நாகேந்திர பாரதி/போகும் பாதையெங்கும் – 6

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று

பாதைக்குப் பயந்தால்
பயணம் நடக்காது

போகும் பாதையெங்கும்
பூக்களாய் இருக்காது

கல்லும் முள்ளும்தான்
காட்டாற்று வெள்ளமும்தான்

நின்றும் நடந்தும்
நீந்தியும் ஓடியும்

கடந்து போனால்தான்
காரியம் நிறைவேறும்

துன்பத்தில் துணிந்தால்தான்
தொடர் வெற்றிகள்

நாகேந்திர பாரதி/உருகும் மனம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாகேந்திர பாரதி/போகும் பாதையெங்கும் – 6”

Comments are closed.