தங்கேஸ்/விடை பெறுதல்

எதுவும் சொல்லாமல் வாசல்துளசியையே பார்த்துக்கொண்டிருந்தாள் தானில்லாவிட்டால் யார் இதைதண்ணீர் ஊற்றிவளர்க்கப் போகிறார்கள்என்ற நினைப்பில்அவள் மனம் பட்டுப் போனது கல்யாணம் முடிந்த கையோடுஇதைப் புகுந்த வீட்டிற்கு கொண்டு போய் விடுகிறேன்என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா அழுதாள் “நீ போனதுக்கப்புறம் இதை நீ ன்னுநெனச்சு …

>>

விஞ்ஞானி/நரியே நரியே ஓடி வா

வளைக்குள் இருந்துவானத்தைத் தேடுதுநண்டு மனசு முன்னே ஒரு அடிநகர்ந்தாலும்பின்னே நாலு நண்டுகள் இழுக்குது முடியாமல் முடிவில் மனசுநரி வாலுக்காகக் காத்திருக்குவெளியே வர.

>>

வளவ. துரையன்/மரணம்

​அதைத்தான் அவனும்எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்; நேற்று அடுத்தத் தெருவரைவந்து சென்றுவிட்டது;அங்கு ஒருவரைத் துணையாய்அழைத்துச் சென்று விட்டது; ​கடந்த வாரம்கடைசி வீடு வந்துசிறு குழந்தை ஒன்றைஆசையாய்க் காவு வாங்கிஅழைத்துச் சென்றது; பந்தல் போடும் பையன்களும்பாடைகட்டும் ஆள்களும்காத்துக் காத்துப்பொறுமை இழக்கிறார்கள்; அவரவர் வேதனை அவரவர்க்கு அக்கம்பக்கத்தால்அருகில்வந்த …

>>

கணேஷ் ராம்/நாய்

நாயும் கல்லும்நான்முகன் படைப்புகல்லால் அடிக்கப்பயிற்சிகள் வேண்டாம்இயல்பாய் வருவதுதவிப்பினில் இன்பம் வாலை ஆட்டும்விசுவாசம் காட்டும்தின்ற சோற்றுக்குஉயிரைக் கொடுத்துக்காவல் காக்கும்எட்டி உதைத்துஏவல் செய்தால்பெட்டிப் பாம்பாய்சேவகம் செய்யும் எலும்பும் தோலுமாய்எங்கோவொரு ஜீவன்எதிர்ப்பையும் காட்டும்காட்டினால் போச்சு கடலெனத் திரண்டுகற்றோர் மற்றோர்காரணம் என்றுக்கதைபல உரைப்பார் படிக்க விடாமல்குலைத்துக் கலைத்ததுவீதியில் …

>>

ஆத்மாநாம்/கேள்வி

ஜூலை 6 ஆம் தேதி ஆத்மாநாமின் நினைவுநாள் காலை எழுந்ததும்இரை தேடத் துள்ளும்இவ்வணில்இரவு எங்கே உறங்குகிறதுமலர்க்கிளைப் படுகையிலாஆற்றுமணற் சரிவிலாசதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலாநிச்சயம் நூற்றுக்கணக்கில் இருக்கும்இவ்வணில்கள்ஒன்றல்ல தம் குழந்தைத்தனமான முகங்களுடன்சிறு பிள்ளைக்கைகளுடன்அனுபவித்து உண்ணும்இவைதங்களைப் பற்றி என்ன கனவு காணும்உணவையும் …

>>

ஆர்க்கே.!/அவரும் நானும்.!

கிணற்று நீர் நான்.கமண்டல விரி காவிரி அவர்.கனவுக்கோட்டைக்கட்டடன் நான்.யதார்த்த வீட்டின்கலை வடிவமைப்பாளர் அவர்.மெத்தனத்தின் மொத்த உருவம் நான்.சுறுசுறுப்பின் உரிமையாளர் அவர்.அன்பைத்தெளித்தலாய் மட்டுமேஅறிந்தவன் நான்.அன்பைமழையாய் பொழிபவர் அவர்.நட்பின் பயணத்தில்சிறு பிணக்கையும்ஒரு சண்டையாக்குபவன் நான்.பெரும் பிரளயச் சரிவையும்எளிதாய் ஊதித் தள்ளுபவர் அவர்.குண்டுச் சட்டிக்குள்குதிரையோட்டுபவன் நான்.ஊரே …

>>

இந்திரா ராமநாதன்/அதிகாலை அவசரம் !

என்ன சத்தம் இந்த நேரம்ஆவியோடு தூக்கி நின்று“உஷ் “ என்றது குக்கர் !விசில் சத்தம் மனம் எண்ண,“கா கா “என்று சன்னலில் சத்தம் !“அக்கக்கோ “ சத்தம் ! “ம்ம்ம்ம்” ரீங்காரமாய் மோட்டார் சத்தம் ,“பூ “பை” மாட்டிட்டேன் சத்தம் !“காபி”யைப்பையன் …

>>

கவிஞர் புவியரசு கவிதை ஒன்று

தந்தை மகற்காற்றும் உதவி இதைப் பார் மகனே!மனதில் பதிய வைத்துக்கொள்!எதற்கும் படமெடுத்துக் கொள்!இது மண் சாலை அன்று,ஒரு காலத்தில் நீரோடிக்கொண்டிருந்தஉனது நதி.நீ அமரிக்காவுக்குசம்பாதிக்கப் போயிருந்தபோது,இதை விற்று விட்டார்கள்.என்னை அவர்கள் கேட்கவே இல்லை.நான் காய்ச்சலில்படுந்திருந்தபோது நடந்திருக்க வேண்டும்.உன் அம்மா சொல்லித்தான்தெரிந்தது.ஆற்றங்கரையில் குளிக்கப் போனபோதுஅது …

>>

எல்.ரகோத்தமன்/நாணயங்கள்

பூவோ தலையோ!யாருக்கு எதுவானால் என்ன! நான் சுண்டிவிட்டநாணயம் இன்னும்கீழே வந்து சேரவில்லை! நீ சுண்டிவிட்டதும்இன்னும் தரையைத் தொடவில்லை! யார் சுண்டிவிட்டதும்கீழே விழவில்லை! சுண்டிவிட்ட நாணயங்கள்கீழே வந்து சேருமுன்னேவெற்றி எனக்கெனக் கொண்டாட்டம்! வெற்றியின் சங்கு முழங்குமுன்னேமூண்டுவிட்டது யுத்தம்! நாணயங்கள்தலையிழந்தனபூவுமிழந்தன! அந்தரத்தில் நின்றநாணயங்கள் யுத்தத்தைஇயக்கிக்கொண்டிருந்தது! …

>>

ஞானக்கூத்தன்/ பயம்

பறவைகள் கூச்சல் எழுப்பும் முன்பேவீட்டை விட்டுப் புறப்பட்டிருக்க வேண்டும்என்னைத் தேடி வந்த அவர்கள்நன்றாக ஆடை அணிந்திருந்தார்கள்நெடுந்தூரம் பயணம் செய்த களைப்புடன்தமக்குள் நானாவித மொழிகள் பேசினார்கள்உள்ளே வரும்படி அவர்களை அழைத்தேன்அவர்கள் யாரிடமும் ஆயுதம் இல்லை என்பதுபயத்தின் அளவைப் பாதி குறைத்ததுவீட்டைச் சுற்று முற்றும் …

>>

அதிரன்/கிணறு

மொட்டை மாடியிலிருந்து பார்த்தால்பின் வீட்டுக் கொல்லைப்புறம் தெரியும்.பழைய கிணறு.அதன் அருகேஒரு துணி துவைக்கும் கல். பெரும்பாலான நாட்களில்அதன் மீதே அமர்ந்திருப்பாள்அந்தப் பாட்டி. எதிரில் யாரோ இருப்பதுபோல்கைகளை வீசிகோபமாகப் பேசுவாள். அவள் பேச்சில்குற்றச்சாட்டுகள்.முடிவில்லாத கேள்விகள். யாராவது வந்துவிட்டால் மட்டும்ஒன்றும் நடக்காததுபோல்அமைதியாகிவிடுவாள். கொஞ்ச நாட்களாகஅவளைக் …

>>

வளவ. துரையன்/அவசியம் சந்திப்போம்

போய் வருகிறோம்இணையாய் வந்தோம்சிறு குடும்பமாய்ச் செல்கிறோம்; இனிமேல் இங்கேசூரியக் கதிர்கள்தாம்சுட்டெரிக்கும்; பலமாய் இடி இடிக்கும்பருவமழை வாராதுமரங்களெலாம் வ்பட்டுப் போனபின்வசிக்க இடமேது?போய் வருகிறோம் இங்கிருக்கும் இனியமரக்கிளைகளில்தாம்ஊஞ்சலாடினோம்ஊடல் கொண்டோம்உணர்வு கலந்தோம் எம்வாரிசுகளும்எழுந்து நின்றுப் பழகவும்எழிலாகப் பறக்கவும் கற்றார்கள்;போய் வருகிறோம் எழிலாக அசையும் மரமே!எங்கும் நிறைந்துள்ளஎங்கள்செடிகொடிகளே!பூந்தோட்டங்களே!பொங்கி …

>>

தங்கேஸ்/வலி

வலிகளில் பலவகைகள்எண்ணினால் ஏராளம்ஞாபகத்திற்கு வரும் ஊசி குத்துவது போலசுருக் சுருக்கென்று குத்துவதுஒரு வகை நரம்பு தெறிப்பது போலவிண் விண்ணென்று தெறிப்பதுமற்றொரு வகை பறை அதிர்வது போலடம் டம்மென்று அதிர்வதுவேறொரு வகை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டுகுத்தி கிழிக்கும் வலிஒரு வகை யென்றால் உயிரோடு …

>>

வனஜா/தந்தையர் தினம்

தந்தையர் தினசிறப்புக்குஅப்பா என்பவர்குடும்பத்தில்முக்கியம். ஆனால்அவர் நாடகத்தில்வருவது போல்அப்பப்ப தலைகாட்டுவார்.பெண் குழந்தைகளுக்குமுதலில் அப்பாதான். எல்லாம். அம்மா .கிட்ட ஏதாவதுகேட்க வேண்டும்என்றால் அப்பாசிபாரிசு தான்முக்கியம். ஒருமனிதனுக்கு இரண்டு கைகள்இரண்டு கால்கள்இரண்டு கண்கள் என்று இரண்டும்போல் அம்மாஅப்பா இரண்டு பேரும் சரிசமம். .அறிவுக்குத் தந்தைஅன்புக்கு அம்மா.கண்டிப்புக்கு …

>>

ஷைலஜா/கண்ணதாசன் பிறந்தநாளுக்காக

கிண்ணத்தின் வண்ணத்தில் மக்கள்எண்ணத்தைத்தொட்டாய்! சித்தத்தின் சத்தத்தில் கவிதைமுத்துக்களை இறைத்தாய்! பூவுக்குள் தேன் போலப் படைத்தபாட்டுக்குள் நின்றாய் ஒருநாள்காட்டுக்குக்கண்ணம்மாபேட்டைக்குப்போய்விட்டாய்! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டாற்போல் நீ திரைமெட்டுக்கு பண் சுமந்துபுகழடிகள் பல பட்டாய்! தமிழ்த்தாய் உன் நாவில்தளிர்நடனம் ஆடி நின்றாள்.அமிழ்தான உன் கவிதைஅத்தனையும் …

>>

கேள்விக்காரன்/அப்பா

எனும் மூன்றெழுத்துஎன்னில்தாய் சூட்டியபெயரெழுத்து அப்பாவெள்ளை வெளேர்தும்பைப் பூபாபபுலின் காமராஜர்நீள அங்கிஅரைக்கைச் சட்டையும்அரையில்நாலு முழ வேட்டியும்அணிந்தசொற் சிக்கனன் இட்லி உப்புமாநேசன்பிள்ளைகள்குடும்ப நேசனும் துள்ளி ஏறும்சாகஸசைக்கிள் ஓட்டி அப்பாவின்வெளி உள்சட்டைப் பையில்அகிலம்அடைக்கலாம் விழிப்புஉழைப்பில்பறவைகளினஉறவினர் அவர் அப்பாஅலுவலகம்செல்லும் போதும்விடை பெறுவதில்லைதன் இறுதிவிடையின் போதும்ஆர்பாட்டம்ஆர்ப்பரிப்பின்றிசன்னமாகதன்னுயிர் நீத்தார் அப்பாவுக்குஏன் …

>>

அழகியசிங்கர்/அப்பா

90 வயதுவரைவாழ்ந்தவர் அப்பாதனியாய் ஒரு அறையில் பல மாதங்கள் படுத்தேகிடந்தார் அடிக்கடிஎன்னைக் கூப்பிடுவார்இரவு நேரம்கூப்பிடுவது அவர் வழக்கம் என் கைகளைப்பிடித்துசிறிது நேரம்தன் கைகளோடுவைத்துக் கொள்வார் அந்தப் பரிசமே போதும் ஓராயிரம் அர்த்தம் சொல்லும்

>>

‘ ஜி.பி.சதுர்புஜன்’/அப்பாவின் நினைவுகள்

அப்பா உன் எளிமை எண்ணி உருகுகின்றேன்_உன்வாழ்க்கை தந்த பாடங்களை எண்ணுகின்றேன்!பக்கத்தில் இருந்திடினும் உன் அருமைகளைபல வருடம் போனபின் தான் நான் அறியலுற்றேன்! இரண்டு வேட்டி இரண்டு சட்டை உனக்குப் போதுமே!துண்டு ஒன்று இருந்துவிட்டால் துணைக்குப் போதுமே!பாண்ட்டு சட்டை ஷீசாக்ஸ் வெறுத்தொதுக்கினாய்!எளிமையின் இலக்கணமாய் …

>>

ஷைலஜா/அப்பாவின் பட்டுவேஷ்டி

(21.ஜூன் தந்தையர் தினத்திற்கு) அப்பாவின் பட்டுவேஷ்டிமீதுஅண்ணனுக்கு ஒருகண்தம்பிக்கு இரண்டு கண்பெண்ணானஎனக்கும்அதன் மீதானபார்வையைக்கண்டுஅம்மா சிரிப்பாள். அடர்த்தியானபச்சைநிறத்தில்அன்னப்பறவைகள்அணிவகுக்கஅகலஜரிகை கரையிட்ட பளபளக்கும் பட்டுவேஷ்டியைதாவணியாய் அணிந்துகொள்ளதணியாத ஆசை இருந்தது. சுபநாட்களில்கல்யாணப்பந்தலில்அப்பாவின் பட்டுவேஷ்டிஅவரது மேனியில்அமர்க்களமாய் ஜொலிக்கும். திருபுவனம்பட்டாம்! ’ஆளழகா துப்படிக்காரா என்பதுபோல இன்றுசெல்வநிலை அதிகமில்லாத என்னைபட்டுவேஷ்டி பணக்காரனாக்குகிறது’என்று சொல்லி …

>>

அதிரன்/மறி

வழக்கமான பாதைஇல்லையென்றாலும்நம்பிக்கையுடன்தலையை ஆட்டி ஆட்டிபின் தொடர்ந்தது ஐந்து வருடங்களுக்கு முன்மகள் ஆசைப்பட்டதால்வீட்டுக்குள் வந்தது எப்பொழுதும்ஏதாவது குரலெழுப்பிஒட்டுபவன்நாளைக்குள் பணம்கட்டவில்லையென்றால்வீட்டுக்கு அனுப்பிவிடுவதாகமகளின் சிறுத்த குரல்காதில் ஒலிக்கஇன்றுமௌனம் காத்தான் சந்தையின் சலசலப்பில்சற்று மிரண்டது கயிறு கைமாறும் வரைஒன்றும் அறியாத ஜீவன்நாலு கால்களையும்தரையில் ஊன்றிவர மறுத்தது கடைசியில்லாரியில் …

>>

கேள்விக்காரன்…/கவிதை எழுத வேண்டும்

எனக்குக்.கவிதை எழுதவேண்டும் காணும்கேட்கும்விஷயங்களைஎல்லாம்கவிதையில்சொல்ல வேண்டும்என்ற பேரவா சிலவகைசொல் வடிவம்பெறுகின்றன பலவகைசிந்தனையிலேயேசிதைந்துபோகின்றன எழுதாதகவிதைகளேமிகச் சிறந்தகவிதைகளாம் எழுதும் கவிதைகள்என்னதவிட்டுப் பிள்ளையோ நீங்கள்என்ன பெயர்சூட்டினாலும்எனக்கென்னஆயிற்று?! என்னுள்ளேகவிதைகள்எப்போதும்அடிமுடிஅறியாஎல்லையில்லாதுவளர்ந்து கொண்டேசெல்லும்எறும்புப் படையாய்புதிர்த் தோற்றஎறும்புப் புற்றாய்! 16/06/26மாலை மணி:06:04

>>

அழகியசிங்கர்/தகர டப்பா கவிதை

தினமும்கவிதை எழுத நினைப்பதுண்டு எதைப் பற்றி எழுத வேண்டுமென்று எண்ணம் ஏற்படும் கவிதை என்றால் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்ஆனால் யாரும் அப்படி எழுதுவதில்லை ஒரே மாதிரி தகர டப்பா கவிதைதான் எழுதுகிறார்கள் நானும் அப்படி எழுதக்கூடாதென்று நினைக்கிறேன்

>>

ஆர்க்கே…!/நகர்வல நாட்கள்…!

பேசக்கூட காசு கேட்பாய்போலஎன்போர்கள்கூடதன்னிச்சையாயென்னுடன்பேசிய நாட்கள் குறைவு.வெத்தலை பாக்கு வைத்துஅழைத்தால்தான்எங்கள் வீட்டுக்குன் விஜயமோஎனக் கேள்வி எய்வோர்ஒருமுறைகூட என் வீடு வந்துகுசலோபரி கேட்டதில்லை..!பெரிய ஆளாய்ட்டப்பா…நாங்கள்ளாம் ஞாபகம் வருதாஎன்போர்களின் ஏளனத்தூடேஎன்னை உதிர்த்துவிட்டஅவர்களின்சந்திப்பு விருந்துகள்படங்கள் சேதிகளாய்ஊடகப் பதிவாகையில்நானெங்கிருக்கிறேன்என்பது தேடாமலேயேதெளிவாகும் பலசமயம்..!ஒரு தடவைமணியடித்துஉயிர்ப்பித்து மரித்த அழைப்பைஓராயிரம் மிஸ்டு கால்களுக்கீடாய்கணக்கிட்டு …

>>

அதிரன்/அடையாளம்

புழக்கடையில் புதராய்மண்டி கிடக்கும்புற்களை அகற்றகிராமத்திலிருந்துவந்திருந்தார்வயதான பெரியவர் வந்தவர் ஒரு மருத்துவன்போல் புதரைச் சுற்றி சுற்றிபார்த்துக் கூலியைமுடிவு செய்துகொண்டார் பேரம் மத்தியத்திற்குவந்தபின்உடைகளை மாற்றிவேலையைத் தொடங்கினார் அப்பொழுதுதான்கவனிக்கிறேன்அவரது இரண்டு பாதங்களின்விரல்கள் அனைத்தும்ஒன்றே ஒன்று நெருக்கிபூமியை இறுககவ்விக்கொள்வது போல்அமைந்திருப்பதை உள்ளங்கைகள்ஏதோ ஒரு கருவியைபிடித்திருக்கும் பாவனையில்உள்மடிந்தேவாறே இருப்பதையும் …

>>

அதிரன்/காணும் வரை

கண்ணாடி சில்லுகள் பதித்தஅந்த மதில் சுவரைபூனை ஒன்று கடக்கும் போதெல்லாம்அவன் கண்களை இறுக முடிக் கொள்வான்அனேகமாக கண்களைத் திறக்கையில்கடந்திருக்கும்நேற்று ஏனோ அவன் கண் திறக்கையில் நடுவில் நின்று கொண்டுஅவனைப் பார்த்து நகைப்பது போன்றமுக பாவனையுடன்மீண்டும் கடந்து செல்கையில்அதன் பாதங்களை ஏதோ ஒருஅரூப …

>>

எல்.ரகோத்தமன்/இப்படியும் நடக்கும்

அந்தச் சிறுவன்பலமுறை முயன்றும்பம்பரம் சுற்றவில்லை!சுழலாத பம்பரங்களைபீரோவில் சேமித்துதன் பால்யகால நிழலோடு விளையாடிக்கொண்டிருந்தான்! அந்த வியாபாரிக்குமீசையே முளைக்கவில்லை!ஆனால் அவருக்குபானை நிறைய ஆசைவீரப்பன் மீசை மீது!அந்த மீசைகாட்டை ஆண்டது போல்தானும் ஆள ஆசை கொண்டான்! அவன்மழுங்கிய தன் அறுவாளைகூர் செய்ய ஒரு சாணையன்வருகையை நாடி …

>>

ஓடுதல்/வளவ. துரையன்

நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம். திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறேன்திரும்பினால் ஓடாதே என்பர்எப்படியும் வேகமாக ஓடிஎன்னை முந்திவிட எண்ணிஅவர்கள் ஓடுகிறார்கள். நான் ஓட வேண்டாமாம்ஏன் தெரியுமா? நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்நான் திணறித் திணறி ஓடுகிறேனாம் அவர்களைச் …

>>

அன்புடன் ஆர்க்கே.!/துளிகளின் கடல்..!

எந்த எதிர்பார்ப்புமில்லா அன்பினை என்மீது பொழிந்தபடி இருக்கிறீர்கள். தனுமை கமழும் வார்த்தைகள் உங்களால் என்னிடம் பரிமாறப்படுகிறது. துளித்துளியாக வாழ்வை மனதால் ரசிக்க சொல்லித் தருகிறீர்கள். புன்னகையையும் மகிழ்ச்சியையும் மட்டும் தேக்கிவைத்து வேண்டொணா துயர்களை புறந்தள்ளி துலக்கி விடுகிறீர்கள். என்னிதயம் சொல்ல நினைக்கும் …

>>

ரா. சீனிவாசன்/”வாழ்க்கை என்பது?”

உண்மையென்பதென்னவென்று நீ கேட்டாய்மேல் ஆகாயம்கீழ் பூமியென்றேன். அன்பு என்பது என்னவென்றாய்என்மேல் நீயும்உன்மேல் நானுமென்றேன். அறிவென்பது?நீ நீயென்றும்நான் நானென்றும், உணர்வது. துறவென்பதென்னவென்று? உன் கேள்வி,பற்றற்று போவதென்றேன். பிரிவு? கருணை? கோபம்? சோகம்?இன்பம் துன்பம்? நட்பு? காதல்?பொய்மைகள்பொய்மைகளென்றேன். பின், முழுமையென்பதென்னவென்றாய்உனை அறிவதென்றேன் சரி,வாழ்க்கை யென்பதென்ன?என்றாய்.என்ன …

>>

விஞ்ஞானி/சட்டென்று மாறுது வானிலை

வேலைக்குப் போகும் அப்பாவீட்டுக்குள் வருகையில்சட்டென்று மாறுது வானிலை. தலைமை ஆசிரியர் தலையைகண்டதும் வகுப்புகளில்சட்டென்று மாறுது வானிலை. மகப்பேறு மருத்துவமனையில்புது வரவு குரலைக் கேட்டதும்சட்டென்று மாறுது வானிலை. சாப்பிடும்போது அம்மாவின்சமையலை நினைவுக்கூரசட்டென்று மாறுது வானிலை. பாலை மனங்களில் மழையெனமழலைகள் நுழைகையில்சட்டென்று மாறுது வானிலை.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /கடவுள் நிம்மதியாக இருக்கட்டும்

எனக்கும் தான்பிடிக்கவில்லைகடவுளாக இருக்க. மனிதன் இன்னும் மனிதனாகவே இல்லையே! சில நொடி மிருகமாக, அரக்கனாகவும்இருக்கையில்எங்கே மனித நேயம்? கரையான் போல் அரித்து,கஞ்சனா மாறி,காலத்தைக் காட்டி லும் வேகமாக காடுகளை சிதைத்துஎங்கே போகிறான் மனிதன்.மனிதன் கடவுள் ஆனால் கடவுளையும் லஞ்சாதிபதி ஆக்கிடுவார்!வேண்டாம்!!கடவுள் நிம்மதியாக …

>>

தங்கேஸ்/விசித்திரம்

நிழல்மீது நிழல் மோதவேவலிக்கும் எனக்குஆனால் சிக்னலில்சின்னஞ் சிறுசு முதல்முதியோர் வரைகை நீட்டிப் பிச்சை எடுக்கையில்அடைத்த கண்ணாடி காருக்குள்குளிரூட்டப்பட்ட இருக்கையில்அமர்ந்தபடிகடந்து போவதில் சிக்கலில்லை கண்ணாடி வழியே பார்க்கும்போதுஅவர்கள் வெறும் காட்சிப் பொருட்களன்றிவேறில்லை சங்க கால கவிஞன் முதல்சமசால கவிஞன் வரைபசியைத் தான் பக்கம் …

>>

மீ.விசுவநாதன்/ *படைப்பின் ரகசியம்”

வானம் காற்று தீயும்மண்ணும் நீரும் தந்தான்!தானும் அங்கே உள்ளேசக்தி யாக நின்றான்!கானம் பாடும் புட்கள்காதல் செய்யும் ஜீவன்மானங் கொண்டு நன்குவாழ வேண்டு மென்றான்!. எல்லாம் தந்த தேவன்ஏனோ ஆசைத் தீயைமெல்ல நெஞ்சில் ஏற்றிவிட்டில் போலத் தீயின்செல்லச் சூட்டில் மாய்த்தான்!சிந்தை செய்து பார்த்துபொல்லா …

>>

அதிரன்/வேறு உலகம்

நாளைய பணிகள்மனதை அழுத்தகண் விழித்தான்நடு இரவில் அடுத்த உறக்கம் வரும் வரைஇருட்டுக்குள்இரவைஉற்றுக் கேட்கிறான் மிகச் சன்னமாகக் கேட்கிறதுமனைவியின் குறட்டை எதையோ முணுமுனுத்தபடிபுரண்டு படுக்கிறான்மகன் மடித்து வைத்திருந்தசெய்திதாள்களின்மேல்  நடந்து செல்லும்கரப்பான் பூச்சிகள் புழைக்கடையில்வளை பறிக்கும்எலிகள் இரையை கண்டமகிழ்ச்சியில் அலறும்ஆந்தைகள் தனிமை தாங்காமல்ஊழையிடும் தெரு நாய்கள் …

>>

எல்.ரகோத்தமன்/கைப்பேசியின் சிணுங்கல்

அந்தநீல விளக்கின் ஒளிஅறை முழுதும் வியாபித்திருந்தது! அரை இருட்டில் உறக்கம் வரவில்லை! வெள்ளத்தில் அடித்து வரும்குப்பை போல் ஏதேதோஎண்ணங்கள்! மனதின் அறைகளில் ரகசியமாய்கேட்ட வண்ணமிருந்ததுஅவள் குரலின் ரீங்காரம்! என் கைபேசி மணியின்சிணுங்கலில் அவள் இணைவாளெனகாத்திருந்தேன்! இணையவில்லை! நான் வரைந்த ஓவியத்திற்குநானே உயிர் …

>>

அழகியசிங்கர்/மதுவந்தி

இந்தக் கவிதை அரங்கத்திற்குமுன்னதாகவேஅவர் வந்து விட்டார் அவர் கடைசியாகஎழுதிய கவிதையைவாசிக்க உள்ளார் அன்றுவசந்த மலர் சூம்கூட்டத்தில்கலந்து கொண்டார் பின்ஓய்வுபெற அறைக்குச்சென்றார்அப்போதுதான்கவிதை எழுதினார் காலை நடைபயிற்சிசெய்தபின்இறந்து விட்டார்அவர் விரும்பவில்லை மரணத்தை இதோகவிதைப் படிக்கக்காத்துக் கொண்டிருக்கிறார்

>>

வனஜா/அன்னையர் தினகவிதை

அம்மா நீயே தெய்வம்.அம்மாவை முழுமையாக நம்பு.ஆண்டவனுக்குமேல் அம்மா.ஆயிரம் உறவிருந்தாலும்அம்மாவிற்கு ஈடில்லை.ஆசையாய் உணவு ஊட்டுவாள்.இனிமையாகபேசுவாள்.இல்லை என்ற ஒரு நாளும் சொல்லமாட்டாள்.ஈரேழு புவனமும்துதிக்கப்படுபவள்.ஈகை குணம் நிறைந்தவள்.உண்மையான நல்ல உள்ளம்கொண்டவள்.ஊமையாக இருந்து கோபத்தைபொறுத்துக்கொள்வாள்.என்றென்றும்இனியவள் அம்மா.ஏணி போல் நம்மை மேலே ற்றிவிடுவாள்.ஐயத்தைப் போக்கு வாள்.ஒற்றுமையைக் கற்றுத் தருவாள். …

>>

அதிரன்/தமிழ்நாட்டு குடிமகன் என்னும் நான்

யார் ஆட்சிக்கு வந்தாலும்கவலைப்பட மாட்டேன் தன்மானத்தை அடகு வைத்துகை நீட்டிக் காசு வாங்குவேன் என் உரிமையைக் கூடலஞ்சம் கொடுத்தே பெறுவேன். என் கனிமவளத்தையார் திருடினாலும்எனக்கு எந்த  வருத்தமும்மில்லை. சட்டம் ஒழுங்கு எக்கேடுகெட்டால் எனக்கென்ன? பாலியல் வன்கொடுமைஆணவக் கொலைபோதை பொருள் நடமாட்டம்இது எல்லாம் …

>>

எல்.ரகோத்தமன்/அவள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள்!

அவள் எங்கோபார்த்துக் கொண்டிருந்தாள்! அவளை விருட்டென்றுஒரு பறவை கடந்து சென்றது! சிதறவில்லை பார்வை ! யாரோ அவளை கூப்பிட்டார்கள்! விழவில்லை காதில் ! ஜில்லென்ற காற்று வீசியது! சிலிர்க்கவில்லை மேனி! தென்னங்கீற்றின் நுனியேறிவிளையாடின அணில்கள்! துள்ளவில்லை மனம்! கையசைத்து அழைத்தனவெண்ணிறப் பூக்கள் …

>>

பேயோன்/ராஷ்ட்ரிய பஜனை கிளப்

கோவிலுக்கருகே குடியேறினால்சாமி கும்பிடப்போகிறோம் எனவந்துவிடுகிறார்கள் கடலோரம் வீடு பார்த்துப் போனால்பீச்சுக்கு வந்துவிட்டு அப்படியே என்றுசாகடிக்கிறார்கள் வெளியூர் ஓடிவிடலாம் என்றாலோஅங்கேயும் புண்ணியத் தலங்கள்,இயற்கை இம்சைகள் பல்லிளித்து நிற்கின்றன ஒரு ஷாப்பிங் மால் கடைத்தெரு ஓட்டல்பூங்கா அருங்காட்சியகம் பள்ளிக்கூடம்எங்காவது துணிந்து வீடு மாற முடிகிறதா? …

>>

எல்.ரகோத்தமன்/ஏமாறும் பட்டாம் பூச்சிகள்

வெய்யிலோ மழையோஆளுக்கொரு குடை! நிழல் அவசியம்! நிழல்பயணம் தொடரகுடை மிகவும் அவசியம்! குடையில்லையெனில்நிழலில்லைநிழலில்லையெனில்நடக்கவோர் சாலையில்லைசாலையற்ற சாலையில்நீள்வது முட் பாதை! முட்களில் கால் படாமல்முட் கீறல் இல்லாமல்வீடு போய் சேரமனதின் நுனியில்ஏதோ ஒரு தவிப்பு! முட்களில் வந்தமர்ந்துஏமாறுகின்றன படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்! அடுத்த நொடிவண்ணப் …

>>

அதிரன்/மதுவந்தி

குழந்தை சிரிப்புகுதுகலமான பேச்சுகுறை சொல்லா மனசு எல்லோரும் ஒன்றே அவனுக்குஅவன் விரும்புவதும் நன்றே எல்லா நிகழ்வுகளிலும்அவன் உண்டுஅவனுக்கு  நிகர் யார் உண்டு? என் கவிதைகளின்முதல் ரசிகன்என் உடன் பிறவா சகோதரன் பாராட்டுவதில்அவன் இந்திரன்படைப்பதில் அவன்பிரம்மதேவன் அவன் கவிதைகளில்எப்பொழுதும் ஒலிக்கும்ஒரு “பூபாளம்”மீண்டும் படித்தால் “சொல் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்..

10.04.26 அன்று விருட்சம் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசித்த எனது கவிதைகள்.. 1.அசைகிறது ஓர் அஸ்திவாரம் ஆண்டவனின் வளாகத்தில்அன்றுகுறை தீர்க்கும் வரம்தரு நாள்.பொன்வேண்டும்,பெண் வேண்டும்,மாடிமனைவேண்டும், புகழ் வேண்டும்,பிறவாமைவேண்டும். என்முறை;உனக்கென்ன வேண்டும்?குழந்தை வரம்..மகனா? மகளா?.முதலில் மகன்.எப்படி?அறிவாய்,அழகாய்.,..தந்தோம். அடுத்து மகள்..எப்படி?.அறிவாய்,அழகாய்..ஆயுள் வேண்டாமா?ஆமாம் ஆயுளும் வேண்டும்.அப்படியேதந்தோம். …

>>

எஸ்வி வேணுகோபாலன்/மதுவந்தி

கவிதைமதுவருந்திமனமருந்திஉணர்வருந்திஉறவருந்திசுவையருந்திநட்பருந்திநடப்பருந்திரசிப்பருந்திலயிப்பருந்தி அளவற்றஅன்பர்களின்தோழமைச்சுகமருந்திவாழ்வருந்திஎல்லோரையும் கொண்டாடிக் களிப்புறும்வரமருந்தி சிலிர்ப்புற வைத்துப்பெருமிதம்கொள்ள வைத்தீரேமதுவந்தி இயற்கை செய்தகொடுமையென்னஉம்உயிரருந்தி!

>>

பானுமதி ந மூன்று கவிதைகள்

10/04/26 அன்று வாசித்த மூன்று கவிதைகள் 1.துளி சீரான லயத்தோடுகூரையின் கீழ் முற்றத்தில் விழுந்ததுகைகளை நீட்டி களிக்கிறாள் கயல் தூசி போன மகிழ்ச்சியில் சிலிர்த்த மரம் காற்றின்தடவலுக்கு ஏற்ப நீர் நடனம் ஆடுகிறது.நின்று பார்க்கிறான் ராமன். சுமை தீர்ந்த நிறைவும் பிரிந்த …

>>

ஆர்க்கே!/போச்சு.. எல்லாம் போச்சு..!

அந்த கபடமில்லாச் சிரிப்பு போச்சு.!அந்த களங்கமில்லா மனசு போச்சு.!அந்த குறைகாண முடியா குணம் போச்சு..!அந்த உற்சாக வார்த்தை ஊற்று போச்சு..!அந்த மனதார பாராட்டும் வாய் போச்சு..! அந்த மித்ரச் சண்டை போச்சு..!அந்த ஆழ்மனத்து ஆறுதல் போச்சு..!அந்த அற்புத கவிதைச்சோலை போச்சு..!அந்த உடுக்கையிழப்பு …

>>

ப.மதியழகன் வாசித்த கவிதைகள்

இன்று விருட்சம் சொல்புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் கடவுச்சீட்டு இந்த நிலவொளிஎனது நிழல்களைப்பறித்துக் கொண்டுவிட்டது மெல்ல மெல்லஊர்ந்து வந்துஎன்னைத் தீண்டிவிட்டு செல்கிறதுசிறு வெளிச்சம் விலாசத்தை தொலைத்தகாற்றுஎன் முன்பு மண்டியிட்டுஅழுகிறது யாருமற்ற வனத்தில்மனிதனின் காலடித்தடங்களைதேடிக் கொண்டிருக்கிறேன்வெளியேறும் வழி தெரியாமல் இந்த …

>>

நாகேந்திர பாரதி வாசித்த 3 கவிதைகள்

1. தண்ணீர்த் தகராறு ராத்திரி இழுத்துவிட்டவாய்க்கால் தண்ணிஅடுத்தவன் வயலுக்குமாத்திப் பாயுது பக்கத்து வயலும்பசியாறப் பார்த்துஇந்த வயலுக்குஎரிச்சல் இல்லை கண்மாய்த் தண்ணீபிரிச்சு விட்டகணக்கு நேரம்தவறிப் பாய்வதால் அறுவடை நெல்லோடகணக்குத் தவறுமுன்னுவாய்க்கால் சண்டைவரப்பிலே நடக்குது 2. வரவும் செலவும் வருவேன் என்று சொல்லிவிட்டுவராமல் இருந்தால் …

>>

சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள்

10-4 2026 அன்று கவிதை வாசிப்போம் நிகழ்வில் வாசித்து அளித்த கவிதைகள் (1)நசையுறு மனம் கேட்பின்…. நசையறு மனம் கேட்டேன்;அது,பிசகு என்றுபின்பே உணர்ந்தேன்.பற்றின்றி பாரில்பிழைக்க முடியுமாமனதில் ஈரமின்றிதரணியில் இருக்கலாகுமாநம்பிக்கை இன்றிநடத்த முடியுமா வாழ்வினை?அன்பின்றி மேதினியில்உயிரொன்று பிழைக்குமா?ஆசையின்றி அவனியில்இசைய இயலுமா?ஈரமின்றி மனதில்கருணை கனியுமா?விழைவின்றி …

>>

வளவ. துரையன் மூன்று கவிதைகள்

10-4-26அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட மூன்று கவிதைகள் 1 அவரவர்க்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள்நான்கு மூலைச்சந்திப்பில் ஓரமாக நின்றுகொண்டுஒற்றை விரல் நீட்டிக்காற்றில் கணக்கு போடுபவரை. ஆறேழு காகங்கள்பறந்தலைந்து கொண்டிருக்கையில்அமைதியாக அமர்ந்திருக்கும்காலொடிந்த காக்கையை மல்லிகை ரோஜாமலர்ச் செடிகளுக்கிடையில்மறைந்து வளர்ந்துதலைநீட்டும் முள்செடி ஒன்றை. கோயில் …

>>

ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி-ஜெ. பிரான்சிஸ் கிருபா

அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்மாடத்துத் தொட்டிச் செடிகளில்குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்ஜன்னல் திரைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்வாசலில் நுழையும் வெயில்அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்கைகளைத் தூக்கி …

>>

அழகியசிங்கர்/ மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 172 – தொகுதி : 2

அம்மாவின் பூனை அதிரன் பூரணம் என அதற்குபெயர் வைத்திருந்தாள் அம்மா.அவள் என்ன பேசினாலும்புரியும் அதற்குஅதுபோல்அம்மாவிற்குஅதன் “மியாவ்கள்” ஒரு மியாவில் புரிந்து விடும்அதற்கு என்ன வேண்டும் என. சில நேரம் பசிசில நேரம் ஸ்பரிசம். பூரணத்திற்கு நாங்கள் எல்லாம்ஒரு பொருட்டல்லஅம்மா வீட்டில் இல்லை …

>>

சிறகு இரவி/பெண்

எத்தனை அவதாரங்கள்எடுப்பாய் பெண்ணே?அடங்கிய மகளாய்ஆரம்பித்த உன்ஒப்பனை அடக்க மனைவியாய்அதட்டும் மகளுக்குஅனுசரணை தாயாய்பேரன் பேத்தி வளர்க்கும்செவிலியாய்காதில் மூக்கில் இருப்பதைக்கழட்டும் போதுஉயிரிருந்தும் சவமாய்!எத்தனை பாத்திரம் ஏற்பாய் பெண்ணே?

>>

மதுவந்தி/மேடை தாண்டிய நாடகம்

இருப்பது இரு இட்லிதான்எனத் தெரிந்துபசியேயில்லையெனசிரித்த முகத்துடன்சொல்லி தம்பிக்குகொடுத்த போதேநடிப்பு ஆரம்பம். இது போல நாடகம் எல்லா வீடுகளிலும்நிகழ்ந்து கொண்டேஇருக்கின்றனமேடையில் தவிரமற்ற இடங்களிலும்,ஒப்பனையின்றிஒத்திகையின்றி… 27.03.24) (மீள் பதிவு)இன்று உலக நாடக தினம்.

>>

நாகேந்திர பாரதி/அளவுகோல்கள்

தன்னை அளப்பதற்குத்தயாரித்த அளவுகோலை மற்றவரை அளப்பதற்குமாற்றி முயற்சித்தால் வளையும் நெளியும்ஒடியும் உடையும் அளவுகோல் இழப்பதுஅவரவர் இஷ்டம் அவரவர் கையில்அவரவர் அளவுகோல்

>>

அழகியசிங்கர்/வைரமுத்து

சமீபத்தில்வைரமுத்துக்கு ஞானபீட பரிசு தருவதாகக்கூறி உள்ளார்கள்பலர் இவரை வாழ்த்தநேரிடையாகப் படை எடுக்கிறார்கள்யார் யார் என்னைஆதரிக்கிறார்களென்றுபட்டியல் போட்டுத் தெரிவிக்கிறார் வைரமுத்து இன்னும் பலரோஇவருக்குப் பரிசு பெறத் தகுதியில்லைஎன்று முழக்கம் போடுகிறார்கள்கையெழுத்து வாங்கிகடிதம் அனுப்பி உள்ளார்கள் இருக்கட்டும்நான் எந்தக் கட்சி என்றால்என்னை ஒரு பொருட்டாகயாரும்மதித்துக் …

>>

அழகியசிங்கர் /100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்….

1 மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன். இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். …

>>

விஜயலட்சுமி கண்ணன் கவிதைகள்

1.மனித யந்திரம் தூறல் மழைபெருமழையாகிவிட்டது.சே!என்ன மழை,இப்படியா?என்றனர் ஒரு சிலர்.பனி காலம் வந்தது,குளிரில் பற்கள் நடனமாடின.இந்த குளிர் தாங்கவில்லை, என்றும் பலர். அருணனுக்கு ரோசம் பொங்கியது.இனி என் காலம்..வெயில் சுட்டு எரித்தது.என்ன கொடுமை என்று வெயிலை வசைபாடினவர்கள் எத்தனையோ!மனித மனம்எதிலும் குறை காண …

>>

பானுமதி ந கவிதைகள்

நுகர்தல் பால் முறுகும் வாசம்.ஏலமும் வெல்லமும் மணக்கிறது.யாரோ அப்பளம் பொரிக்கிறர்கள்எங்கிருந்தோ சின்ன வெங்காயம்எண்ணெய்யில் வதக்கும் நெடிநுகர்தலில் பசியாறும் என்னையும்போ போ என விரட்டுகிறார்கள். தேய்வு நேற்றுக் கூடப் பார்த்தேன்.கடலின் மேலெழுந்து சிரிப்பதைஅலைகள் தொட்டுவிட ஆர்ப்பரிக்கும்இன்ப வாதையைத் தந்த நீஇன்று ஏன் முழுதாக …

>>

ஞானக்கூத்தன்/தமிழை எங்கே நிறுத்தலாம்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டுபோய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். குகையிலிருந்த …

>>

தங்கேஸ் 3 கவிதைகள்

13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் தங்கேஸ்வாசித்த 3 கவிதைகள் கவிதை 1 சொற்கள் உயிர்க்கும் போது வனாந்தரத்தில் அலைந்தஒரு வார்த்தையைப் பிடித்து வந்துகவிதைக்குள் ஏற்றி வைத்தேன்கண் முன்னால் ஒரு காடுமுளைத்து விட்டது. சிறகடிக்கும் சொற்களை என்னால்கட்டுப்படுத்த முடியவில்லை பச்சைக் கடலில் நீந்தும் …

>>

மீ. விசுவநாதன் 3 கவிதைகள்

இன்று அரங்கில் வாசித்த கவிதைகள். உலகில் அமைதி பரவட்டும்உணர்வில் மனிதம் பெருகட்டும்அலறும் குரல்கள் இல்லாதஅகில மாக விளங்கட்டும்புலரும் பொழுதே புவிநிமிரபூபா ளமிசை ஒலிக்கட்டும்அலையும் சக்தி ஆக்கமுறஅறிவை அன்பே வெல்லட்டும்.(12.03.2026) பிறந்த மேனியாய்இருந்த மேனியைத்தாங்கிய தூளியே ! அம்மாவின் புடவைஅதுவே எனதுமுதல் உடைமை …

>>

வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள்

13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள் 1.எழுதி வைப்பேன் இந்த மழைத்துளிஇதோ வந்துகொண்டிருக்கிறது வானம் எனும் ஊரிலிருந்துநெடுந்தொலைவு பயணம் செய்துமண் நோக்கி வரும் இதைவரவேற்க நினைக்கிறேன். மனத்துள் மத்தாப்பை ஒளிரச்செய்துமகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்உயிர்நிலைக்காக நான்உவகையுடன் காத்திருக்கிறேன். …

>>

சசிகலா விஸ்வநாதன் வாசித்தளித்த 3 கவிதைகள்

13-3-2026, இணைய கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதைகள் (1) பகிர்தல் பகிர்தலில் எப்போதும் பதற்றம்! பாத்திரம் அறிந்துதான் பகிர்கிறேனா? பகிர்ந்தவர் பெற்றதை நிறைவாக நினைக்கிறாரா! தேவை அறிந்துதான் பகிர்ந்துள்ளேனா? என்னை எவராவதுகண்காணிக்கிறார்களா? என் மதிப்பு உயர்கிறதா? இதை எல்லாம் மீறிஇன்னொன்றும் உள்ளதே! அடுத்த …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி 3 கவிதைகள்

இன்று விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வாசித்த கவிதைகள். விருந்தினர் மனம் களிக்கஇன்சொல்இன்முகம் இனிய வரவேற்பு.. காலையில் கதிரவனைப்பூக்கள்இதழ்விரித்துபுன்னகை புரிந்து புதுமணம்வீசி வரவேற்கும். விழாக்கள் என்றால் மேடையும்அரங்கும்நிறைக்கும் அன்பர்களுக்குஒருவர் உரை அதுவரவேற்புரை. வீட்டில் ஓர் அறை அது பேர்பெரும்வரவேற்பரை என்று. காலையிளம் பொழுதைக் …

>>

மீ. விசுவநாதன்/அன்பே வெல்லட்டும்

உலகில் அமைதி பரவட்டும்உணர்வில் மனிதம் பெருகட்டும்அலறும் குரல்கள் இல்லாதஅகில மாக விளங்கட்டும்புலரும் பொழுதே புவிநிமிரபூபா ளமிசை ஒலிக்கட்டும்அலையும் சக்தி ஆக்கமுறஅறிவை அன்பே வெல்லட்டும்.

>>

ஔவையார்/1. ஆத்திசூடி

கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் உயிர்மெய் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம்

>>

பி. ஆர்.கிரிஜா கவிதை

பொல பொலவெனபொழுது விடிகையிலேஎழு எழு எனமனது கூறும்படு படுவெனஉடல் கெஞ்சும்கம கமவெனகாலை காஃபிமணக்கையிலேநம நமவெனநா கேட்கையிலேகிடு கிடுவெனஎழத்தான் வேண்டும் ! 22/12/2025 எல்.ரகோத்தமன்/மழை மேகம் – விருட்சம் நாளிதழ்

>>

எல்.ரகோத்தமன்/மழை மேகம்

கணிக்க முடியாமல்கனியாத நீர் துளிகளைசுமந்த மேகக்கூட்டம்அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன வானில்! எப்போது கனியும்!எங்கு போய் கொட்டித்தீர்க்கும்? சில்லென்ற மழைத் தூரல்காற்றில் தவழும் மண்வாசனைவானவில்லின் வசீகரம்மழை ஓய்ந்த அமைதிஈரம் கலந்த குளிர் காற்றுபச்சிலை சொரியம் நீர் முத்துகள்சிறகு சிலிர்க்கும் பறவைகள்விரிந்த கருங்குடைப் பூக்கள் …

>>

விருகை சங்கரன்/தெய்வமே!

அங்கிங்கெனாத படிஎங்கும் நிறைந்தவனாம்! பாமாலை பல பாடிமூச்சை உள்ளடக்கிபூக்களால் அர்ச்சித்துகாணக் கிடைக்காதவன், தெருவோரம் துவண்டுபடுத்திருந்த பாட்டிக்குப்பசியாற பணம்அளித்தபின் அவள் வாயிலிருந்துவந்த வார்த்தை ‘தெய்வமே’..! என்னுளிருக்கும்தெய்வத்தை இன்று நான்கண்டுகொண்டேன்! தெய்வமே! உனக்கு நன்றி! -.

>>

மீ. விசுவநாதன்/”ஜீவ ஒளி”

கிழக்கு வானைச் சிவப்பாக்கிக்கீறி மெல்ல வருகிறவன்பழக்க மான நம்கதிரோன்பார்க்கப் பார்க்கப் பரவசந்தான்தழைக்க வேண்டும் தரணியெனதகத கவென ஒளிபொழிவான்உழைக்க ஊக்க மருந்தாகிஉயிருக் கேற்ற சூடாவான் குப்பை செத்தை அழுக்கெல்லாம்குறைக ளின்றிப் பொசுக்கிடுவான்துப்பும் சுடரைப் பதமாகபுல்லும் கல்லும் கொளவைப்பான்உப்புச் சுவையாம் கடல்நீரைஉயரே மாற்றி மழைபொழிவான்எப்பு …

>>

தேவதச்சன்/பொற்கணம்

என்னை இனிமேல் அம்மாஏமாற்ற முடியாது, ஏனென்றால்நான் சிறுவன் அல்லஎன்னை இனிமேல் தத்துவங்களும்அரசியலும் ஏமாற்ற முடியாது.ஏனென்றால்நான் இளைஞன் அல்லஎன்னை இனிமேல் மதமும்கலையும்ஏமாற்ற முடியாது. ஏனென்றால்நான் நடுத்தர வயதினன் அல்ல.என்னை இனிமேல்மாத்திரைகளும் மரியாதைகளும்ஏமாற்ற முடியாது ஏனென்றால்நான் முதியவனல்ல. நான்இப்போது மூப்பைக் கடந்தவன்,சின்னஞ்சிறு குழந்தையைப் போல.யாராவது …

>>

கேள்விக்காரன் கவிதை

எங்குசென்று விடும்என் தாய் மொழி அது என்னஎவருக்கேனும்பொறாமைத் தூண்டபுதையல் பொருளா பொன்னாபரணமா எவரும் களவாடகாலச் சுவடியா சொத்து பத்திரமாவண்டி வாகனமா அல்லது ஹார்மோன் மாற்றத்தில்குணம் மாறும்நான் பெற்றபிள்ளைகளா அது என்னோடுஎப்போதும்எந்த சொல் ஆர்ப்பாட்டமும்இல்லாமல்கைத்தறி புடவைகதர் புடவைஆடை தாரியாய்எளிமை இலச்சினையாய்என்னுள் என்றென்றும்எனக்கு உயிரூட்டியஅம்மனாய்என்னுள்சம்மணமிட்டுகுடியிருக்கும்என் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்

கணக்கிட்டு வாழச் சான்றோர்இட்டவடிவியல்கள் இவை. சதுரங்கள் சமத்துவமானால்செவ்வகங்கள்அளவான இல்லறம் காட்டும்.நெடியவைபெற்றவராக குறுகியவைஆகாதோபெற்றவை. முக்கோணம் முன்னர்குசேலர்வாழ்வு கூடாதெனக் காட்டியகுறியீடல்லவா? சதுரம் நாற்கரச்சாலைஆகிடஇன்று எண்கோணச் சாலைவறியவர்வாழ்வில் தேனும் பாலும்ஓடச்செய்யுமாம். செவ்வகத்தில் சிலிர்த்தபணத்தாளும்ஓரிரவுவெறுந்தாள் ஆனது. சதுரமாய் வாழ்ந்துசெவ்வகமாய்உயர்ந்து,சமுதாயம் உரம் பெறவரமொன்று‘கேள் ‘ என்றே காலம்சொல்கிறது. இருட்டோடு …

>>

மீ. விசுவநாதன் கவிதைகள்

13.02.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த மீ விஸ்வநாதன் கவிதைகள் வீண் என்பதே இல்லை வீசிய எச்சில் இலைகளேதெருநாய், காக்கை, குருவி,எறும்புகளுக்கு அறுசுவை உணவு! விலங்குகள் பறவைகளின் கழிவேகாடுகள் செழிக்க உதவும் உரம்! நகர வளர்ச்சியில்ஏரி, குளங்களை மூடியகுப்பை …

>>

மீ. விசுவநாதன்/காலம்

தமிழுக்குத் தன்னெளிய தொண்டினைச் செய்தேஇமைப்போது மோயா திருந்தார் – தமையோர்எளியனாய் எண்ணி உவேசா தமிழாய்பளிச்சென ஆனார் பரந்து.(1073) 19.02.2026 (இன்று (19.02.1855) தமிழ்த் தாத்தா உ.வே. சா. அவர்களின் பிறந்த தினம்)

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் கவியரங்க நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள் என்னை நான்அப்படி நினைத்துக் கொண்டேன்என் இரு கண்களும் கூடஎன்னை ஏமாற்றிவிட்டனஏதோவொரு விதத்தில்துயரம் என்னை வந்தடைந்ததுஇப்படியாக கால்நூற்றாண்டுக்காலம்கழிந்ததுபிறகு ஒரு மழைநாளில்சிலுசிலுத்த கிளைகளினூடேஒரு காகம் சென்று மறைந்ததுமழையை பிரதியெடுத்தகாகத்தின் பாதங்கள்பழுப்பேறி இருந்தனஇதுவரை நான் பார்த்தகாகத்தின் பிம்பங்களோடுஅதனை …

>>

எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

13/2/26 இணையக் கவியரங்கம் 1.மறதி மதிப் பெண்ணுக்குஅலைந்துரேங்குக்குத் திரிந்துதேர்வு எனும்மலை ஏறிவேலைக்கு அலைந்துநிரந்திரத்திற்குத்தவமிருந்துபதவி உயர்வுக்குப்பாடாய்க்கிடந்துமாற்றல் கிடைக்கக்காவடி எடுத்துசொந்த ஊர் வந்துநொந்து நூலாகிகெளரமாய்ப்பணிஓய்வுபெற்றிடத் தவம் கிடந்துகாலம் கழித்தசொந்தக் கதையில்மனிதனாய் வாழ்வதுமட்டும் மறைந்து போனது. 2.நெருடல் தமக்கு விளங்கா ஒன்றைவிளங்கியதாய்ப் பாவிக்கிறார்கள்தெளியாத ஒரு விஷயத்தைத்தெரிந்த …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் 3 கவிதைகள்

இணையதளத்தில் நான் வாசித்த 3 கவிதைகள் பின் வரும். கட்டிடுவோம் ஒரு காதல் கோட்டை.காலமெனும்j காற்றினிலே ஆடிடுவோம் பொன்னூஞ்சல்! பாலுடன் தேனாக கலந்திடுவோம்,உருகிடுவோம் மெழுகெனதினமும் காதலில்! காத்திருப்போம்,சாரலில் நனைந்திருப்போம்,அணைத்திருப்போம் ,நம்மை மறந்திருப்போம்! ஓருயிர்,ஈருடல் என கட்டுண்டோம்,கரும்பாக இனிக்கும் காதல் கனி. காக்கைகள் …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

எனது கவிதை மின்புத்தகங்களில் இருந்து சில கவிதைகள். இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்தவை . 1. இருண்ட குகை இருண்ட குகைக்குள்எத்தனை உணர்ச்சிகள் சில வெளியே வரும்சில அமுங்கிக் கிடக்கும் கனவு வெளிச்சத்தைக்கண்ட பின்பு அத்தனையும் எழுந்துஆட்டம் போடும் விடிந்த …

>>

சுகந்தி தாஸ்/உறங்கும் சொல்

13.02 26 அன்று இணையதளத்தில் நான் வாசித்த கவிதை உனக்காக நான் இருக்கிறேன்என்ற சொல்உறங்கிக்கொண்டிருந்ததுநீ மட்டும் போதும்என்ற சொல்ஊமையாகி அழுதது உன்னை மிகவும் பிடிக்கும்என்ற சொல்தன்முனைப்பால் துவண்டதுமன்னித்து விடு என்ற சொல்மௌனித்துக் கிடந்ததுஉனக்கு நன்றி என்ற சொல்ஊருக்கு வெளியில் நின்றது என்னை …

>>

ரவி அல்லது /உலர்ந்தப் பூக்களின் உண்மை

– மெனக்கெடல்யாவிற்கும்இயைந்துபோனஎங்களுக்குசொல்லப்பட்டிருந்தது‘மதிக்குமொருவருக்குதரிக்கும் கிரீடமாகப் போகிறீர்களென’வண்ணங்களில்வார்த்த வார்த்தைகளால்விருப்பங்கள் மேவி நிற்க. காணாதகாத்திருப்பில்காலத்தை தின்றுசாரமற்றசந்தர்ப்பமொன்றில்நீங்கள்சொல்கிறீர்கள்நெகிழிப் பூக்களால்நிற்கும் கூடை என்று. நீங்களாகஇருக்க வேண்டுமெனநிம்மதி கொள்ளநினைக்கும் பொழுதெல்லாம்நகர்ந்து கொண்டேஇருக்கிறீர்கள்நாளும் பொழுதும்தாழாத துயரத்தில்தள்ளியவாறு.

>>

ஆர்.சீனிவாசன் கவிதை

மெல்லிசை மலரும் மஞ்சள் செம்பூவின் சிரிப்பு,மனமெல்லாம் மணம் வீசும் கைவினையின் அழகுவண்ணத் துளிகள் வார்த்த மாய உலகம் இது,வாழ்வின் மேசை மீது வந்த வசந்தம் இது.நாணல் போல நெளியும் பச்சைத் தண்டு அழகு,நாடோடும் நெஞ்சை நிமிர்த்தும் பூவின் விழுது.சிறு கரங்களில் பிறந்த …

>>

பில்லி காலின்ஸ்/வாசகர்

தமிழில் : க. மோகனரங்கன் பார்ப்பவர்,உற்று நோக்குபவர்,மேலோட்டமாகப் படிப்பவர், பக்கங்களைத் தாண்டிப் போகிறவர்,விரலால் தாள்களைத் திருப்புபவர், நுணுக்கமாகப் படிப்பவர்,அன்றைய வாசிப்புத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்பவர், பென்சிலைக் கடிக்கும் வழக்கமுள்ளவர்,குறிப்பெடுப்பவர்,சரி மற்றும் தவறை குறிக்கும் குறிகளால்பக்க ஓரங்களை நிரப்புகிறவர்,முதல் முறை படிப்பவர் அல்லது …

>>

அழகியசிங்கர்/கைவினைப் பொருள்

ஒருத்தர் வீட்டிற்குச் சென்றேன்அங்குப் பார்த்தகைவினைப் பொருளைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன்திறமை இருந்தால்எல்லாம் முடியும்எனக்கும்திறமை இருக்கிறதுகவிதை எழுதுகிறேன்ஆனால்யாரும் பார்ப்பதில்லைபடிப்பதில்லை

>>

க.மோகனரங்கன்/பெறாத போதும்

அப்பா இல்லாதபிள்ளைகளின் முகத்தில்அடுத்தவர் கண்களுக்குஅவ்வளவாகப் புலப்படாதஅருவமானதொருஅநாதைத்தனம்அப்பிக்கொண்டிருக்கும்.முதல் பார்வையிலேயேஅதை அறிந்தவர்களாகஅரவணைத்துக் கொள்கிறஅபூர்வமான பெண்கள்இப்போதும் இருக்கிறார்கள்.அவர்களெல்லாம்அத்தனை சிறிய வயதிலேயேஎத்தனையோ பெரிய குழந்தைகளுக்குஅன்னையர் ஆகிவிடுகிறார்கள்

>>

பி. ஆர். கிரிஜா/ஏளனம் !

காரிருளைக் கண்டுவிடிகாலை எள்ளி நகையாடியதாம் !உன்னைக் கண்டு நடுங்குவோர் பல பேர் !என்னைக் கண்டு மகிழ்வார் எண்ணிக்கை எண்ணிலடங்கா !இறுமாப்புடன் மார் தட்டியது விடியல் ;உனக்குத் தெரியுமா, என்னாலே ஜனனம்உன்னாலே தகனம் , அமைதியான பதில்காரிருளிடமிருந்து !விடியல் வெட்கித் தலை குனிந்தது …

>>

செல்விப்பிரகாஷ்/நான் நீ நாம்

நான் உன்னிடம் வெற்றுடம்பாய் வருகிறேன்நீ உயிரூற்றி விடுகிறாய் என்உணர்வோடுக் கலக்கிறாய் நான் காட்டுவழிப்பயணம்களைத்துப்போகுந் தருணம்நீ காட்டுமல்லி இறைத்துச்செல்கிறாய்.என் காலோடு கவிதைப்பேசுகிறாய். நான் பறவையானேன்உறவுகளோடு உல்லாசித்திருக்கையில்அங்கே ஆள்காட்டிப் பறவையாய் நீ. ஒரே ஒரு மூக்குத்தி மினுக்கியபடி கேட்டேன்.நீ ஓராயிரம் நட்சத்திரங்களைநசுங்காமல் என் கைகளில் …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

பார்க்கும் போதேல்லாம்ஏதாவது நிகழ்ந்து விடுகிறது..நினைக்கும் போதெல்லாம்ஏதாவது நடந்து விடுகிறது..பார்க்காத போதெல்லாம்என்னவெல்லாமோ நிகழ்கிறது..நினைக்காத போதெல்லாம்ஏதேதோ நடக்கிறது..அதனாலேபார்த்தும் பார்க்காதபடியேநடக்கிறேன்..நினைத்தும் நினைக்காதபடியேநிகழ்கிறேன்..என் மனசு அமைக்கும்நிகழ்தகவில்எது நடந்தாலும்என்ன நிகழ்ந்தாலும்மிச்சமிருப்பது நானும்..என் ஒற்றை நம்பிக்கையும்!

>>

லக்ஷ்மி மணிவண்ணன் /ஆடும் முகங்களின் நகரம்

மூன்றாவது முறையாகஅந்த நகரத்துக்குப் போயிருந்தேன்சவால்போலகடும் வெயிலுக்கான குடையோடுஅலைந்து திரிந்ததில்மர்மங்கள் லேசாய் துவங்கின.நகரத்துக்கு ஊடாகஇரண்டோ மூன்றோபுகைவண்டி வழிப்பாதைகள்பிரிந்து செல்கின்றன.குறுக்கு நெடுக்கமாய் திரியும்பேருந்துகள்எங்கு செல்கின்றனபழக்கங்களை எப்படி இவைஜனங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றனஎன்பதும் புரிந்தது. புகைவண்டி நிலையங்களில்ஜனங்கள்தட்டையான மரக்கிளையாய்நிலையத்துக்கு வெளியேயும்நேர் தலைகீழான ஒரு மரக்கிளையாய்நிலையத்துக்கு உள்ளேயும் செல்கிறார்கள்பின்னலான …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இரு சக்கரங்கள்

வரவும் செலவும் வாழ்வில் சகஜம்கஷ்டம் நஷ்டம்இரு சக்கரம் போல்இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல்மாறி மாறி வரும்காலங்கள் எனவும்எதிலும் சிரிக்கத்தெரியவேண்டும்.பிறர் சிரிக்க வாழ்வது ஈனம். ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ? – விருட்சம் நாளிதழ்

>>

ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ?

என் வேரடி மண்ணைகெல்லி எறிந்தால்துவள்பவனா நான்..? என் ஆணிவேரின் கீழ்அமில மழை பொழிந்தால்கருகி விடுபவனா நான்..? என் கிளைகளைஉங்கள் பராக்கிரமத்தால்வெட்டி வீழ்த்தினால்அடையாளம் தொலைப்பவனா நான்..? என் தளிர்களைப் பொசுக்கிதீயிட்டு வைத்தால்வெந்துவிடுபவனோ நான்..? நான் மனிதர்களுள் சந்நதன்…!நான் பறவைகளுள் ஃபீனிக்ஸ்..!நான் வாத்தியங்களில் உறுமி …

>>

தங்கேஸ்/நான்

உன் மாபெரும் ஈர்ப்புக்குஎதிர்ப்பு தெரிவிக்க இயலாமல்உனது அச்சினை நோக்கி வேகமாக நகர்ந்து வரும்சின்னஞ் சிறு கிரகம் நான் ஒரு வாய்ப் புல்லுக்குமுகத்தை உரசியபடியேஉன் கால்களை குறுக்கும்மறுக்குமாக சுற்றி வரும்சிரிய வெள்ளாடு நான் யோசிக்காமல் எழுதத் தொடங்கிமூச்சு விட முடியாமல் சிக்கித் தவிக்கும்ஒரு …

>>

அனங்கன்/கடவுள் எழுதிய கவிதை

பறவைக்கூட்டம் கலைத்துப்போட்ட வெளியைஒன்றுசேர்க்கப்பார்க்கிறது…வட்டமிடும் கழுகு. பறவைகள் கடந்ததும்அநாதையாய் உணரும் வானத்தைச் சிவக்கச்செய்கிறதுகீழிறங்கும் சூரியன். ஒற்றைக்குச்சியில் தவம் செய்யும் மீன்கொத்தியை…சீண்டிப்பார்த்துவிட்டுப்போகிறது ஊசித்தட்டான். கொம்பேறிமூக்கனை கண்டதும் பதறிப்பறக்கும்பூஞ்சிட்டைப் பிரிந்து தவிக்கிறது செம்பருத்தி. அலகில்தேங்காய்நாரினைப்பற்றிகூடுகட்ட அலைகிறது…சிட்டுக்குருவி. கவிதைஎழுதவரவில்லையென்று….தோட்டத்திற்கு வந்தால்என்னைச்சுற்றி எத்தனை கவிதைகள். வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்.. – …

>>

வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்..

முத்துத் தமிழ் சந்தம் பாடிடமுந்தித் திரு வருளைப் பொழிந்திடும்சிந்துத் தமிழ் தந்தாய் இங்கு அருள்வாயே.! நித்தம் புதுக் கவிதைகள் பாடியும்..நீடுத் தமிழ்க் கவியால் பரவியும்..நின்னைச் சரண் அடைந்தேன் இங்கு வருவாயே.! சித்தம் தனில் உந்தன் நினைவுகள்..சிந்துக் கவி சிந்தும் பறவைகள்..நித்தம் உனைத் …

>>

விஞ்ஞானி/இணையிலா இணை

அடிப்பட்ட காலிடம்அடுத்த கால் கேட்டதுவலிக்கிறதா என்று இந்த வலியை விடஎனக்கும் சேர்த்து நீ படும்துன்பம்தான் அதிகமாய்வலிக்கிறது என்றதுஅடிப்பட்ட கால். அதே நேரம்அடிப்பட்டவன் குரல்போதும் என்றதுஅவன் மனைவியின் குரல்இன்னும் ஒரு வாய்தான்சாப்பிடுங்கள் என்றது.

>>

அசித்தன்/பட்ட மரம்

மரம் சும்மா இருந்தாலும்காற்று அதை விடுவதில்லை துளிராயாய்இலையாய்மொக்காய்பூவாய்கனியாய்தானாய் உதிரும் மரமும்உதிர்க்கும் வேர்கள் உள்நோக்கிஊடுருவும்கிளைக்கும்ஆழமாய் படரும்… உயிர்ப்பதுவெளியிலாஉள்ளேயா… மரிப்பதேஉயிர்ப்பதுதானோ …

>>