டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 7

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

கவலைகள்
சிக்கல்கள்
வேதனைகள்
நல்லவனய் வாழ
நாணத்தான் வேண்டியுள்ளது

பொய்யர்கள்
புரட்டர்கள்
வாய்ச்சொல் வீரர்கள்
திருடர்கள்
நாளும் கொழிக்கின்றனர்

நல்லவன் தேய்வதும்
மற்றவன் வளர்தலும்தான்
நானில நீதியா?

தீர்மானித்தேன் நானும்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசி
உலகை வளைக்க

தக்கார்
தகவிலர் அறிந்த
சமுதாய சங்கப்பலகை
வெளியே தள்ளியது
என்னை

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6 – விருட்சம் நாளிதழ்