
அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 4
மணலைக் குவித்துக் கலைத்தோமே
அப்போது சொல்லவில்லை
மடியில் சாய்ந்து மகிழ்ந்தோமே
அப்போது சொல்லவில்லை
தூரக் கடலை ரசித்தோமே
அப்போது சொல்லவில்லை
துணிகள் நனைய நடந்தோமே
அப்போது சொல்லவில்லை
ஓரப் படகில் ஒளிந்தோமே
அப்போது சொல்லவில்லை
உன்னை என்னை மறந்தோமே
அப்போது சொல்லவில்லை
காலம் கடந்து சொல்கின்றாய்
காதல் மறக்கச் சொல்கின்றாய்
கன்னிப் பெண்ணே வாழ்த்துக்கள்
காதல் வாழும் நெஞ்சுக்குள்
உன்னை மறக்க முடியாமல்
உள்ளே பொங்கும் நெருப்புக்குள்
உலைத் தீயில் உருகும் மனம்
ஒன்றும் வேண்டாம் போடி போ
நாகேந்திர பாரதி/2.மின்மினி ஒளியாய் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாகேந்திர பாரதி/உருகும் மனம்”
Comments are closed.