மொழி அது என்னஎவருக்கேனும்பொறாமைத் தூண்டபுதையல் பொருளா பொன்னாபரணமா எவரும் களவாடகாலச் சுவடியா சொத்து பத்திரமாவண்டி வாகனமா அல்லது ஹார்மோன் மாற்றத்தில்குணம் மாறும்நான் பெற்றபிள்ளைகளா அது என்னோடுஎப்போதும்எந்த சொல் ஆர்ப்பாட்டமும்இல்லாமல்கைத்தறி புடவைகதர் புடவைஆடை தாரியாய்எளிமை இலச்சினையாய்என்னுள் என்றென்றும்எனக்கு உயிரூட்டியஅம்மனாய்என்னுள்சம்மணமிட்டுகுடியிருக்கும்என் …
>>கணக்கிட்டு வாழச் சான்றோர்இட்டவடிவியல்கள் இவை. சதுரங்கள் சமத்துவமானால்செவ்வகங்கள்அளவான இல்லறம் காட்டும்.நெடியவைபெற்றவராக குறுகியவைஆகாதோபெற்றவை. முக்கோணம் முன்னர்குசேலர்வாழ்வு கூடாதெனக் காட்டியகுறியீடல்லவா? சதுரம் நாற்கரச்சாலைஆகிடஇன்று எண்கோணச் சாலைவறியவர்வாழ்வில் தேனும் பாலும்ஓடச்செய்யுமாம். செவ்வகத்தில் சிலிர்த்தபணத்தாளும்ஓரிரவுவெறுந்தாள் ஆனது. சதுரமாய் வாழ்ந்துசெவ்வகமாய்உயர்ந்து,சமுதாயம் உரம் பெறவரமொன்று‘கேள் ‘ என்றே காலம்சொல்கிறது. இருட்டோடு …
>>13.02.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த மீ விஸ்வநாதன் கவிதைகள் வீண் என்பதே இல்லை வீசிய எச்சில் இலைகளேதெருநாய், காக்கை, குருவி,எறும்புகளுக்கு அறுசுவை உணவு! விலங்குகள் பறவைகளின் கழிவேகாடுகள் செழிக்க உதவும் உரம்! நகர வளர்ச்சியில்ஏரி, குளங்களை மூடியகுப்பை …
>>தமிழுக்குத் தன்னெளிய தொண்டினைச் செய்தேஇமைப்போது மோயா திருந்தார் – தமையோர்எளியனாய் எண்ணி உவேசா தமிழாய்பளிச்சென ஆனார் பரந்து.(1073) 19.02.2026 (இன்று (19.02.1855) தமிழ்த் தாத்தா உ.வே. சா. அவர்களின் பிறந்த தினம்)
>>விருட்சம் கவியரங்க நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள் என்னை நான்அப்படி நினைத்துக் கொண்டேன்என் இரு கண்களும் கூடஎன்னை ஏமாற்றிவிட்டனஏதோவொரு விதத்தில்துயரம் என்னை வந்தடைந்ததுஇப்படியாக கால்நூற்றாண்டுக்காலம்கழிந்ததுபிறகு ஒரு மழைநாளில்சிலுசிலுத்த கிளைகளினூடேஒரு காகம் சென்று மறைந்ததுமழையை பிரதியெடுத்தகாகத்தின் பாதங்கள்பழுப்பேறி இருந்தனஇதுவரை நான் பார்த்தகாகத்தின் பிம்பங்களோடுஅதனை …
>>13/2/26 இணையக் கவியரங்கம் 1.மறதி மதிப் பெண்ணுக்குஅலைந்துரேங்குக்குத் திரிந்துதேர்வு எனும்மலை ஏறிவேலைக்கு அலைந்துநிரந்திரத்திற்குத்தவமிருந்துபதவி உயர்வுக்குப்பாடாய்க்கிடந்துமாற்றல் கிடைக்கக்காவடி எடுத்துசொந்த ஊர் வந்துநொந்து நூலாகிகெளரமாய்ப்பணிஓய்வுபெற்றிடத் தவம் கிடந்துகாலம் கழித்தசொந்தக் கதையில்மனிதனாய் வாழ்வதுமட்டும் மறைந்து போனது. 2.நெருடல் தமக்கு விளங்கா ஒன்றைவிளங்கியதாய்ப் பாவிக்கிறார்கள்தெளியாத ஒரு விஷயத்தைத்தெரிந்த …
>>இணையதளத்தில் நான் வாசித்த 3 கவிதைகள் பின் வரும். கட்டிடுவோம் ஒரு காதல் கோட்டை.காலமெனும்j காற்றினிலே ஆடிடுவோம் பொன்னூஞ்சல்! பாலுடன் தேனாக கலந்திடுவோம்,உருகிடுவோம் மெழுகெனதினமும் காதலில்! காத்திருப்போம்,சாரலில் நனைந்திருப்போம்,அணைத்திருப்போம் ,நம்மை மறந்திருப்போம்! ஓருயிர்,ஈருடல் என கட்டுண்டோம்,கரும்பாக இனிக்கும் காதல் கனி. காக்கைகள் …
>>எனது கவிதை மின்புத்தகங்களில் இருந்து சில கவிதைகள். இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்தவை . 1. இருண்ட குகை இருண்ட குகைக்குள்எத்தனை உணர்ச்சிகள் சில வெளியே வரும்சில அமுங்கிக் கிடக்கும் கனவு வெளிச்சத்தைக்கண்ட பின்பு அத்தனையும் எழுந்துஆட்டம் போடும் விடிந்த …
>>13.02 26 அன்று இணையதளத்தில் நான் வாசித்த கவிதை உனக்காக நான் இருக்கிறேன்என்ற சொல்உறங்கிக்கொண்டிருந்ததுநீ மட்டும் போதும்என்ற சொல்ஊமையாகி அழுதது உன்னை மிகவும் பிடிக்கும்என்ற சொல்தன்முனைப்பால் துவண்டதுமன்னித்து விடு என்ற சொல்மௌனித்துக் கிடந்ததுஉனக்கு நன்றி என்ற சொல்ஊருக்கு வெளியில் நின்றது என்னை …
>>– மெனக்கெடல்யாவிற்கும்இயைந்துபோனஎங்களுக்குசொல்லப்பட்டிருந்தது‘மதிக்குமொருவருக்குதரிக்கும் கிரீடமாகப் போகிறீர்களென’வண்ணங்களில்வார்த்த வார்த்தைகளால்விருப்பங்கள் மேவி நிற்க. காணாதகாத்திருப்பில்காலத்தை தின்றுசாரமற்றசந்தர்ப்பமொன்றில்நீங்கள்சொல்கிறீர்கள்நெகிழிப் பூக்களால்நிற்கும் கூடை என்று. நீங்களாகஇருக்க வேண்டுமெனநிம்மதி கொள்ளநினைக்கும் பொழுதெல்லாம்நகர்ந்து கொண்டேஇருக்கிறீர்கள்நாளும் பொழுதும்தாழாத துயரத்தில்தள்ளியவாறு.
>>வீதியோரம் விரிந்து கிடந்த பூக்கள் ,என்வீட்டின் முன்னறையில்வண்ணங்களை வாரி வீச,மனம்சொன்னது“உன் கைக்கு ரசனை இருக்கு”! 11.02.2026
>>மெல்லிசை மலரும் மஞ்சள் செம்பூவின் சிரிப்பு,மனமெல்லாம் மணம் வீசும் கைவினையின் அழகுவண்ணத் துளிகள் வார்த்த மாய உலகம் இது,வாழ்வின் மேசை மீது வந்த வசந்தம் இது.நாணல் போல நெளியும் பச்சைத் தண்டு அழகு,நாடோடும் நெஞ்சை நிமிர்த்தும் பூவின் விழுது.சிறு கரங்களில் பிறந்த …
>>தமிழில் : க. மோகனரங்கன் பார்ப்பவர்,உற்று நோக்குபவர்,மேலோட்டமாகப் படிப்பவர், பக்கங்களைத் தாண்டிப் போகிறவர்,விரலால் தாள்களைத் திருப்புபவர், நுணுக்கமாகப் படிப்பவர்,அன்றைய வாசிப்புத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்பவர், பென்சிலைக் கடிக்கும் வழக்கமுள்ளவர்,குறிப்பெடுப்பவர்,சரி மற்றும் தவறை குறிக்கும் குறிகளால்பக்க ஓரங்களை நிரப்புகிறவர்,முதல் முறை படிப்பவர் அல்லது …
>>ஒருத்தர் வீட்டிற்குச் சென்றேன்அங்குப் பார்த்தகைவினைப் பொருளைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன்திறமை இருந்தால்எல்லாம் முடியும்எனக்கும்திறமை இருக்கிறதுகவிதை எழுதுகிறேன்ஆனால்யாரும் பார்ப்பதில்லைபடிப்பதில்லை
>>அப்பா இல்லாதபிள்ளைகளின் முகத்தில்அடுத்தவர் கண்களுக்குஅவ்வளவாகப் புலப்படாதஅருவமானதொருஅநாதைத்தனம்அப்பிக்கொண்டிருக்கும்.முதல் பார்வையிலேயேஅதை அறிந்தவர்களாகஅரவணைத்துக் கொள்கிறஅபூர்வமான பெண்கள்இப்போதும் இருக்கிறார்கள்.அவர்களெல்லாம்அத்தனை சிறிய வயதிலேயேஎத்தனையோ பெரிய குழந்தைகளுக்குஅன்னையர் ஆகிவிடுகிறார்கள்
>>காரிருளைக் கண்டுவிடிகாலை எள்ளி நகையாடியதாம் !உன்னைக் கண்டு நடுங்குவோர் பல பேர் !என்னைக் கண்டு மகிழ்வார் எண்ணிக்கை எண்ணிலடங்கா !இறுமாப்புடன் மார் தட்டியது விடியல் ;உனக்குத் தெரியுமா, என்னாலே ஜனனம்உன்னாலே தகனம் , அமைதியான பதில்காரிருளிடமிருந்து !விடியல் வெட்கித் தலை குனிந்தது …
>>நான் உன்னிடம் வெற்றுடம்பாய் வருகிறேன்நீ உயிரூற்றி விடுகிறாய் என்உணர்வோடுக் கலக்கிறாய் நான் காட்டுவழிப்பயணம்களைத்துப்போகுந் தருணம்நீ காட்டுமல்லி இறைத்துச்செல்கிறாய்.என் காலோடு கவிதைப்பேசுகிறாய். நான் பறவையானேன்உறவுகளோடு உல்லாசித்திருக்கையில்அங்கே ஆள்காட்டிப் பறவையாய் நீ. ஒரே ஒரு மூக்குத்தி மினுக்கியபடி கேட்டேன்.நீ ஓராயிரம் நட்சத்திரங்களைநசுங்காமல் என் கைகளில் …
>>பார்க்கும் போதேல்லாம்ஏதாவது நிகழ்ந்து விடுகிறது..நினைக்கும் போதெல்லாம்ஏதாவது நடந்து விடுகிறது..பார்க்காத போதெல்லாம்என்னவெல்லாமோ நிகழ்கிறது..நினைக்காத போதெல்லாம்ஏதேதோ நடக்கிறது..அதனாலேபார்த்தும் பார்க்காதபடியேநடக்கிறேன்..நினைத்தும் நினைக்காதபடியேநிகழ்கிறேன்..என் மனசு அமைக்கும்நிகழ்தகவில்எது நடந்தாலும்என்ன நிகழ்ந்தாலும்மிச்சமிருப்பது நானும்..என் ஒற்றை நம்பிக்கையும்!
>>மூன்றாவது முறையாகஅந்த நகரத்துக்குப் போயிருந்தேன்சவால்போலகடும் வெயிலுக்கான குடையோடுஅலைந்து திரிந்ததில்மர்மங்கள் லேசாய் துவங்கின.நகரத்துக்கு ஊடாகஇரண்டோ மூன்றோபுகைவண்டி வழிப்பாதைகள்பிரிந்து செல்கின்றன.குறுக்கு நெடுக்கமாய் திரியும்பேருந்துகள்எங்கு செல்கின்றனபழக்கங்களை எப்படி இவைஜனங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றனஎன்பதும் புரிந்தது. புகைவண்டி நிலையங்களில்ஜனங்கள்தட்டையான மரக்கிளையாய்நிலையத்துக்கு வெளியேயும்நேர் தலைகீழான ஒரு மரக்கிளையாய்நிலையத்துக்கு உள்ளேயும் செல்கிறார்கள்பின்னலான …
>>வரவும் செலவும் வாழ்வில் சகஜம்கஷ்டம் நஷ்டம்இரு சக்கரம் போல்இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல்மாறி மாறி வரும்காலங்கள் எனவும்எதிலும் சிரிக்கத்தெரியவேண்டும்.பிறர் சிரிக்க வாழ்வது ஈனம். ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ? – விருட்சம் நாளிதழ்
>>என் வேரடி மண்ணைகெல்லி எறிந்தால்துவள்பவனா நான்..? என் ஆணிவேரின் கீழ்அமில மழை பொழிந்தால்கருகி விடுபவனா நான்..? என் கிளைகளைஉங்கள் பராக்கிரமத்தால்வெட்டி வீழ்த்தினால்அடையாளம் தொலைப்பவனா நான்..? என் தளிர்களைப் பொசுக்கிதீயிட்டு வைத்தால்வெந்துவிடுபவனோ நான்..? நான் மனிதர்களுள் சந்நதன்…!நான் பறவைகளுள் ஃபீனிக்ஸ்..!நான் வாத்தியங்களில் உறுமி …
>>உன் மாபெரும் ஈர்ப்புக்குஎதிர்ப்பு தெரிவிக்க இயலாமல்உனது அச்சினை நோக்கி வேகமாக நகர்ந்து வரும்சின்னஞ் சிறு கிரகம் நான் ஒரு வாய்ப் புல்லுக்குமுகத்தை உரசியபடியேஉன் கால்களை குறுக்கும்மறுக்குமாக சுற்றி வரும்சிரிய வெள்ளாடு நான் யோசிக்காமல் எழுதத் தொடங்கிமூச்சு விட முடியாமல் சிக்கித் தவிக்கும்ஒரு …
>>பறவைக்கூட்டம் கலைத்துப்போட்ட வெளியைஒன்றுசேர்க்கப்பார்க்கிறது…வட்டமிடும் கழுகு. பறவைகள் கடந்ததும்அநாதையாய் உணரும் வானத்தைச் சிவக்கச்செய்கிறதுகீழிறங்கும் சூரியன். ஒற்றைக்குச்சியில் தவம் செய்யும் மீன்கொத்தியை…சீண்டிப்பார்த்துவிட்டுப்போகிறது ஊசித்தட்டான். கொம்பேறிமூக்கனை கண்டதும் பதறிப்பறக்கும்பூஞ்சிட்டைப் பிரிந்து தவிக்கிறது செம்பருத்தி. அலகில்தேங்காய்நாரினைப்பற்றிகூடுகட்ட அலைகிறது…சிட்டுக்குருவி. கவிதைஎழுதவரவில்லையென்று….தோட்டத்திற்கு வந்தால்என்னைச்சுற்றி எத்தனை கவிதைகள். வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்.. – …
>>முத்துத் தமிழ் சந்தம் பாடிடமுந்தித் திரு வருளைப் பொழிந்திடும்சிந்துத் தமிழ் தந்தாய் இங்கு அருள்வாயே.! நித்தம் புதுக் கவிதைகள் பாடியும்..நீடுத் தமிழ்க் கவியால் பரவியும்..நின்னைச் சரண் அடைந்தேன் இங்கு வருவாயே.! சித்தம் தனில் உந்தன் நினைவுகள்..சிந்துக் கவி சிந்தும் பறவைகள்..நித்தம் உனைத் …
>>அடிப்பட்ட காலிடம்அடுத்த கால் கேட்டதுவலிக்கிறதா என்று இந்த வலியை விடஎனக்கும் சேர்த்து நீ படும்துன்பம்தான் அதிகமாய்வலிக்கிறது என்றதுஅடிப்பட்ட கால். அதே நேரம்அடிப்பட்டவன் குரல்போதும் என்றதுஅவன் மனைவியின் குரல்இன்னும் ஒரு வாய்தான்சாப்பிடுங்கள் என்றது.
>>மரம் சும்மா இருந்தாலும்காற்று அதை விடுவதில்லை துளிராயாய்இலையாய்மொக்காய்பூவாய்கனியாய்தானாய் உதிரும் மரமும்உதிர்க்கும் வேர்கள் உள்நோக்கிஊடுருவும்கிளைக்கும்ஆழமாய் படரும்… உயிர்ப்பதுவெளியிலாஉள்ளேயா… மரிப்பதேஉயிர்ப்பதுதானோ …
>>இன்றைய நாள்நாம் கொண்டாடும்குடியரசு தின நாள் பள்ளி மாணவர்கள் முகத்தில்மகிழ்ச்சி கரை புரண்டோடும் நாள் வங்கி ஊழியர்கள்அப்பாடாஒரு நாள் லீவுஎன்று முணுமுணுக்கும்நாள் நான் இன்னும்பெரியவனாகவில்லைஎங்கள் பள்ளிக்கூடம்வந்துஎங்கள் மாணவர்களைப்பார்த்துபேசுங்கள் என்றுயாரும் கூப்பிடவில்லை ஆனால்இன்று மகத்தான நாள்
>>பேச்சு என் கலையானதுஅதுவே என் அடையாளமானது.பேச்சு என் விருப்பமானதுபலருக்கு அது உயர்வு தந்தது.பேச்சு பல செய்திகள் சொன்னதுஅந்தக் குரல் பலரை ஈர்த்தது.பேச்சு பல இடம் அழைத்துப் போனதுஅதனால் என் உலகம் விரிந்தது.பேச்சு எப்போதும் பெண்களை நோக்கியதுநட்பும்,உறவும் கூட்டமாய்ச் சேர்ந்தது.நாக்கும் வாக்கும் நல்லதே …
>>டிசம்பர் மாத கவியரங்கத்திற்கு என் கவிதைகள்🏵️கவிதை-1பிரிந்த உறவுகள் பிரிந்த உறவுகள்பின்னும் சேருமா? மறந்த நினைவுகள்மறுபடியும் தோன்றுமா? முந்தைய நாளின் கைப்புபிந்தைய நாளில் மாறுமா? நைந்த உறவுகளை தைக்ககனத்த நூலால் ஆகுமா? கலைந்த கனவுகள்காணாமல் போனதே. நலிந்த நம்பிக்கைமெலிந்தே போனதே. வலிந்து பிணைத்துஇணைத்தல் …
>>தானிருக்கும் தான் தானல்ல அறிவிலேன் தானற்ற தான்தான்தான் எனும் தெளிவிலேன் தன்னுள் தானற்ற தான் தேடிதணலாய் தீகிறேன்.
>>அடர்ந்த கருமைக்கும்,பூரண வெண்மைக்கும்இடையேதான்ஊசலாடி நகர்கிறதுவாழ்க்கை. பூச்சற்ற உண்மையைப்புறந்தள்ளும் மனம்பூசிய பொய்யைஏனோ நாடுகிறது. பூசி மெழுகிஒரு பொய்யை உருவாக்கபூசாத உண்மையொன்றுதேவைப்படுகிறது. பழத்துக்கு உள்ளிருக்கும்விதை போல,ஒளிக்குள் மறைந்திருக்கும்இருள் போல,ஒவ்வொரு பொய்க்குள்ளும்ஒளிந்து இருக்கிறதுஓர் உண்மை. பூச்சற்ற சுவர்தொடக்கத்தை,உழைப்பை,செல்ல வேண்டிய தூரத்தைஎன உண்மைகளைநினைவுபடுத்தும் மணியாய்ஒலித்துக்கொண்டேஇருக்கிறது. பூச்சு திர்ந்த …
>>இரண்டின் கூட்டுவடிவம்வாஜ்பாய்கொள்கையில் தலைவன்குணத்தில் குழந்தைஅவர்பிரதமராக இருந்தபொழுதுஇந்தியிலிருந்துதமிழில் மொழிபெயர்க்கப்பட்டஅவரது கவிதை நூலைபிரதமர் இல்லத்தில்வெளியிட்டுப் பேசினேன்“நீங்கள் விரும்பினால்என்றேனும் ஒருநாள்முன்னாள் பிரதமர் ஆகலாம்;ஆனால், நீங்கள் என்ன முயன்றாலும்முன்னாள் கவிஞர் ஆகமுடியாது”என்றேன்“என்னைச் சிகரத்தில் ஏற்றாதீர்கள்அங்கே எனக்குஇருக்கையிட இடமிருக்காது”என்ற அவரது கவிதையைமேற்கோள் காட்டினேன்பின்னொரு சந்திப்பில்இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டஎன் கவிதைகளைஅவர் வாய்விட்டுப் …
>>என் பண்ணை வீ்ட்டுத் திண்ணைஆசையாய் அருமையாய்பார்த்துக் கட்டிய சிவப்புத் தரையில்அமரும் சுகமும் அது தரும் இதமும்பாட்டுக் கேட்க சில நாட்கள்படித்து மகிழ சில சமயம்பார்த்து ரசிக்க பல தருணம்கண் மூடி தியானம் செய்ய ஒரு நேரம்மடித்த கையில் படுத்து உறங்கவட்டமாக உட்கார்ந்து …
>>19/12/25இணையக்கவியரங்கம் கவிதை 1 அருளும் பொருளும் மிக மிகச்சரிபொருளில்லார்க்குஇவ்வுலகில்லைஅருளில்லார்க்கு அவ்வுலகமில்லைவள்ளுவர் வாய்ச்சொல்பொய்யாக இருக்காதுபொருள் எம்மட்டுநின் வசம்கையிருப்பு அறிவிக்கும்அருளின் இருப்புயாருமே அறியார்அருள் என்பது அன்புஈன் குழவிஅன்பு கனிந்தே அருள் வசமாகும்அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்குசொல்லேன் நீகனிந்த அன்பே அருள்அருள் மட்டுமேஅவ்வுலகில் செலவாணியாகும்பிறவன்றுஅடித்துச் சொல்கிறது …
>>சமீபத்தில் நடந்த கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள் 1.ஒரு கவிதை காலையில்எழுந்தவுடன்தூக்கக் கலக்கம்என்னை விட்டுப்போவதற்குள்ஒரு கவிதைஎழுதிப் பார்த்தேன்சுறுசுறுப்பாய் மாறி விட்டேன்நான் இப்போதுஊருக்குக் கிளம்புகிறேன் 19.04.2025 2.தீராத துயரம் அந்தப் பெண்மணிகண்ணீரில்தோய்ந்திருந்தாள் அவள் பிரச்சினைஎன்றும் தீர்வே போவதில்லை சும்மா நடிக்கிறான்ஒற்றுமையாய் இருப்பதுபோல் …
>>19-12-25 –இல் வாசித்த 4 கவிதைகளையும் அனுப்பி இருக்கிறேன். 1. உற்சாகம் காலையில் எழுந்ததும் மனைவிகாப்பி இல்லையென்றாள்.காப்பிப்பொடி தீர்ந்துவிட்டதாம்.எங்கே வரும் உற்சாகம்? காய்கறிக்காரி வந்தார்காய்கறிகள் எல்லாமும்கால்கிலோ இருபது ரூபாய்எங்கே வரும் உற்சாகம்? செய்தித்தாள் விழுந்ததுசேர்த்தெடுத்துப் படித்தேன் முதல் பக்கம் நகைக் கொள்ளைஇரண்டாம் …
>>அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது ஐந்து கவிதைகள் காலாற நடக்கும் கரை———உழைத்துக் களைத்த உடல்ஓய்ந்து படுப்பதற்கும் எழுந்து நடப்பதற்கும்ஏற்பட்ட கடற்கரை காதலர் சேர்வதற்கும்கடும்தீனி அரைப்பதற்கும் மாறிய கோலத்தால்மண் வாசம் போனது கரை தாண்ட முடியாதஅலையெல்லாம் நுரை …
>>இன்றைய (19.12.2025) இணைய வழிக் கவியரங்கில் வாசித்த கவிதை.1 மழைபெய்து கொண்டிருக்கும் போதெல்லாம்உள்ளிருக்கும் சின்னப் பெண்துள்ளலுடன்வெளியில் வந்து விடுகிறாள்முழுதுமாய் ஆடைகள் நனையபாதகொலுசுகள் மண் அப்பிக்கொள்ளமுகமெங்கும் பூத்துக் கிடக்கும் நீரின் துளிகளுடன்இங்கும் அங்கும் அலைந்துமழையின் மீதான பிரியத்தைவெளிப்படுத்துகிறாள்புறவெம்மையின் தாக்கத்தில்காய்ந்து விடாமல்அந்த ஏகாந்த ஈரத்தைத்தக்க …
>>இன்று விளையாட்டாக Google இன் AI tool ஆன Gemeni இடம் கிரிக்கெட்டைப் பற்றி வெண்பா எழுத முடியுமா என்று கேட்டதற்கு அது அளித்த இரண்டு வெண்பாக்கள் இவை குறள் வெண்பா : மட்டை கழன்றாட வையமே போற்றிடசிட்டாய்ப் பறக்கும் பந்து. …
>>14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த 4வது கவிதை மயங்கி விழுந்த அம்மாபக்கத்து மருத்துவமனையில்அவசரப் பிரிவில் அனுமதிஉறவினர் அனைவரும்வெளியே நிக்க விட்டுபின்னர் உட்கார வைத்துமருத்துவம் பார்த்தனர்மகன் மட்டும் உள்ளேசென்று பார்க்க அனுமதி தந்தனர்அழுதபடி வெளியே வந்தமகனை உறவினர்சூழ்ந்து …
>>கை வளையலில் இருந்துஉதிர்ந்த வெண்முத்துக்கள் போல்முத்து முத்து சொற்கள் கவிதையாமதுஅழகு . கருமேகக் கூந்தலில் ஒற்றை நிலவாகவெள்ளை ரோஜாபுன்னகை சிந்தியது ஓர் அழகு. தேவியோ ,தேவதையோ சொல் நீயே,மேவிய காதலால்தான் அப்படியோ? தமிழ்த் தேன் ஊறும் இதழ்கள்பருகிட அலைபாயும் வண்டினம் நான். …
>>அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த கவிதை எண் 3 யாரும் தவறு செய்யவில்லைஆயினும்அனைவரையும் தலை குனிய வைத்ததுசெல்போன்கள்.
>>வால்ட் விட்மன் பார்த்துவசன கவிதை எழுதிப் பார்த்தார் பாரதி பாரதி இறந்த பிறகுபத்தாண்டு கழித்துஅதுதான் க.நா.சு மனதில் பொறித் தட்டியது வேறுவகைப் பாவாகபுதுக்கவிதை மலர்ந்தது க.நா.சு காட்டிய வழிதான்புதுக்கவிதை பாரதியார் எழுதியவசன கவிதையை மறந்து விட்டோம் ஆனால் புதுக் கவிதையைக் கண்டுபிடித்தகநாசு …
>>மிடுக்கான உடையுடன்முப்பது வருடம் முன்கிடைத்த வேலைக்கு ஓய்வு பயமாய்ச் செய்த வேலைகளைநயமாய்ச் செய்யத் தொடங்கும் போதுகிடைத்து விட்ட ஓய்வு கண்டாலே கலங்க வைக்கும்அரக்க அதிகாரிகளின்ஆக்கிரமிப்பிலிருந்து ஓய்வு கைகள் உதடு வயிறு சுடசுட்டும் பாதி வெந்தசோற்றிலிருந்து ஓய்வு ரயில் நெரிசல்பீடி வியர்வை நாற்றம்அட்டெண்டன்ஸ் …
>>எட்டாத உயரத்தில்நீ இருந்தாலும்// தீபங்களின் நடுவில்மிளிரும் நிலவே// திக்கெட்டும் ஒளிவீசும்தீபங்களின் சுடரொளியில்// தன்னை உருக்கிஇருளைப் போக்கிடும்// வெண்பனிக் காலத்திலும்மின்மினியாய் ஜொலிக்கும்// வட்ட நிலவேவண்ண, வண்ண// உருவங்களாய் தோன்றும்தீபமாக நீ// எரியும் போதும்.,இருள் உலகையே // மறைக்க நீயோகோபுரத்தில் தீபமாய்// நிலாப்பெண் ஏற்றிவைத்த …
>>14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை5 இத்தனை நேரம் இறுமாப்புடன் இதழோரம் புன்னகையுடன்இளநடை போட்டவர்கள்இப்போது ஒதுங்க இடம்இதோ தேடுகிறார்கள்அவசரம் அவசரமாக வீதிக் கடைக்காரர்கள்நிர்வாணப் பொருள்களுக்குஆடை உடுத்துகிறார்கள்படித்ததெலாம் மறந்துவிட்டால் பாதையிலேஎதை வைப்பதெனும்பதைபதைப்பில் சில பேர்கள்முதலாளி பூதத்தின் வாயில் …
>>கவிதை நேரத்தில் படித்த என் 4 கவிதைகள் கீழே தொலை தூர நடை பயணம்வறண்ட நீர் நிலைபிளந்த நிலம்கரடு முரடான பாதைவெட்டப்பட்ட மரங்கள்பசுமையற்ற மலைநடந்து கொண்டே இருந்தேன்தூரத்தில் பார்வையற்ற மனிதன்முடவனுக்கு உணவளிக்கும் காட்சிமனித மனதில் வற்றாத ஈரம்இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்நடை …
>>நேற்றோடு முடிந்துவிட்டதுஏவி.எம்.சரவணன் அவர்களின்பெளதிக வாழ்க்கைஇனிநினைவின் வெளிகளில்தான்அவரைச் சந்திக்க முடியும்ஒரு சம்பவம் சொல்கிறேன்:சிவாஜி படத்திற்குப்பாட்டெழுதியதற்கு ஊதியமாகஎனக்கொரு காசோலை கொடுத்தார்காசோலைகளை நான்பிரித்துப் பார்ப்பதில்லை;பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்சில வாரங்களுக்குப் பிறகுவேறொரு பாட்டுப் பதிவுக்காகஏவி.எம் கலைக்கூடத்திற்குள்நுழைகிறது என் கார்தன் அறையின்கண்ணாடி வழியேஎன் காரைப் பார்த்தசரவணன் அவர்கள்வீடு திரும்பும்போதுதன்னைப் பார்த்துச் …
>>14-11 2025 அன்று அழகிய சிங்கரின் இணைய கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட என் 6 கவிதைகள். நான் ஓரு மனிதி(1)நான் வெறும் மனிதிஒரு கண்ணசைவுஓரு கையசைப்புமுகத்தில் ஒரு சுளிப்புஉதட்டின் ஒரு சுழிப்புபோதும் போதும்பஞ்சணைந்த தீ போல்பலதும் ஏன் பகருகிறாய்கிளை தாவும் கடுவனோசினம் கொண்டுசீறும் …
>>14.11.25 கவியரங்கத்தில் வாசித்த கவிதைகள் பிறப்பு என்பதுசக்தியில் கலப்பது இறப்பு என்பதுசிவத்தில் கலப்பது பிறப்பும் இறப்பும்சக்தியும் சிவமும் இதற்கு இடையில்எத்தனை பிறவி பிறவியை அறுப்பதேஆறாம் அறிவு 4 கவிதை இதழ்கள் – காதல் தடவியகவிதை கேட்டாள் இதழைத் தடவிஇதுதான் என்றான் பொய்க் …
>>“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”தன்னம்பிக்கையின் இலக்கணம் இதுவோ?செந்தமிழ்க்கவிஞன் காட்டிய வழியோ? தன்னை நேசித்தால் தன்னை மதித்தால்தன்னம்பிக்கை தானே வளருமோ?தன் பலமறிந்து முயன்று பார்த்தால்தன்னால் இயலாத செயலும் உண்டோ? தன்னம்பிக்கை இருந்தால் போதும்உடல் ஊனங்கள் மறைந்தே போகும்தன்னம்பிக்கை இல்லாது …
>>14.11.2025 அன்று இணைய வழி கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதை கல் உரசித்தான் கீறல்விழுந்திருக்க வேண்டுமென்பதில்லைசமயத்தில் விட்டெறிந்தசொல்லாலும் கூட இருக்கலாம் தனிமையில் முகம்பார்த்தக்கொண்டிருக்கும் போதுசட்டென்று மூன்றாவது முகம் ஒன்றுமுட்டி முளைத்திருக்க கூடும் பளிங்கும் சுத்தம் வேண்டுமென்றுபழந்துணியால்நையத் தேய்த்த விரல்களின்கைங்கர்யமாகவும் இருக்க கூடும் …
>>14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 இந்த மழைத்துளி இதோ வந்துகொண்டிருக்கிறதுவானம் எனும் ஊரிலிருந்துநெடுந்தொலைவு பயணம் செய்துமண் நோக்கி வரும்இதை வரவேற்க நினைக்கிறேன்மனத்துள் மத்தாப்பை ஒளிரச் செய்துமகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்உயிர்நிலைக்காகநான் உவகையுடன் காத்திருக்கிறேன்விதை முளைத்துக் கிளம்பி …
>>எல்லாச் சொற்களும் சட்டென்று காணாமல் போய்விடுகின்றன எல்லா கற்பனையும் திடீரென்று முரண்டு பிடிக்கின்றன எல்லா நினைவுகளும் எங்கோ ஒளிந்து கொள்கின்றன. எப்போதாவது நிகழ்வதுதான் இது ஒவ்வொருமுறையும் இனி நிகழக்கூடாது என்று நினைப்பேன் ஆனால் நிகழ்ந்துவிடும். நிகழ்வதை யாரேனும் தடுக்கமுடியுமா.? அப்படி தடுக்க …
>>14/11 / 25 இணைய வழி கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை பௌதிகமான தூரத்தைஎன் மனதினால் கடந்துஉன்னிடம் வருகிறேன் சகி உயிரினை உருக்கும்தனித்துவமானஎன் மூச்சுக்காற்றுஒரு முறையேனும்கடல் கடந்து வந்தாகிலும்உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும்என்ற நம்பிக்கையில் தான்நான் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் …
>>அழகியசிங்கரின் சொல் புதிது (14 th நவம்பர்) நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் நேரத்தைக் கடந்தால்எல்லாமே இப்போதே தூரத்தைக் கடந்தால்எல்லாமே இங்கேயே பாரத்தைக் கடந்தால்எல்லாமே இலேசாக நேரமும் தூரமும்பாரமும் நினைப்பே நினைப்பினைக் கடந்தால்நெஞ்சுக்கு நிம்மதி
>>அழகியசிங்கர்/ இவர் – விருட்சம் நாளிதழ்
>>மொட்டை மாடியின் வெளிச்சத்தில்,வாடகைப் பாக்கியை எண்ணியபோது—பாயில் ஒரு நெருடல்…மயிரிழைக் கம்பியில்ஒரு காக்கை சிரிக்கிறது!
>>14-11-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை3 இந்தத் துரோகம் எனக்கானதேஎன்னைக்கொண்டுபோய் வாழ்வு எல்லையில்வைத்து வேடிக்கை பார்க்கிறதுஆதரவெனக் கைபோட்ட தோள்களில் இருந்தஅழகான முள்களெல்லாம் அழுத்திக் குத்தினவந்த குருதியைத் துடைத்துக்கொண்டுசற்று முன்னேறினால் கண்ணிவெடிவைத்துக் காயப்படுத்துகிறதுஅளவுக்கு மீறி நான் நம்பிவிட்டேனென்றுஅவமானப்படுத்துகிறீர்என் நம்பிக்கையால் வரும் …
>>14 11. 25 அன்று விருட்சம் கவியரங்கத்தில் புஷ்பா விஸ்வநாதன் வாசித்த கவிதை-1 குழலினும் இனிய மழலைச்சொல் கேட்டுகுழையாத மனமும் உண்டோ இங்கேகுறும்புகள் செய்யும் குழந்தைகள் தானேகுறையாச் செல்வம் வீட்டில் நமக்கு குழந்தைப்பருவம் குறையிலாப் பருவம்சூதும் வாதும் அறியாப்பருவம்பொய்யும், பொறாமையும் அண்டாப் …
>>14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த மூன்றாவது கவிதை பறக்கும் நட்சத்திரம்சிறகை விரித்து பூமியை நோக்கவெற்றிடத்தில் ஒரு பறவைபுதிய நட்சத்திரமாகிவிடும் ஆனால் சிறகை விரித்தஇதயப் பறவையோஅசைவற்று கிடக்கிறதுஅவ்விடத்தில் யுகம் யுகமாக வானத்திற்கும் பூமிக்கும்பயணம் செய்யும் மேகங்களோடுதொடருகின்றது கோடி கோடிஜீவன்களின் பிறவிப் பயணம் …
>>14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த மூன்றாவது கவிதை: இன்றுதான் நினைவுக்கு வந்ததுநேற்று ‘அந்த’ நாள் என கைகள் கசகசக்கபூச்சுமை தலையை அழுத்தபுகை கண்ணை குருடாக்கஅரை மயக்கத்தில்புரியாத மொழியில்திணிக்கப்பட்ட சத்தியங்களைஏற்றுக் கொண்ட நாள் ஆண்டுதோறும்துக்கங்களை சுமந்து வந்துசுய பரிதாபத்தை …
>>உள்ளே ஒளிந்திருக்கும் ஓலைச்சுவடியை மெல்லப் புரட்டலானான்; எழுத்தொன்றும் இல்லாததைக்கண்டு முதலில் அஞ்சி விழித்தான்; வெறுஞ் சுவடியைக் கையால் வருடிப் பின்னர் மகிழ்ந்து சிரித்தான்.
>>14.11.25 விருட்சம் இணைவழிக் கவியரங்கில் எனது கவிதை – 2
>>14.11.25 விருட்சம் இணைவழிக் கவியரங்கில் எனது கவிதை. களவொழுக்கம்.கல்லூரியில் கண்ட கனா,மோதலில்புகுந்த ஈர்ப்பிலேஇருமனம்இடம் மாறுமா?. இதுதான் என விதிஏதும்வகுக்க இயலாது. எங்கோ பிறந்து வளர்ந்துஇணையும்உறவிது. பிறவி உண்டோ இலையோஅறம்சார்ந்து விட்டு விலகாதசொந்தமிது. சண்டை உண்டு,கோபம்உண்டு,சமயத்தில் செய்யும்செயல்கள்வெறுப்பதும் உண்டு. புரிந்துணர்வு ஒப்பந்தம்சாட்சிஇன்றி அரங்கேறும். …
>>உங்களிடம் சொல்லிக்கொள்ளாமலேஉங்கள் வீட்டிற்கு வந்திருந்தோம்.நீங்கள் கண்ணாடிப்பேழையில்படுத்திருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் எங்களை அன்போடு அழைத்தீர்கள்;எப்போதும் போல் கனிவோடு பேசினீர்கள்.என் மகனின் நலம் விசாரித்தீர்கள்;என் கணவரிடம் அவரின் அலுவலகப் பணியைப் பற்றியும் கேட்டு அறிந்தீர்கள். எங்களால் தான் அந்த மௌனச் சொற்களோடுஉரையாட முடியாமல் கண்ணீர் …
>>