அழகியசிங்கரின் சொல் புதிது (14 th நவம்பர்) நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள்
நேரத்தைக் கடந்தால்
எல்லாமே இப்போதே
தூரத்தைக் கடந்தால்
எல்லாமே இங்கேயே
பாரத்தைக் கடந்தால்
எல்லாமே இலேசாக
நேரமும் தூரமும்
பாரமும் நினைப்பே
நினைப்பினைக் கடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி
