நாபா.மீரா/யுக்தி

குப்பை வண்டியக் கொஞ்சம் தள்ளி நிறுத்தக்கூடாதா, எங்க வீட்டு வாசல்தான் கிடைச்சுதா?தெருக்காரங்க எல்லாம் கன்னாபின்னான்னு குப்பையைக் கொட்டிட்டுப் போயிடறாங்க. வீட்டுக்குள்ள இருக்க முடியலை. சில சமயங்களில் ஹிஸ்டீரியா வந்த மாதிரிக் கத்தும் ராஜேஸ்வரியை தெருக்காரர்கள் துளிக்கூட லட்சியம் செய்யவில்லை. ஏன், அவள் …

>>

நாகேந்திர பாரதி/அடுத்தது என்ன

‘மறக்கணும்.. ம். அதுக்கு நான் ….. ‘ என்றவனின் இதழ்களைத் தன் இளம் விரல்களால் அழுத்தி , ‘நோ . இது மாதிரி பேசாதேடா’ என்று கண்ணீர்க் கண்களோடு வேண்டினாள் .‘நீ மட்டும் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டே, மறக்கணும்னு . எதை …

>>

சாந்தி சந்திரசேகரன்/எனக்கு மட்டும் ஏன்?

பச்சை புற்கள் பட்டாடை போலப் படர்ந்திருந்தது அந்த ஓவிய கண்காட்சித் திடலில்..!வண்ணக்கலவை சுவற்றின் முன். வானவில்லாய் நின்றிருந்த அந்த நவநாகரீக மங்கை.. காந்தம் போலக் காண்பவர்களைக் கவர்ந்தாள்.பன்னீர் ரோஜாவின் நிறத்தை ஒத்த அந்தப் புடவையில். காதோரம் ஆடிய லோலாக்கில் அருளின் இதயமும் …

>>

மாலா மாதவன்/இவனா? அவனா?

“போட்டோவைத் தந்ததிலிருந்து இப்படி இடிந்து போய் உட்கார்ந்திருந்தா எப்படி பாவனி? உனக்காக அலைஞ்சு திரிஞ்சு பிடிச்ச மாப்பிள்ளை இது. பேரு சஞ்சய். பெற்றோருக்கு ஒரே பையன்.காலேஜ் கூட உங்க காலேஜ் தான். உனக்குச் சீனியராய் இருப்பான். எங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. …

>>

எஸ். கோபாலகிருஷ்ணன்/சோக நடிப்பு

அழகான அந்த முகத்தில் வாழ்க்கையின் சோகம் பிரதிபலிக்கிறது. சாட்சியாகக் கண்ணீர் துளிகள்.“சபாஷ். உங்களைச் செலக்ட் பண்ணிட்டேன். எப்படி இந்த உணர்ச்சிகளைத் தத்ரூபமாகக் காட்ட முடிந்தது? ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறது. “சீரியல் இயக்குநர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.“நன்றி சார் “மதுமிதாவின் பணிவான பதில்.அவளுக்குத்தான் …

>>

மரு. ச. கந்தசாமி/கேளடி கண்மணி

” அப்படி என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி குலுங்கி குலுங்கி அழுகிறாய்டி?” என்று கிச்சனில் குக்கர் விசிலுக்கு மேல் அம்மா கல்யாணி இருமிக் கொண்டே மகளிடம் சத்தமிட்டாள். மகள் ராணி படைத்தவனே மயங்கும் அழகு உடையவள், கோபம் மூக்கின் மேல் ஏறி …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/கண்ணீர் துளிகள்

நீலாவின் கண்கள் எதையோ தேடியது. யாரையோ எதிர்பார்த்தது போல் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.இன்னும் சிறிது நேரத்தில் அவள் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட போகிறாள்.கண்ணீர் துளிகள் கன்னத்தைத் தொட்டு தரையில் சிந்தியது.புதிதாய் நியமனமான சேல்ஸ் மேனேஜர் அன்று மாலை அவளிடம் …

>>

ப. தாணப்பன்/ப்ரேமம்

அவளுக்கும் இப்படி ஏதேனும் வாங்கிக் கொடுத்திருப்பாய்தானே என்று சும்மா அவனைச் சீண்டிப் பார்க்க உதிர்த்த வார்த்தைகள் இத்தனை பாதிப்பை அவனுக்கு உண்டாக்கும் என்று தெரிந்திருந்தால் விளையாட்டுக்குக் கூட அவ்வாறு கேட்டிருக்க மாட்டேன்.கோபத்தில் தடித்த வார்த்தைகளைக் கூட அவன் உதிர்க்கவில்லை.சட்டென்று எழுந்த அவன் …

>>

சாக்லேட் பேபி/அப்புசிவா

“அவகிட்ட முதல்ல சம்மதம் கேட்டீங்களா?”“என்ன பாரு இப்ப இப்படி கேட்கற? எல்லாம் ஒன்னுக்கு நூறு தடவை கேட்டேனே”“இல்லைங்க, உங்க மக என்னைப் போல் போல்டு கிடையாது, உங்களை மாதிரி மனசுக்குள்ளேயே வச்சு உசுர வாங்குவா”“இல்லல்ல, மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுதான் சம்மதம் சொன்னா”“அப்புறம் …

>>

பி.ஆர்.கிரிஜா/மலர்ச்சி

வினிதாவிற்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம். வசிப்பதோ ஒரு சிறிய ஃப்ளாட்டில். மிகச் சிறிய பால்கனியில் முல்லை, குண்டு மல்லி, துளசி வைத்து நன்றாகப் பராமரிக்க ஆரம்பித்தாள். அவள் அம்மா திவ்யாவிற்கு அதில் துளியும் நாட்டமில்லை. “நீ எல்லாத்தையும் வெச்சுட்டுப் போய்டுவ…. …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /இறுதி ஆசை

அந்தப் பெண்ணைப் பார்த்தவன் அவள் சோகச் சித்திரமாக இருப்பதைப் பார்த்து, அயர்ந்து போய் விட்டான்.திருமணம்வரை போய்க் கழுத்தில் தாலி ஏறாத நிலைமை அவளுடையது.நண்பன் அரவிந்த்திற்காக நிச்சயிக்கப் பட்டவள் அவள். திருமண நாளன்று, சரியாகக் கழுத்தில் தாலி ஏறு முன் தன் நெஞ்சைப் …

>>

ஸ்ரீராம் /அக்காவின் ஜிமிக்கி

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டு நித்யாவுக்கு ஏனோ முன்னிருந்த உற்சாகமும், சந்தோஷமும் வரவில்லை.இந்த ஜிமிக்கிக்காக அக்கா வித்யாவுடன் போட்ட சண்டைகள் நினைவுக்கு வந்தன.அக்கா வித்யாவுக்கு அத்தை வாங்கித் தந்த ஜிமிக்கி அது. இவளுக்கும் அதன் மேல் ஒரு கண் இருந்தது. அவ்வப்போது வித்யா …

>>

எபனேசர் அருள் ராஜன்/நரம்புகளோடு பேசிக்கொண்டு இருப்பவனின் இசை

தொப்பிக்காரனென்று குழந்தைகளுக்கும் கிட்டார்க்காரனென்று பெரியவர்களுக்கும் அறிமுகமாகியிருந்த ரெங்கனுக்கு வயது 43. நாடோடியல்ல. பைத்தியக்காரனுமல்ல. இந்த இரண்டுக்கும் இடையிலான தூரத்தை இசைக்குறிப்புகளின் வழியாகக் கடந்து கொண்டிருப்பவன். நல்ல குரல்வளம் இருந்ததாலோ என்னவோ நாய்கள் வசியப்பட்டுப்போயிருந்தன. அவைகள் குரைத்து விரட்டுவதில்லை. அவனும் அப்படி நடந்து …

>>

கரந்தை இந்து/மகிழ்ச்சி மழை

“அப்பா இவர் தான் பிரபல கிடாரிஸ்ட் பைஜு தர்மாஜன் , நம் கேரளாவில் கொச்சினில் பிறந்தவர். என் மானசீக குரு. இவரால் தான் எனக்கு கிடார் மேல் ஆசையே வந்தது . நானும் ஒரு நாள் இவரைப் போல வாசிக்கணும்பா”” ஏன் …

>>

சுஸ்ரீ/ஒரு பஸ்கரின் தினம்

லண்டன் நகரத்தின் ‘டிரஃபால்கர் ஸ்கொயர்’ எப்போதும் போலப் படு பிசி.ஜான் வெக்சல் மெதுவாகத் தன் பொருட்களை முதுகிலும் கைகளிலுமாகச் சுமந்து கொண்டு கூட்டத்துக்குள் நுழைந்து மெதுவாய் அவர்களை விலக்கியவண்ணம் நடந்தான். டூரிஸ்ட் கூட்டம் நிரம்பி வழியும் நேஷனல் காலரிக்கு எதிரில் உள்ள …

>>

ஸ்ரீராம்/அப்பாவின் காதல்

ஹால் சோபாவில் உட்கார்ந்து இருந்த ஜேம்ஸ், சுவரில் மாட்டியிருந்த அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அப்பாவின் நினைவு தினம் .அவர் இப்படித்தான் அடிக்கடி கொல்லைப்பக்கம் ஒரு பெட்டியின் மேல் உட்கார்ந்து அம்மாவின் நினைவில் கிடார் வாசித்துக் கொண்டிருப்பார். அம்மாவும் அப்பாவும் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/இசை வழிந்தோடும்

“அப்பா..அண்ணா அடிக்கிறான்..”ஆத்யாவின் அலறலில் என் கையிலிருந்த காஃபி மேலே சிந்தியது. என்ன குருஷேக்த்ரம் இன்று என்ற பதைப்பில் உள்ளே ஓடினேன்.எட்டு வயது தங்கையின் மேல் கிட்டத்தட்ட அமர்ந்து அவளை அடி விளாசிக் கொண்டிருந்தான் என் மகன் ஆரவ்.பன்னிரண்டு வயது.” ஆரவ், என்ன …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கலைமகளும், திருமகளும்

பாபுவுக்கு எப்படி இசையில் அவ்வளவு ஆர்வம் வந்தது என்று தெரியாது.இளையராஜா இசையென்றால் உயிரை விடுவான்.‌அதுவும் அவர் இசையமைத்து வெளிவந்த எண்பது மற்றும் தொண்ணூறுகளில் வந்த படப் பாடல்களில் கிடாரை வைத்து அவர் செய்த இசை அற்புதத்தை மிகவும் ரசிப்பான்.படிப்பு ஏறாமல் பாதியிலேயே …

>>

மரு.ச.கந்தசாமி /முன் தினம் பார்த்தேனே

இளைய நிலா, பொழிகிறது “என்ற இளையராஜா பாடலை மோகன் பாட,அவன் விரல் கிட்டாரில் நடனமாடியது. மனமோ காற்றில் பறந்தது .எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன. கல்லூரி நாட்களில் மோகனும் கிடாரும் இணை பிரியா நண்பர்கள்.கல்லூரிக்கு தினமும் கிளாசுக்கு வருகிறானோ இல்லையோ, தினமும் கல்லூரி …

>>

சாந்தி சந்திரசேகரன்/இசைக்கலைஞன்..!

சூரியவொளி.. அந்தப் பிரபல இசைக்கலைஞனின் தற்போதைய நேரத்தைப் போல.. அஷ்டமித்துக் கொண்டிருந்தது.ஒரு காலத்தில் ஓராயிரம் கரங்கள்.. அவனின் ஒரு கையெழுத்துக்காக காத்திருந்த காலம் மாறி.. இன்று.. அவன் யாரென்று தெரியாத ஒரு நகரில்.. ஒரு பழைய மரப்பெட்டியின் மேல் தனியே அமர்ந்திருந்தான் …

>>

நாபா.மீரா/குறையொன்றுமில்லை கண்ணே!

“அம்மா, எங்க தலைமை ஆசிரியை இன்னைக்கு உங்களோடதான் பள்ளிக்கு வரணுமின்னு சொல்லிட்டாங்க., “அம்மாவின் முகத்தை எதிர்கொள்ளத் தயங்கி குனிந்த படியே பேசிய தேனருவியைப் பார்க்கப் பாவமாக இருந்தது யாழினிக்கு.சற்றே உதறலோடு தலைமை ஆசிரியை அறைக் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தாள் யாழினி.“உள்ளே வாங்க. …

>>

பி. ஆர்.கிரிஜா/இசை ஆர்வம்

தினேஷ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு படிப்பை விட கிடார் வாசிப்பதில் அதிக நாட்டம். அவன் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று பரிசுகள் வாங்குவான்.இந்தப் படிப்பும், இசையும் இவனுக்கு நல்ல வேலை வாங்கிக் …

>>

ஜி பி சதுர்புஜன்/மத்தளம்

பதைபதைப்புடன் என்னைப் பார்த்துக் கேட்டான் வைத்தீஸ்வரன். பழைய பள்ளி நண்பர்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து குருவாயூர் கிருஷ்ணனை தரிசிக்க வந்திருந்தோம். வெளிப்பிரகாரக் கம்பி வரிசைகளைப் பாம்பு போல வளைந்து வளைந்து கடந்து உட்பிரகாரத்திற்குள் அப்போதுதான் நுழைந்திருந்தோம்.எனக்கு வைத்தீஸ்வரனின் பதைபதைப்பு சுத்தமாகப் புரியவில்லை.“மொட்டையா …

>>

அழகியசிங்கர்/புனிதா

புனித பூமியான திருவண்ணாமலையிலா இந்த நிகழ்ச்சி நடந்தது.பானுமதி நிம்மதி இல்லாமலிருந்தாள்.ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் ரமண ஆச்ரமத்தில் சில நாட்கள் அவள் தங்குவது வழக்கம்.ஆனால் பேப்பரில் வந்து விழுந்த இந்தக் கொடூர செய்தியை அறிந்து திருவண்ணாமலையில் இருக்க வேண்டாமென்று தோன்றியது.சில கயவர்கள் புனிதா …

>>

கரந்தை இந்து /நீலவண்ண லிப்ஸ்டிக்

“ராணி கொஞ்சம் இங்கே வாயேன்” என்று அழைத்தான் அவள் கணவன் செந்தில்.” ஏங்க காலை நேரத்தில் நான் வேலை செய்யணுமா, வேண்டாமா? எதுக்குக் கூப்பிட்டீங்க ” என்ற கேள்வியோடு அவன் முன் வந்தாள்.“என் கூட பள்ளியில் படித்த சந்துரு திருநங்கை சாராவா …

>>

மரு.ச.கந்தசாமி/வைதேகி காத்திருந்தாள்

வாசலில் கிண்கிணி என சைக்கிள் மணி ஓசை கேட்க , வைதேகி படபடப்பானாள்.கண்கள் கடிகாரம் பார்க்க மணி8. “அம்மா நான் பள்ளிக்குச் செல்கிறேன்,” என உறக்க‌சொல்லிவிட்டு , லஞ்சை அள்ளி போட்டு, ஸ்கூல் பையுடன் துள்ளி குதித்து ஓடினாள். தெருமுனையில் விஜய் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நீல உதடுகள்

அலமேலு அவசரமாக சாப்பாட்டு கேரியர் அடுக்கிக் கொண்டிருந்தவள், திடீர் என்று மகன் குமார் நினைவு வரவே அவன் அறையைப் போய் பார்த்தாள்.“ஏண்டா ,இன்னும் குளிச்சு கிளம்பலை? டைம் ஆயிடுச்சு பாரு .சாப்பாடு கூட கட்டிட்டேன்” என்றவள் அவன் மேஜை மேல் இருந்த …

>>

அர்ஜுனன்/காதல் ஓவியம்

அந்த அம்மன்கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் இளைஞன், ஒரு ஓவியன் என்பது முதலில் நிறையப் பேருக்குத் தெரியாது.புதிதாக அந்த ஊருக்கு வந்த அவன், பொதுவாக யாரிடமும் பேசுவதில்லை.கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பவன், சில சமயங்களில் கரிக்கட்டியைக் கொண்டு ஒரு பெண்ணின் உருவத்தை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /பூத்தோடு

வெகு நாட்களாகத் தேடி வந்த தோழி அவள்.பள்ளி நாட்களில் ஊரில் ஒரு மஞ்சள் பூவைப் பறித்து, காதில் தோட்டிற்குப் பதில் மாட்டிக் கொண்டு வருவாள்.பள்ளிச் சீருடையான பச்சைப் பாவாடை, மஞ்சள் சட்டையின் வண்ணத்திற்கு அது மிகப் பொருத்தமாக இருக்கும்.காலங்கள் உருண்டோடி, இன்று …

>>

பி. ஆர்.கிரிஜா/ பரிவு

சுமதி ஒரு தனியார் அலுவலகத்தில் மேலதிகாரி. எப்போதும் கடு கடுவென்று முகத்தை வைத்திருப்பாள். வேலை அபாரம். எல்லோரும் அவளைப் போல் திறமையாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். இதனால் சக ஊழியர்களுக்கு அவளைப் பிடிக்காமல் போனது.ஒரு நாள் துப்புரவு பணியாளர் …

>>

அனுராதா ஜெயசங்கர்/நீல நெற்றிச்சுட்டி

விரிந்து பரந்த வெளி. பூரணமான ஒளி வெள்ளம். ஆயிரம் கோடி மின்னல்கள் விண்ணில் ஒன்றாய் உதித்து மண்ணைத் தீண்டியும் மறையாமல் ஒளித் தூண்களாக மாறி நிறைத்த பிரகாசம். சபேசன் அதனுள் தலை குப்புற விழுந்து கொண்டிருந்தார். புலன்கள் உணராவிட்டாலும் கண்களோ மனமோ …

>>

நாபா.மீரா/சம்போகம்

ஏண்டி எதையோ பறிகொடுத்தா மாதிரி எப்பவுமே இறுக்கமாகவே இருக்க… கேட்ட தோழி பாமாவுக்கு பதில் கூறாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் உமா.பாமா தோள்கள் பிடித்து உலுக்க… ஆங்… என்னடி கேட்ட..,சரியாப் போச்சு போ…உன் பிரச்சினைதான் என்ன…என்னத்தைச் சொல்ல… பொறந்த வீட்டுல சாப்பாட்டுக்கே …

>>

ஸ்ரீராம் /இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே..

பழசாகி பாதி ரசம் போன கண்ணாடியில் பார்த்து பொட்டு வைத்துக் கொண்ட போது “நீ பேசறதுக்கு முன்னாடி உன் கண்ணு பேசுதடி” என்று பாபு சொல்வது காதில் கேட்பது போல இருந்தது விஜிக்கு. சின்னவள் கண்ணாடியில் இவளுடைய லிப்ஸ்டிக்கால் கிறுக்கி வைத்து …

>>

சாந்திசந்திரசேகரன்/அவள்..!

அந்த பூர்வீகத்து தாத்தா வீட்டினை விற்பதற்காக, இளைய கண்ணன் ஊருக்கு வந்தான்.விற்கும் முன் அந்த வீட்டில் இருந்த சில பழுதுகளை சரிசெய்ய பொறியாளர் ஒருவரையும் வரச்சொல்லி இருந்தான்.பொறியாளர் வர தாமதமாகவே, வீட்டைச் சுற்றிப் பார்க்க..அவனது பால்யம் மொத்தமும் கண்ணனின் கண்முன் காட்சிகளாய் …

>>

கரந்தை இந்து /அக்கா எனும் தாய்

அந்த ” ஆரண்யா காப்பிக் கடை ” காப்பி, டீ இரண்டும் குடிக்கும் யாரையும் மறுபடி வரச் சொல்லும் சுவையுடன் இருக்கும்.சந்தோஷ் தனக்கு டீயும், சங்கீதாவுக்கு பில்டர் காப்பியும் ஆர்டர் செய்தான்.“சொல்லு சங்கீதா , எதுக்கு வீட்டுக்குப் போகும் முன் இங்கே …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/முடிவு

“ராம், உங்க முடிவில் மாற்றம் இல்லையே?”” இல்லை பிரியா, எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் மாறப் போறது இல்லை.”” பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை ராம்.அது ஏன் புரியமாட்டிங்குது?”” பேசினதையே பேச வேண்டாம் பிரியா. நடக்கப் போவதைப் பார்ப்போம்.”” …

>>

அ. கௌரி சங்கர் / “நாளை நமதே “

“அருண், எதற்காக வரச்சொன்னாய் ?” – காபியை துளி துளியாக குடித்துக்கொண்டு இருந்த ஹேமா கேட்டாள்.“காரணம் இருக்கிறது hemaa – இன்றைக்கு நமக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது, ” பதில் சொன்னான்.கையில் இருந்த கோப்பையில் இருந்த காபியை அவன் ரசித்து …

>>

நாகேந்திர பாரதி/காபி வேளை

‘அப்படி என்னங்க அவசரம், நேரே ஆபிசில் இருந்து இங்கே வரச் சொல்லிட்டீங்க. நீங்களும் வீட்டுக்குப் போகாம. பையன் அத்தையை என்ன பாடு படுத்துறானோ. சீக்கிரம் சொல்லுங்க , கிளம்பலாம். ‘ என்று காபியை அவசரமாக உறிஞ்சியபடி கேட்டாள் கீதா .‘முதல்லே காபியை …

>>

மாலா மாதவன்/காற்றோடு கைகுலுக்கு

இரண்டு ஆவிகள் பேசிக் கொண்டன.“பார்த்துக் கொண்டே இரு! நான் நீங்குவதற்குள் என்னைக் கொண்டவள் இவனிடம் காதல் சொல்லி விடுவாள்!”“சட்! அவளைத் தீண்டாத நீயே இப்படிப் பேசும் போது ஏற்கனவே அவனைத் தீண்டி விட்ட நான் அவன் உள் மனக் கிடக்கையை அறியாமலா …

>>

சாந்திசந்திரசேகரன் /இரவில் விழிக்கும் இன்பக்காதல்..!

அந்த நவநாகரீகக் காபி கடையில் அவர்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை.விளக்குகளின் வெளிச்சம் மட்டுப்பட்டாலும் நிலவொளியில் அவள் தேவதையாகத் தெரிந்தாள்.பகலினும் இரவில் மோகினியாய் மயக்கும் மங்கையின் மர்மம் அறியாத அவன் கண்கள் அவளை விட்டு விலகவில்லை.இதை அறிந்த அவள் இதழ்கள் ஒரு …

>>

சசிகலா விஸ்வநாதன்/கனிந்த காதல்

பேராசிரியர் காளிமுத்தனும் துறைத்தலைவை கமலாக்ஷியும் மருத்துவ கல்லூரியின் தேநீர் விடுதியில் அமர்ந்திருந்தனர். பணிமாற்றத்தில் காளிமுத்தன் மதுரை செல்ல இருக்கிறார்.‘இனி என்ன’ என்ற கேள்வி இருவர் மனத்திலும்.‘ இனியும் காத்திருப்பது எதற்காக?நாளையே வடபழனி கோயிலில் மணமுடித்து ஒன்றாகவே மதுரை சென்று வாழ்க்கையை ஆரம்பிப்போம்பெட்டர் …

>>

அழகியசிங்கர்/சரியாய் வராது

திலக் அவளைச் சந்தித்தப்போது, விழியை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் சொன்னாள்: “எனக்கும், உனக்கும் சரியாக வராது. “அவள் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு போனாள். விஜயலக்ஷ்மி கண்ணன் /மாஸ்டர் பிளான் – விருட்சம் நாளிதழ்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /மாஸ்டர் பிளான்

ஊருக்கு வெளியே மலை அடிவாரத்தில் இருந்த அந்த சிறிய தேநீர் விடுதி முன் காரை நிறுத்தி ராபர்ட் கிளாராவுடன் உள்ளே சென்று ஒரு மூலையில் இருந்த வட்ட மேஜையருகே போட்டிருந்த எதிர் எதிர் நாற்காலிகளில் அமர்ந்தனர்.இந்த இடம் இருவருக்கும் பழக்கப் பட்ட …

>>

அர்ஜுனன்/தவறிய கணக்கு

அவர்கள் இருவரும் ஒரு சிற்றுண்டி கடையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.காபி கிண்ணத்தில் எழுந்த நீராவி, புது மணத்துடன் ஆடிக்கொண்டிருந்தது.அவனது முகம் துண்டுகளாக உடைந்த கண்ணாடி போல இருந்தது. அது அவனது உடைந்த மனதை வெளிப்படுத்தியது.அவளது பார்வை, அவனை குற்றம் சாட்டுவது போல இருந்தது.“நாம் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /புலனப் புகைப்படம்

பவித்ராவுக்கு ஒன்றும் பெரிய ஆசை இல்லை.புதுக் கணவன் அரவிந்த்துடன் பால்கனியில் அமர்ந்து,காஃபி அருந்துவது போல ஃபோட்டோ எடுத்துக் கொண்டு , புலனத்தில் போட வேண்டும்.கூட்டுக் குடும்பத்தில் நடக்குமா? அரவிந்த் வாங்கித் தந்த பூவைக் கூட ஓரகத்தியருக்கும், நாத்தனார்களுக்கும் பங்கிட்டுத் தர வேண்டும்.அமெரிக்காவில் …

>>

ஸ்ரீராம் /நாளை முதல் நீ வேறோ நான் வேறோ…

அந்த காஃபி ஷாப் இருவரும் ஏற்கனவே பலநாட்கள் வந்த இடம்தான். கல்யாணத்துக்கு முன் தினமும் சந்தித்த இடம். அதன்பின் இப்போது விவாகரத்து தீர்ப்பாகி இன்று மறுபடியும் இங்கே.. பிரிவுக்கு முன் கடைசியாக ஒருமுறை இங்கேதான் சந்திக்க வேண்டும் என்று இருவருக்குமே தோன்றியது …

>>

பூ.சுப்ரமணியன் /வெறுங்கை                            

                    அந்த கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாவைக்கூத்து நடைபெற்றது. பாவைக்கூத்தில் இராமாயணக்கதையைக் காண கிராமமக்கள்  ஆர்வமுடன் கூடியிருந்தார்கள்.         கூத்து நடத்துபவன் ஆண் குரலிலும் பெண் குரலிலும் தோல்ப்பாவையை குரலுக்கு ஏற்றபடி  திரைக்குள்ளிருந்து ஆட்டி ஆட்டி கிளைக் கதையை உணர்ச்சியுடன் கூறிக்கொண்டிருந்தான்.         …

>>

அழகியசிங்கர்/வேண்டாம் இனிமேல்

“ஏன் இங்கே தேடி வந்தாய்” என்று கேட்டாள் வைஜெயந்தி. “பொழுது போகவில்லை. அதனால் வந்தேன்,”என்றான் சுந்தர்.“பொழுது அபோகவில்லை என்றால் இங்கே வருவதா? அலுவலகத்தில்தான் உன் தொல்லை தாள முடியவில்லை.”“பிடித்தமான பெண்ணைப் பார்ப்பதால் தப்பில்லையே?”“காதல் கீதல் என்று உளறப் போகிறாய்?” என்று அவனை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பார்வையின் பொருளென்ன?

அந்த மதுமிதாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பிடிக்காது.அவளும்,அவளது பல வண்ண உடையும்,ஒற்றைக் கண் பார்வையும்!அவளுக்குக் கண்டிப்பாக வயது முப்பத்தைந்தைக் கடந்திருக்கும்.எப்பொழுது பார்த்தாலும் கல்லூரி மாணவனான சுரேஷைப் பார்ப்பதும், காரணமின்றி சிரிப்பதும் அவனுக்கு வெறுப்பையே தந்தன.நண்பர்கள் வேறு இவனை,” பார்ட்டிக்கு ஒரு கண் இல்லை …

>>

நாபா.மீரா/எது அழகு

மாநில அழகிப் போட்டிக்கு அணிவகுத்து நின்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த முதன்மை நடுவர் அருகில் அமர்ந்திருந்த சக தோழியிடம்….அதோ…அங்கே பேக்கு மாதிரி முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கே…. தமிழ்நாட்டில ஏதோ கிராமமாம்…. இதெல்லாம் இந்தப் போட்டியில் கலந்துக்கலைன்னு யாரு அழுதா….முதலில் …

>>

அர்ஜுனன்/மர்ம ஓவியம்

காட்டின் எல்லையில் இருந்த குகையின் சுவற்றில் வரையப்பட்ட அந்த பெண் ஓவியம் சற்று வித்தியாசமானது.அவளது கழுத்து சாய்ந்திருப்பதும், ஒற்றைக் கண்ணோடு இருப்பதும் பார்த்தவுடன் தெரியக் கூடியவை.அதன் கையில் தெரியும் சிவப்புக் கோடு, ரத்தக் கறை என்றும் அந்த ஓவியத்தின் பக்கத்தில் சென்றவர்கள் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/சிறப்புக் குழந்தை

அன்று வகுப்பில் உமா டீச்சர் பெரிய ஒரு பெட்டி நிறைய மரத்தாலான சிறிதும் பெரிதுமாக பல வடிவங்கள் , பல வண்ணங்களிலும் கொண்டு வந்தவைகளை , இரண்டு மேஜைகளை ஒன்றாக சேர்த்துப் போட்டு அதன் மேல் பரப்பினாள்.ரம்யா நான்காவது வகுப்பு படிக்கும் …

>>

சுஸ்ரீ/வேறென்ன வேண்டும்

“கணேசா சாயந்தரம் சீக்கிரம் வந்துடு பொண்ணு பாக்கப் போறோம்”அம்மாஎன்னவோ 32 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை. உற்ற நண்பன் வேலாயுதத்தின் திருமணம் நடந்து 8 வருஷம் இருக்குமா,அழகான பெண்னு ஆசையா கல்யாணம் பண்ணிண்டான் இப்ப பாவம் படற மன வேதனை சொல்லி …

>>

கௌரிசங்கர்/மேற்பார்வை

காலையில் எட்டு மணிக்கே கணேசன் வீட்டிற்கு வந்து விட்டான். மாலை மூன்று மணிக்கு வீட்டிற்கு திரும்பிவிடலாம் என்று சொன்னான். வேலை அவ்வளவு கடினம் இல்லை. சுலபம் தான். மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும். வேலை முடிந்தவுடன் சம்பளம் தந்து விடுவார்கள் என்றும் …

>>

நாபா .மீரா/சுமைதாங்கி 

நான் சொல்லுறதைக்  கொஞ்சம் பொறுமையாக் கேளுடிகீது ….இனியா மகப்பேறு மருத்துவமனையின் ஆறாம் தளத்திலிருந்து மின் தூக்கி வாயிலாகக்கீழ்த் தளத்திற்கு இறங்குகையில் தோழியிடம் வாதிட்டாள் மீனலோசனிதோழி பேசியது காதில் விழுந்தாலும் அமைதி காத்தாள் கீதப்பிரியா. அருகில் அவள் புடவைக் கொசுவத்தைப் பற்றியபடிசற்றே தெளிவற்ற நிலையில் ஒரு ஐந்து வயதுப் பெண்.உன் புருசன்… ஏற்கனவே …

>>

அர்ஜுனன்/பிரசவ வைராக்கியம்

வீட்டிற்குள் நுழைந்த அவள், சுவற்றில் சாய்ந்து நின்றாள்.உள்ளுக்குள் மூச்சு மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.“உன்னால் தான் இந்த தவறு நடந்தது”அலுவலகத்தில் கத்திய மேலாளரின் குரல், மனதுக்குள் வீடுவரை வந்து விரட்டியது.‘அந்த தவறுக்கு காரணம் நான் இல்லை, நீங்கள்தான் என்று சொல்லும் துணிச்சல் நமக்கு …

>>

சந்தியா ஷங்கர்/அந்த கனவு

அந்த கனவு அவளுக்குத் தினமும் இரவில். ஏதோ ஒரு உருவம் அவளிடம் என்னமோ எதிர்பார்த்து நிற்கிறது. அந்த உருவத்தை உத்து பார்த்தாள் மங்கா.தலை ஒருபுறம், கைகள் பக்கவாட்டில் இல்லாமல் பொம்மலாட்டம் மாதிரி உணர்விழந்து, கால்கள் மட்டுமே தாளம் போடும் விதத்தில்.என்ன உருவம் …

>>

ஜெ.பாஸ்கரன்/சிறை

கட்டம் கட்டமாகக் கம்பிகள் கொண்ட தடுப்புக்கு அந்தப்புறம் ஒரே கூச்சல்.“எலே, எப்டி இருக்கே லே?” “நல்லா இருக்கிறீங்களா?” “வருத்தப் படாதீங்க, இன்னும் கொஞ்ச நாள்தான்…” “உனக்குப் பிடித்த பூந்தி..” “வக்கீல், கேஸு நம்ம பக்கம் தான் ஜெயிச்சிடும்னு திடம்மா சொல்றாரு..”இந்தப் பக்கம் …

>>

பி.ஆர்.கிரிஜா/தோற்றம்

ரமாவிற்கு தன்னுடைய ஒரு கால் மற்றொரு காலை விட சின்னதாக இருப்பதால் சற்றே விந்தி நடப்பாள். ஆரம்பத்தில் பள்ளியில் படிக்கும்போது சக மாணவ மாணவிகள் கேலி செய்யும்போது அழுகை முட்டிக் கொண்டு வரும். நாளடைவில் அவற்றை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். அவள் அப்பாவின் …

>>

சுஸ்ரீ/காற்று வெளியிடை

இளம் தென்றல் அவளை அப்படியே வருடிச் சென்றது,அந்தக் காற்றுக்கும் அலைகளின் இசைக்கும் ஏற்ப தலைமுடி சுருண்டு விளையாடியது.வேகமாக கால்களை நனைக்க வந்த வெண்ணுரை அலைகள் கோபமாக வந்து கால்களில் விழுந்து வணங்கி விட்டு அமைதியாகத் திரும்பியது.தூரத்தில் இரண்டு மீன் பிடி படகுகள் …

>>

ஸ்ரீராம்/என்னுள்ளில் ஏதோ

தான் ஏதோ ஒன்றைத் தேடுவது போலவும், அது கிடைக்கவில்லை என்றுமே எப்போதும் தோன்றுவது போல இருக்கும் சத்யாவுக்கு.மற்றவர்களுடன் தாமரை இலை தண்ணீர் போல பழகுவதும், தனக்குள்ளேயே உள்ளுக்குள்ளே ஆழ்ந்து போவதும், மற்றவர்களிடமிருந்து இவளை கொஞ்சம் விலக்கித் தான் வைத்திருந்தது.உண்பதுவும், கழிப்பதுவும், ஊடுவதும், …

>>

நேற்று இல்லாத மாற்றம் – ஸ்ரீராம்

அதென்னவோ KK க்கு எப்போதும் அடுத்த பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதே வழக்கமாகிப் போனதை நினைத்து மருகினாள் ரியா.ஒவ்வொரு முறையும் அவன் சொல்லும் முகங்களை தன் முகத்தோடு ஒட்ட வைக்க முயல்வாள்.அதற்குள் அவன் அடுத்த முகத்தைக் கொண்டு வந்து விடுவான்.எப்போதும் கழுத்தில் …

>>

நாபா.மீரா/சித்திரம் பேசுதே

அப்பா எங்க ஸ்கூல்ல சித்திரக் கதைப்போட்டி ஒண்ணு அறிவிச்சிருக்காங்க…நா நல்லா ஓவியம் வரைவேங்கறதால எங்க கிளாஸ் மிஸ் என் பெயரைக் கொடுத்திட்டாங்க.உங்களத்தாம்பா நம்பியிருக்கேன் என்ற ஹரீஷிடம்….ஜமாய்ச்சுடலாம் கண்ணா…. சிறிது நேரம் செலவழித்து ஒரு காட்சியை மையப்படுத்தி ஓவியம் ஒன்று வரைந்து நீட்டினார்.சுத்தியிருக்கிற …

>>

ராஜாமணி/பிம்பச் சிறை

“சிறந்த நடிகை” விருதுடன் அனிதா விழாவிலிருந்து வீட்டுக்குத் திரும்பினாள்.விழாவின் ஒளியும் கைதட்டலும் வீட்டுக்குள் வரவில்லை; பெரிய மாளிகை அவளின் தனிமையைக் கூட்டியது.நகைகளை கழற்றி, ஒப்பனைகளை துடைத்து சோபாவில் அமர்ந்தாள்.டிவியில் இளம் நடிகைகள், “அனிதா எங்கள் ஆதர்சம்” என்றார்கள்.அதை கேட்ட அனிதாவுக்கு மனம் …

>>

லக்ஷ்மிரமணன்/இப்படியும்

“நீ என்ன சொல்லறே வனிதா?”அம்மா தேவகி அவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.“ஆமாம்மா .எனக்கும் என் புருஷன் வினோதுக்கும் கிடைத்த இன்ப அதிர்ச்சி இதுஎங்க கல்யாணம் நடந்து பதினஞ்சு வருஷம் ஆச்சா?இப்பதான் கர்ப்பமாக இருக்கேன்”“இது உன்மகள் ஜனனிக்குதெரியுமா?”“உனக்கே நான் இப்பதான் சொன்னேன் . அவ …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கனவு கண்டேன் தோழி

இப்போதெல்லாம் அடிக்கடி இந்தக் கனவு வருகிறது அரவிந்த்திற்கு.என்ன பொருள் என்றுதான் தெரியவில்லை.மரத்திற்கருகில் ஒரு புறம் விலங்கு மற்றொரு புறம் பறவை, மரத்தின் கிளையில் ஒரு அழகிய பெண்முகம்!முப்பது வயதை நெருங்கும் கல்யாணமாகாத, அப்பாவை இழந்த அவனுக்கு அம்மாதான் எல்லாம்.அந்தக் கிராமத்திற்குப் பணிஇட …

>>

அதிரடி அதிரா – ஸ்ரீராம்

எனது ஓவியம் என்று சொல்லி ஆபீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் அதிரா கொண்டு வந்து மாட்டிய ஓவியத்தை பார்த்து ஆபீஸில் ஆளுக்கு ஆள் கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பாடியது, சமைத்துக் கொண்டு வந்தது, பேசியது எல்லாம் புறம் தள்ளப்பட்டன. அவள் தலைக்கு …

>>

கிரிஜா ராகவன்/முகமூடி

புது ஐ லைனர். ஒருகோட்டிலேயே பட்டையாகக் கோடிட்டது. கண்ணாடிக்கு முன் அமர்ந்து கண்களின் மேலும் கீழும் அழகுபடுத்திக் கொண்டாள் சௌம்யா. பளிச்சிட்ட கண்களைப் படபடவென்று ஒருமுறை சிமிட்டிப் பார்த்தாள் உதட்டுச்சாயத்தை அழுத்தமாய் பூசிக் கொண்டாள். அலங்காரம் முடிந்து அடித்துப்பிடித்து டிராபிக்கில் வண்டியோட்டி …

>>

நாபா.மீரா/சுகமான சுமைகள்

தங்கச்சி உன் வாழ்க்கை இப்படியாகுமின்னு கனவுல கூட நெனைச்சுப் பார்க்கலயேம்மா. உன்னைக் கண்ணுக்குள்ள வச்சுத் தாங்கின மாப்பிள்ளை இப்படி அல்பாயுசுலே போயிட்டாரே.ரெண்டு சின்னப் பசங்கள ஒத்தையாளா எப்படி வளர்ப்பே…இப்பவே எங்களோட கெளம்பு… அண்ணியின் முகத்தில் தெரிந்த தவிப்பை இனம் கண்டு கொண்ட …

>>

கரந்தை இந்து/சுயமுகம்

ஏம்ப்பா கண்ணா, நாளைக்கு அமெரிக்கா கிளம்ப எல்லாம் ரெடி பண்ணாமல் இங்கே உட்கார்ந்து படம் வரையறியே, அது அவ்வளவு முக்கியமாப்பா இப்போ?அம்மா, நான் ஏற்கனவே முக்கியமானதை எடுத்து வைச்சிட்டேன். இந்தப் படத்தைப் பார்த்து உனக்கு என்ன தோணுதும்மா?அந்தப் பெண் தன்னைத் தானே …

>>

அழகியசிங்கர்/ஒரு முகம்

வசந்திக்கு இரண்டு மூன்று நாட்களாக உடல் நிலை சரியில்லை. விஸ்வநாதன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை. வசந்தி உடம்பு சரியில்லாவிட்டாலும் எப்படியோ விஸ்வநாதனுக்கு சமையல் செய்து போட்டு வேண்டியதைக் கவனித்து அவனை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள். மூன்றாம் நாள் முடியவில்லை. அப்போதுதான் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மீட்சி

சிறுவயதில் கருப்பி, அண்டங்காக்கா என அவளை பலர் அழைத்தபோது வலித்தது. கோதையார் பருவத்தில் அவளது முகமே அவளுக்கு வெறுத்துப் போனது. அதனை சித்திரமாகத் தீட்டி ஒவ்வொரு நாளும் அவள் அடைந்த அவமானங்களை கோடுகளாக முகத்தில் வரைந்தாள். அவளது வலியை நினைத்து நினைத்து …

>>

ராமசந்திரன் உஷா/ஓவியப் பெண்

சுரேந்திரன் தான் வரைந்த ஓவியத்தின் முன் நின்றிருந்தார்.ப்ச்சு.. என்று மெல்லிய குரல் பக்கத்தில் கேட்டது.அதே ஓவியப் பெண்.“காதுகள் மிக நீண்டு, அசிங்கமாய் இருக்கிறது அதையும் கொஞ்சம் சரி செய்து விடுங்கள்” என்றாள் அவள்.“நான் படைப்பாளி! எப்படி வரைய வேண்டும் என்பதை நான் …

>>

அர்ஜுனன்./ நினைவாலே..

அறை முழுக்க அமைதி.மேசை மீது விரிக்கப்பட்டிருந்தது, ஒரு பழைய ஸ்கெட்ச் புத்தகம்.அவன் விரல்கள் நடுங்க, ஒவ்வொரு பக்கமாக புரட்டினான்.அங்கே அவள்—ஒரு காலத்தில் அவனுடன் பேசி, சிரித்து, காதலித்தவள்.விபத்தில் இறந்தபிறகு, தற்போது வெறும் நினைவாக மட்டுமே உயிர் வாழ்கிறாள்.அவளது உருவப் படத்தின் மீது …

>>

உஷா சங்கரநாராயணன்/நட்பாம் கிழமை

“ஹாய் டா. என்ன பிஸியா” என்றவாறு உள்ளே வந்தான் சூர்யா. ஹரீஷ் டேபிளில் இருந்த அந்த உருவத்திற்கு பின்பக்கம் கனெக்டர்ஸ் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே “வாடா இஞ்சி” என்றான் சிரித்துக்கொண்டே.“என்னடா இஞ்சி, சுக்குன்னுட்டு என்று சிரித்துவிட்டு அது சரி நீ …

>>

ஸ்ரீராம்/ மன ஓவியம்

ஓவியங்கள் வரைவதில் தர்ஷனாவுக்கு ஆர்வம் உண்டு.ஜன்னலில் ஒரு பூ மட்டும் எட்டிப் பார்ப்பது போல, பனைமரம் வானத்துக்கு விசிறி ஆவது போல, மழைக்குப் பின்னே தெரியும் மின்னலில் ஒரு முகம் தெரிவது போல என்றெல்லாம் அவள் ஓவியங்களில் ஒரு கற்பனை இருக்கும்.ஒரு …

>>

மாலா மாதவன்/கதவு திறக்கும்

“விழிகள் நட்சத்திரங்களை வருடினும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடு தான்! அப்படிங்கற மு.மேத்தா கவிதையைப் படிச்சிருக்கியா நீ ஸ்வேதா?” ஆனந்த் கேட்டபோது என் விழிகள் ஜன்னல் வழியே வான்வெளி விண்மீன்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.“ம்! படித்திருக்கேன்! ஆனால் அதைப் படித்ததால இப்படி …

>>

சாந்திசந்திரசேகரன்/அவள்..!

இரவு மணி பன்னிரண்டு.இரண்டாம் காட்சி “திகில் வீடு” படம் முடிந்து கதிரவனும் அவர் மகன் விஷ்வாவும் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.ஒரு சிவப்பு நிறக்காரை தாண்டும் வேளை.. வேடிக்கை பார்த்து வந்த விஷ்வா ஒரு நொடி திகிலானான், “அப்பா.. …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/நானே வருவேன்

பவித்ரா அரவிந்த் தம்பதியர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்தில்தான் சுமதியின் கணவன் சுரேஷ் வேலை பார்த்து வந்தான்.இருவரும் ஒரே குடியிருப்பில் அடுத்து அடுத்த அப்பார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வந்ததால், சுமதி அடிக்கடி பவித்ரா வீட்டுக்கு வருவதுண்டு.சுமதி வயதில் இளையவள்.அலங்காரம் செய்து கொள்வதில் அதிக …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இப்படியும் ஒரு முகம்

“அப்பாடா!.நிம்மதி!!”என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே,உற்சாகமாக , கை கால்களை ஆட்டிக்கொண்டு தன் மனைவி ராணி சண்டைப் போட்டு பிறந்தவீட்டுக்கு பஸ் ஏறினதை கொண்டாடியபடி கதவை திறந்துகொண்டு வீட்டின் உள்ளே நுழைந்து ஹால் மின் விளக்கை போட்டான்.பளிச் என்று தெரிந்தது வீடு.ஜனகராஜ் போல் “என் …

>>

நாபா.மீரா/அன்றில் பறவைகள்

கணேஷ்….என்னடா சொல்ற… அம்மா நல்லாத்தானே இருந்தாங்க. அப்பா இறந்து காரியம் கூட நேத்தைக்குத்தானே முடிஞ்சுது.ஆமாடா…தினேஷ்.. எங்களுக்கும் அதிர்ச்சிதான். அப்பா சொகமில்லாம இருக்கறப்பவே எங்களோட டவுனுக்கு வந்துடச் சொன்னேன். பிடிவாதமா மறுத்துட்டாரு….ஆனா… ஒண்ணு மட்டும் ஆச்சரியமா இருக்குடா…அவர் நெனைச்ச மாதிரியே தன் இணையையும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பெண் சிங்கம்

“மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் இன்னும் மாறவில்லை. மணக்கொடை கேட்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.பெண்ணைக் கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டிக் கும்பல் இன்னும் நாட்டில் திரிந்து கொண்டுதான் இருக்கிறது.பெண்மையை உயர்வு செய்வோம்”, மேடையில் முழக்கமிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாள் கவிஞர் “பெண் சிங்கம்” பெரிய …

>>

அர்ஜுனன்/மாறுபட்ட பார்வை

வீட்டின் அழைப்புமணி ஓசை ஒலிக்க, கதவைத் திறந்தான் ரகு.எதிரில் தலைச் சொறிந்துகொண்டு கார்பரேஷன் தொழிலாளி.“காவா(வாறுகால்) க்ளீன் பண்ணிட்டேன்.. டீக்காசு கொடுங்க ஸார்..”அவன் பேசப்பேச சாராய வாடை குப்பென்று அடித்தது.“வேலை பார்க்கதுக்குத்தான் கவர்மென்ட் சம்பளம் குடுக்குதே.. நீ சாராயம் குடிக்க, என்கிட்ட டீக்காசுனு …

>>

உஷா சங்கரநாராயணன்/இருமுகன்

“பேரண்ட்ஸ் வரணும்னு சொல்லியிருந்தேனே. ஒருத்தர்தான் வந்திருக்கீங்க? மேடம் வரலையா?” என்றார் சுமதி டீச்சர்.அபிநவ் சரத்தின் தோளில் கையைப் போட்டு பேச விடாமல் தொங்கிக்கொண்டு இருந்தான். சரத், “இல்ல மிஸ், அவங்க பிஸியா இருக்காங்க. முக்கியமான பொறுப்புல இருக்கறதால லீவு போட்டுட்டு வர …

>>

சீன நாட்டுப்புறக் கதைகள்/கவிஞரும் பீயோனி மலர்களும்

பண்டைய காலங்களில், ஒரு மலைச்சரிவில் அமைந்திருந்த ஒரு பெரிய கோவிலுக்கு அருகில், உலகிலேயே மிக அழகான பீயோனி மலர்கள் வளர்ந்துகொண்டிருந்தன. வீடு விட்டு தொலைதூரம் அலைந்து திரிந்த ஒரு இளம் கவிஞன், மகிழ்ச்சியான மலர்களால் நிறைந்த அந்த மலைச்சரிவிற்கு வந்தான்; அங்கேயே …

>>

இந்துமதி நடராஜன்/இருமுகம்

அப்படி என்ன புதுசா பார்த்தே நீ?நம் குழந்தைகளை அன்பால் குளிப்பாட்டும் நீ , வீட்டு வேலைக்காரி குழந்தை கிட்ட ஏன் அவ்வளவு கடுமையா வன்முறையா நடந்தே ?அந்தப் பெண் நான் நிறைய ஆண்டுகளா ஆசையா வைச்சிருந்த, என் முகம் வரைந்த, டீ …

>>

ஸ்ரீராம்/என்னாச்சு எனக்கு

‘மது-மாது -‘ என்று தலைப்பு தந்து மாது கொடுத்த அந்தப் படத்துக்கு பரிசு கொடுத்து “மனமொத்த தம்பதியர்” என்று வந்திருந்த சான்றிதழை மேஜை மேல் வைத்து, படத்தை நிமிர்த்தி வைத்திருந்தான் மாது என்கிற மாதவன்.அதைப் பார்த்ததும் அடுத்தது காட்டும் பளிங்கு போல …

>>

நாகேந்திர பாரதி/எத்தனை முகங்கள்

எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு முகங்களும் காட்டத் தெரிந்தாலும் , உள்ளுக்குள் இருப்பது ஒரு முகம் தானே. அது தானே அவள் உண்மை முகம்.தூங்கி எழுந்ததும் …

>>

சீன நாட்டுப்புறக் கதைகள்/பேராசை கொண்ட அண்ணன்

பல ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு விவசாய சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். கோடை காலம் தொடங்கியிருந்தது; உயரமாக வளரும் கோதுமையை விதைக்கும் காலமும் வந்திருந்தது.இளைய சகோதரனிடம் விதைத் தானியம் எதுவும் இல்லை. ஆகவே, அவன் தன் அண்ணனிடம் …

>>

வில்லோ இலை போன்ற புருவம்/சீன நாட்டுப்புறக் கதைகள்

ஒரு காலத்தில் சென் லியென் என்ற இளம்பெண் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வில்லோ மரத்தின் கிளையைப் போல மென்மையானவராகவும், ஜேடு கல்லால் செய்யப்பட்ட சிலையைப் போல அழகானவராகவும் இருந்தார். ஆனால் அவளுடைய அழகை சற்றே குறைத்த ஒரே விஷயம் ஒன்று …

>>

விஜயா சுப்ரமணியம்/ ஓட்டல் மெரிடியன்

நேற்று புதிதாக திறந்த ஐந்து நஷத்திர ஓட்டல் மலையடி வாரத்தில்இருந்த. இந்த ஓட்டலில் சாப்பிட இந்த நான்கு வித்தியாசமான அழகிகளும நுழைகிறார்கள்முதலில் அவர்களை தடுத்தான். வாசல்லநின்ற ஸென்ட்ரி“இது உங்களுக்கான ஓட்டல் இல்லை பெரிய அரசியல்வாதிகள் சினிமா. ஸ்டார். வருவார்கள்.இந்த மாதிரி உடை …

>>

நாபா.மீரா/ஒப்பனை முகங்கள்

பஞ்சாபகேசன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.தஞ்சை மண் தருவித்த அவரது விருந்துச் சாப்பாட்டிற்கு ஒவ்வொரு மார்கழி சீசனிலும் கூட்டம் அலைமோதும்.அது.. எப்படித்தான் உங்களால மாறாம தரத்தையும், ருசியையும் மெயின்டெய்ன் பண்ணமுடியறதோ…. உங்க கைப்பக்குவம் சான்ஸே இல்ல மாமா….இப்படிச் சொல்லும் சிறியவர் முதல் பெரியவர் …

>>

ஸ்ரீராம்/சிறகுகள் விரியும்

“இது என்ன?” என்று கேட்டான் ராகவன்.சற்றே பெரிய அளவில் அந்தப் படத்தை தயார் செய்து மெருகூட்டிக் கொண்டிருந்தாள் வித்யா.“இது முகமற்றவர்களின் முகம். எல்லோருக்கும் ஒரே முகம்” என்றாள் வித்யா.“புரியவில்லை”“ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணுக்கு என்று விதம் விதமாக நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ‘இதை …

>>

சசிகலா விஸ்வநாதன்/நட்பின் பலம்

சாம்பவி , அனுபமா, பார்கவி காமாட்சி இவர்கள் சிறிய வயது முதல் இணைபிரியா தோழிகள்.பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாய் படித்தவர்கள்.எல்லோருமே நல்ல பணியில் இருந்து கைநிறைய ஊதியம் இருந்தாலும்; அன்றாட வாழ்க்கையில் வெறுமை மட்டும் மிஞ்சியிருந்ததுகாமாட்சி மூத்தவளாக பிறந்து குடும்ப பாரத்தினால் திருமணம் …

>>

உஷா சங்கரநாராயணன்/புது வருஷம்

புது வருஷம் பிறக்கப் போகுதே என்ன உங்க மனசுல இந்த வருஷத்துக்கான திட்டங்கள் ? மைக் முன்னால் நீண்டது.அவர்கள் நால்வரும் கொஞ்சம் அதிர்ச்சியானார்கள். பிரபலங்களுக்கு முன்னால் நிற்கும் மைக்குகள் நம் முன்னால் நிற்கிறதே என்று. “எங்களையா கேட்கிறீங்க என்றாள் ஒருத்தி”. “ஆமா …

>>