சுஸ்ரீ/ஐ விட்னெஸ்

இன்ஸ்பெக்டர் சேகரன், ஐந்து வயது சிறுமி புஷ்பாவை அன்பாக விசாரித்தார்.“சொல்லு பாப்பா அந்தத் திருடனை எப்ப பாத்தே?”“நைட் பாத்ரூம் போக எழுந்தேனா இருட்டா இருக்குமே அப்பதான்.”புஷ்பாவோட தந்தை சுந்தரம்,”அதெல்லாம் ஒண்ணும் திருட்டு போகலை, அது சும்மா சொல்லுது”சுந்தரத்தோட நண்பர்தான் இன்ஸ்பெக்டர் சேகரன், …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இது புது அனுபவம்

காமேஷ் பக்கத்து வீட்டு கோகுல் அண்ணாவை கையோடு அழைத்து வந்துமுன் அறையில் நாற்காலியைப் போட்டு உட்காரவைத்தான்.ஒன்றும் புரியாமல் கோகுல் முழித்தான்.“என்னடா காமேஷ் என்னை ஏன் கைது பண்றே”என்று கேட்டான்.“அண்ணா, நீங்கக் கொஞ்ச நேரம் அப்படியே உட்காருங்க.என்னையே பாருங்க.எனக்காக அண்ணா, பிளீஸ் “என்றான் …

>>

மாலா மாதவன்/முகம் தொலைத்தவர்கள்

“அம்மா! உங்க அம்மா, பாட்டியைப் பத்திச் சொன்னீங்க. அவங்க அம்மா, அந்தம்மாவோட அம்மா அவங்கள்ளாம்?”நிலா கேட்டபோது எனக்குப் பதில் சொல்லத் தெரிய வில்லை.“எல்லோரும் வீட்டைப் பார்த்துக்கிட்டவங்க தான் நிலா என்னைப் போல.”“அதென்னம்மா வீட்டைப் பார்த்துக்கிட்டவங்க? அவங்களுக்குன்னு ஒரு அடையாளம், தனித்துவம் இல்லையா?”“இருந்திருக்கும். …

>>

கரந்தை இந்து /எது என் முகம்?

ஹும் எத்தனை படங்கள் , எத்தனை விதமான வித்தியாசமான கேரக்டரில் அவள் நடித்து அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.எதிலும் சோடை போகாத அவளின் நடிப்பு எக்கச்சக்க புகழ், பணம், விருதுகள் எல்லாம் அள்ளிக் கொடுத்தது.அப்போதெல்லாம் தன் திறமைமேல் அவளும் மிகுந்த …

>>

முனைவர் சிவகாமசுந்தரி /நாகமணிஇரண்டு முகமூடிகள்

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தாள் மீனா. கையில் இரண்டு முகமூடிகள்.அம்மா: “என்னடி இது? பண்டிகைக்கா வாங்குன?”மீனா: “இல்லம்மா. ஒண்ணு ஆபீஸுக்கு. இன்னொண்ணு வீட்டுக்கு.”அம்மா: “புரியலையே?”மீனா: “ஆபீஸ்ல சிரிச்ச பொறுமையான முகமூடி போடுவேன். டார்கெட் ஆகலைனாலும் பரவால்லன்னு சொல்லுவேன். பாஸ் திட்டுனாலும் தலையாட்டுவேன்.”அம்மா, …

>>

நாபா.மீரா/விசுவாசம்

மேடம், இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டுடுங்க, இனிமே இந்த மாதிரி நடக்காது.போயும் போயும் ஒரு வாயில்லா ஜீவன்கிட்ட உன்னோட அல்பப் புத்தியைக் காமிச்சிருக்கயே.என் சாப்பாட்டுல கை வச்சிருந்தாக் கூடப் பரவாயில்லை. டாமியைப் பட்டினி போட்டுட்டியே!உன்னை நம்பித்தானே விட்டுட்டுப் போனேன்.இப்படி என் …

>>

கஸ்தூரி குருசாமி/முகமூடிகள்

லதா தன் படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அவளது கைகளில் இரு முகமூடிகள் ஒன்றில் வெகுளி, சோம்பேறி என்றும் இன்னொன்றில் மகளிர் திலகம், விருது எனவும் எழுதி இருந்தது. அக்கா தங்கை தம்பி அண்ணா எனப் பலரோடு பிறந்தாலும் அவள் யாருடனும் இணைந்து …

>>

கரந்தை இந்து/குரங்கு வேஷம்

ஏண்டிம்மா ஜானு என்றழைத்தபடி பக்கத்து வீட்டு மாமி அம்புஜம் வந்தாள்.” வாங்கோ மாமி உள்ளே ” என்றாள் ஜானு.” நீ தீவிர அனுமான் பக்தை என்பதற்காகக் கொடியில் காய்ந்த உங்க துணிகளை அந்த ஆஞ்சநேயரே வந்து வாலை வாலை ஆட்டிண்டு மடிச்சு …

>>

அர்ஜுனன் /முகமூடி

“உங்க வெற்றியின் ரகசியத்தைச் சொல்லுங்க”பிரபல நடிகையைப் பார்த்துப் பத்திரிக்கையாளர் கேட்டார்.தன் வீட்டு சுவற்றில் மாட்டியிருந்த அந்த இரண்டு முகமூடிகளை கையில் எடுத்துக்கொண்ட அவள் சொன்னாள்..“நான் எப்பவும் அணிஞ்சுக்கிற இந்த ரெண்டும் தான்”“இவைகளை நீங்க அணிஞ்சு நாங்க பார்க்கவே இல்லையே?”“இவை வெறும் உருவகம் …

>>

மரு.ச.கந்தசாமி/கன்னத்தில் குழி அழகு

காலையில் அலாரம் அடிக்கும் முன்னே எழுந்து பார்வதி” அம்மா காபி ரெடியா ?என்று கேட்டுக் கிச்சனுக்குள் ஓடினாள். அவள் அம்மா அம்புஜம் ” ஆமாண்டி எழுந்ததும் பல்லலம்பிண்டு காபிகுடிடா “என்றாள். பார்வதி பேங்கில் மேனேஜர் வேலை. காபி குடித்தபடியேபார்வதி” அம்மா இன்றைக்கு …

>>

அழகியசிங்கர்/ஒரு நாடக நடிகை

அவள் ஒரு நாடக நடிகை. பல பெண் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள்.அப்படி நடிப்பதால் அவளுக்கு அவள் யார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. கண்ணகி பாத்திரமேற்று நடிக்கும்போது அவள் ஆவேசமாக மாறி விடுகிறாள். திரௌபதி பாத்திரத்தில் நடிக்கும்போது அவள் எல்லா ஆண்களையும் ஒரு …

>>

சுஸ்ரீ/நூலகமும் போலி முகமும்

ரகோத்தமன் லைப்ரரியன் புதுசா வந்திருந்த புஸ்தகங்களுக்கு ஸ்டாம்ப் குத்தி ஏதோ எழுதி வேலை பாத்திட்டிருக்கறப்ப அவ வந்தா.எங்கயோ பாத்த முகம்போல இருந்தது.ஆனா கூண்டுக்குள்ள உக்காந்த கிளி மாதிரி இப்படியொரு முகம் வேணும்னே தன் அழகை மறைக்க வேஷம் போட்டது போல இருந்தா.வாரம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/தவிப்பு..!

அவளது முகம் அக்னியாய் எரிந்து கொண்டிருந்தது.“காலைலயே உங்களுக்கு நினைவு படுத்தினேன்ல. அப்போ சரின்னுட்டு இப்போ முடியாதுன்னா..? ஏங்க புரிஞ்சிக்கோங்க.. இப்போ ஒரு முக்கியமான நேர்காணல் நடத்துறேன். பாப்பாவை இப்போ உடனே கூப்பிடப் போக முடியாதுங்க” எதிர்த்துமுனையில் அவளுக்கு ஆதுரமான பதில் கிடைக்காமல் …

>>

புத்திசாலி ஓவியர்

ஒரு காலத்தில் வயதான திருமணம் ஆகாத ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் செல்வந்தியாக இருந்தாலும், அவளுடைய நடத்தையில் பல விசித்திரங்கள் இருந்தன. அவளுக்குப் பல வினோதமான ஆசைகள் இருந்தன. ஒருநாள், தனது உருவப்படத்தை வரைய ஒரு ஓவியரை அழைத்தாள். …

>>

ஒத்துழைத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்

ஒரு காலத்தில் பிளாக்கி மற்றும் பிரவுனி என்ற இரண்டு ஆண் ஆடுகள் இருந்தன. அவை இரண்டும் பரம எதிரிகளாக இருந்தன. ஒரு நாள், அவை ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தன. இரண்டும் எதிரெதிர் திசைகளிலிருந்து வந்தன. பாலத்தின் நடுவில் அவை நேருக்கு …

>>

ChatGPt/”குரங்கின் ஆசை”

ஒரு கிராமத்தில் ஒரு குறும்புக்காரக் குரங்கு வாழ்ந்து வந்தது.அது தினமும் வீடுகளைச் சுற்றி விளையாடும்.ஒரு நாள் ஒரு வீட்டின் கொடியில் துணிகள் காயவைக்கப்பட்டிருந்தன.அங்கே ஒரு சிவப்பு நிற சட்டை தொங்கிக் கொண்டிருந்தது.அந்தச் சட்டையைப் பார்த்த குரங்கிற்கு ஆசை வந்தது.மனிதனைப் போலச் சட்டை …

>>

அழகியசிங்கர்/மூன்று பெண்மணிகள்

வழக்கம்போல் 3 பேர்களும் கடற்கரையில் வந்து கொண்டிருந்தார்கள்.கடலை ஒட்டிய கிராமத்தில் அவர்களுக்குப் பணி. அதை முடித்துவிட்டு அவர்கள் இருப்பிடத்திற்கு வர வேண்டுமென்றால் கடற்கரையோடுதான் வர வேண்டும்.வரும்போது கடற்கரையில் காணப்படும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டு வருவார்கள். அதை விற்று வரும் தொகையைச் சமமாகப் …

>>

நாபா.மீரா/ஓய்வு

ஏண்டி அன்னம், ஏன் உம்முகம் ரொம்பச் சோர்வாத் தெரியுது, கேட்ட வீரம்மாவுக்கு பதில் சொல்லாமல் தன்னிச்சையாக நிமிர்ந்தும், மடிந்தும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் கடல் அலைகளை வெறித்தபடி நின்றிருந்தாள் அன்னக்கொடி.அடுத்த மாசம் நமக்குப் பணி ஓய்வு. அதுக்கப்புறம் இப்படி தெனமும் பார்க்க முடியுமான்னு …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!

லதா காலையிலிருந்து ஒரே பரபரப்பு.தென்காசியிலிருந்து மாமியார் வரப்போகிறார் என்பதால் சற்று கூட ஓயாது வேலை.நேற்று இரவே துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போட்டுத் தோய்த்துமொட்டை மாடியில் காயப் போட்டு விட்டாள்.லதாவின் இரண்டு செட், கணவன் குமாரின் இரண்டு செட், மகன் தீபக்கின் …

>>

அழகியசிங்கர்/நீலாவும் குரங்கும்

நீலா மாடிக்கு வரும்போது எப்போதும் பார்க்கும் அந்தக் குரங்கு கொடியில் சட்டையை மாட்டத் தயாராக இருந்தது.இதைப் பார்த்த நீலா ஆச்சரியப்பட்டாள். குரங்கு எல்லா உதவிகளையும் செய்தன. வாளியில் இருந்த துணிகளைத் கொடியில் உலர்த்தின.ஆச்சரியப்பட்டாள் நீலா. தெருவில் உள்ள எல்லாருக்கும் குரங்கின் செய்கையைக் …

>>

கோபாலகிருஷ்ணன்/விபரீதம்

“லட்ச ரூபாய்க்கு ஆசைப் பட்டது விபரீதமாகப் போனதே “ராணி கவலைப் பட்டாள்.அவள் சினேகிதி ராஜி யின் கணவர் விஞ்ஞானி. மனிதனை மிருகமாக மாற்றும் மாத்திரை கண்டு பிடித்திருந்தார். மீண்டும் மனிதனாக மாற்றும் மாத்திரை ஆராய்ச்சியில்.“லட்ச ரூபாய் தருகிறேன். அந்த மாத்திரையை உன் …

>>

ஒரு எதிரியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதே

ஒரு காட்டில் ஒரு பாம்பு வாழ்ந்து வந்தது. அது பறவைகளின் முட்டைகள், எலிகள், தவளைகள், முயல்களின் குட்டிகள் மற்றும் பிற சிறிய உயிரினங்களை உணவாக உண்டு வாழ்ந்தது. அது மிகவும் சோம்பேறியாக இருந்ததால், கொழுத்தும் பருத்தும் ஆன பாம்பாக மாறியது. அது …

>>

நேசத்தின் விலை / ஸ்ரீராம்

அதிசயமாக ஆசைப்பட்டு கடற்கரைக்கு வந்த பாவம், நேத்து ராத்திரி சுந்தரி தொலச்ச மோதிரத்தை இன்னிக்கு காலைல வேலைக்குப் போகும் முன்னால தேடி எடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையில் வந்து இருக்காங்க பானு சரசு சுந்தரி மூணு பேரும்.” கவனமா இருந்திருக்கக் கூடாதா …

>>

ஷைலஜா/மூன்று ரத்தினங்கள்

“இங்கதானே இதே நாளுல நாம நம்ம மூணு புள்ளங்களையும் பறிகொடுத்தோம்..இன்னிக்கு இருபத்திரண்டுவருசமாச்சி.. இருந்திருந்தாநம்ம குளந்தங்களுக்கு முப்பது வயசுக்குமேல ஆகிகண்ணாலம் காட்சில்லாம் நடந்திருக்கும்”ராமாயி தவிப்போடு சொல்ல,” ஆமா…இதே கடலுகரையில் வெளயாடிட்டு இருந்த உன் மவன், இந்த வேலாயி மவ, என மவன்ன்னு அல்லாரயும் …

>>

மரு. ச. கந்தசாமி/சிப்பிக்குள் முத்து

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொன்னாலும் சொன்னாங்க நாம் இந்தக் கடல் தாயை நம்பி தினமும் சிற்பி பொறுக்குககிறோம்” என்று மூன்று பேரும் புலம்பினர். ராக்காயி, மீனம்மா, பூவாயி மூன்று பேரும் ஊருக்குள் நிலம் நீர் காய்ந்து போக, தினமும் கடற்கரையோரம் …

>>

வைரமனம் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

செண்பகம் அந்த அழகிய கடற்கரை அருகில் உள்ள விடுதியில் தூய்மைப் பணி செய்கிறாள்.அருகில் உள்ள குப்பத்திலிருக்கும் இவள் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில்தான் அந்த விடுதி.அன்று காலை எழுந்திருக்கும்போதே பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் சுமதி, தனக்கு ஏதோ நோட்டுப் புத்தகம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/கடலோரத்து மனுசிகள்..!

பல தசாப்தங்களாக, கடல் அவர்களுக்கு வாழ்வாதாரமாகவும். உறவுகளைக் காவுவாங்கிய குடும்ப எதிரியாகவும் இருந்தது.இன்றும் பௌர்ணமியாதலால்.. அலைகள் ஒரு அமைதியற்ற, எச்சரிக்கும் தாளத்துடன் கரையில் மோதின.சுனாமிக்கு கணவனைப் பறிகொடுத்தவளும், ஆழ்கடல் புயலுக்கு தமையனை வாரிக் கொடுத்தவளும், எல்லை தாண்டினானென அண்டை நாட்டுக்குப் பிள்ளையைப் …

>>

மாலா மாதவன்/உழைப்பின் நிறம் சிவப்பு

“அடி ஆத்தீ! இதென்ன கிளிஞ்சல்லாம் ரத்தம் பூத்தாப்புல கெடக்கு?” பழனியின் பின் வந்த ராக்கம்மா சத்தமிட்டாள்.“அடிப் பழனி! உன் கால் ரத்தம் தானாத்தா! பாத்து வரக்கூடாதா? நமக்கெல்லாம் ஒரு செருப்பு வாய்க்குதா பாரு? போ! போய் அங்கிட்டு உட்காரு. உனக்கான கிளிஞ்சல்களை …

>>

கோபாலகிருஷ்ணன்/சுனாமி அலைகள்

2004 சுனாமி அலைகள் அவர்கள் குடும்பத்தையே விழுங்கியும் பசி தீராத கொடுமை. ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வ‌ந்து பார்க்கும் தாய்க்குலம். மறைந்தவர்கள் மண்ணிலிருந்து மீண்டு வருவார்களா என்ற ஏக்கம். அது நடக்காது என்று அறிவுக்கு தெரியும். ஆனால் மனது கேட்கமாட்டேன் என்கிறது.தேடல் …

>>

நாபா.மீரா/யுக்தி

குப்பை வண்டியக் கொஞ்சம் தள்ளி நிறுத்தக்கூடாதா, எங்க வீட்டு வாசல்தான் கிடைச்சுதா?தெருக்காரங்க எல்லாம் கன்னாபின்னான்னு குப்பையைக் கொட்டிட்டுப் போயிடறாங்க. வீட்டுக்குள்ள இருக்க முடியலை. சில சமயங்களில் ஹிஸ்டீரியா வந்த மாதிரிக் கத்தும் ராஜேஸ்வரியை தெருக்காரர்கள் துளிக்கூட லட்சியம் செய்யவில்லை. ஏன், அவள் …

>>

நாகேந்திர பாரதி/அடுத்தது என்ன

‘மறக்கணும்.. ம். அதுக்கு நான் ….. ‘ என்றவனின் இதழ்களைத் தன் இளம் விரல்களால் அழுத்தி , ‘நோ . இது மாதிரி பேசாதேடா’ என்று கண்ணீர்க் கண்களோடு வேண்டினாள் .‘நீ மட்டும் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டே, மறக்கணும்னு . எதை …

>>

சாந்தி சந்திரசேகரன்/எனக்கு மட்டும் ஏன்?

பச்சை புற்கள் பட்டாடை போலப் படர்ந்திருந்தது அந்த ஓவிய கண்காட்சித் திடலில்..!வண்ணக்கலவை சுவற்றின் முன். வானவில்லாய் நின்றிருந்த அந்த நவநாகரீக மங்கை.. காந்தம் போலக் காண்பவர்களைக் கவர்ந்தாள்.பன்னீர் ரோஜாவின் நிறத்தை ஒத்த அந்தப் புடவையில். காதோரம் ஆடிய லோலாக்கில் அருளின் இதயமும் …

>>

மாலா மாதவன்/இவனா? அவனா?

“போட்டோவைத் தந்ததிலிருந்து இப்படி இடிந்து போய் உட்கார்ந்திருந்தா எப்படி பாவனி? உனக்காக அலைஞ்சு திரிஞ்சு பிடிச்ச மாப்பிள்ளை இது. பேரு சஞ்சய். பெற்றோருக்கு ஒரே பையன்.காலேஜ் கூட உங்க காலேஜ் தான். உனக்குச் சீனியராய் இருப்பான். எங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. …

>>

எஸ். கோபாலகிருஷ்ணன்/சோக நடிப்பு

அழகான அந்த முகத்தில் வாழ்க்கையின் சோகம் பிரதிபலிக்கிறது. சாட்சியாகக் கண்ணீர் துளிகள்.“சபாஷ். உங்களைச் செலக்ட் பண்ணிட்டேன். எப்படி இந்த உணர்ச்சிகளைத் தத்ரூபமாகக் காட்ட முடிந்தது? ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறது. “சீரியல் இயக்குநர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.“நன்றி சார் “மதுமிதாவின் பணிவான பதில்.அவளுக்குத்தான் …

>>

மரு. ச. கந்தசாமி/கேளடி கண்மணி

” அப்படி என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி குலுங்கி குலுங்கி அழுகிறாய்டி?” என்று கிச்சனில் குக்கர் விசிலுக்கு மேல் அம்மா கல்யாணி இருமிக் கொண்டே மகளிடம் சத்தமிட்டாள். மகள் ராணி படைத்தவனே மயங்கும் அழகு உடையவள், கோபம் மூக்கின் மேல் ஏறி …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/கண்ணீர் துளிகள்

நீலாவின் கண்கள் எதையோ தேடியது. யாரையோ எதிர்பார்த்தது போல் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.இன்னும் சிறிது நேரத்தில் அவள் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட போகிறாள்.கண்ணீர் துளிகள் கன்னத்தைத் தொட்டு தரையில் சிந்தியது.புதிதாய் நியமனமான சேல்ஸ் மேனேஜர் அன்று மாலை அவளிடம் …

>>

ப. தாணப்பன்/ப்ரேமம்

அவளுக்கும் இப்படி ஏதேனும் வாங்கிக் கொடுத்திருப்பாய்தானே என்று சும்மா அவனைச் சீண்டிப் பார்க்க உதிர்த்த வார்த்தைகள் இத்தனை பாதிப்பை அவனுக்கு உண்டாக்கும் என்று தெரிந்திருந்தால் விளையாட்டுக்குக் கூட அவ்வாறு கேட்டிருக்க மாட்டேன்.கோபத்தில் தடித்த வார்த்தைகளைக் கூட அவன் உதிர்க்கவில்லை.சட்டென்று எழுந்த அவன் …

>>

சாக்லேட் பேபி/அப்புசிவா

“அவகிட்ட முதல்ல சம்மதம் கேட்டீங்களா?”“என்ன பாரு இப்ப இப்படி கேட்கற? எல்லாம் ஒன்னுக்கு நூறு தடவை கேட்டேனே”“இல்லைங்க, உங்க மக என்னைப் போல் போல்டு கிடையாது, உங்களை மாதிரி மனசுக்குள்ளேயே வச்சு உசுர வாங்குவா”“இல்லல்ல, மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுதான் சம்மதம் சொன்னா”“அப்புறம் …

>>

பி.ஆர்.கிரிஜா/மலர்ச்சி

வினிதாவிற்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம். வசிப்பதோ ஒரு சிறிய ஃப்ளாட்டில். மிகச் சிறிய பால்கனியில் முல்லை, குண்டு மல்லி, துளசி வைத்து நன்றாகப் பராமரிக்க ஆரம்பித்தாள். அவள் அம்மா திவ்யாவிற்கு அதில் துளியும் நாட்டமில்லை. “நீ எல்லாத்தையும் வெச்சுட்டுப் போய்டுவ…. …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /இறுதி ஆசை

அந்தப் பெண்ணைப் பார்த்தவன் அவள் சோகச் சித்திரமாக இருப்பதைப் பார்த்து, அயர்ந்து போய் விட்டான்.திருமணம்வரை போய்க் கழுத்தில் தாலி ஏறாத நிலைமை அவளுடையது.நண்பன் அரவிந்த்திற்காக நிச்சயிக்கப் பட்டவள் அவள். திருமண நாளன்று, சரியாகக் கழுத்தில் தாலி ஏறு முன் தன் நெஞ்சைப் …

>>

ஸ்ரீராம் /அக்காவின் ஜிமிக்கி

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டு நித்யாவுக்கு ஏனோ முன்னிருந்த உற்சாகமும், சந்தோஷமும் வரவில்லை.இந்த ஜிமிக்கிக்காக அக்கா வித்யாவுடன் போட்ட சண்டைகள் நினைவுக்கு வந்தன.அக்கா வித்யாவுக்கு அத்தை வாங்கித் தந்த ஜிமிக்கி அது. இவளுக்கும் அதன் மேல் ஒரு கண் இருந்தது. அவ்வப்போது வித்யா …

>>

எபனேசர் அருள் ராஜன்/நரம்புகளோடு பேசிக்கொண்டு இருப்பவனின் இசை

தொப்பிக்காரனென்று குழந்தைகளுக்கும் கிட்டார்க்காரனென்று பெரியவர்களுக்கும் அறிமுகமாகியிருந்த ரெங்கனுக்கு வயது 43. நாடோடியல்ல. பைத்தியக்காரனுமல்ல. இந்த இரண்டுக்கும் இடையிலான தூரத்தை இசைக்குறிப்புகளின் வழியாகக் கடந்து கொண்டிருப்பவன். நல்ல குரல்வளம் இருந்ததாலோ என்னவோ நாய்கள் வசியப்பட்டுப்போயிருந்தன. அவைகள் குரைத்து விரட்டுவதில்லை. அவனும் அப்படி நடந்து …

>>

கரந்தை இந்து/மகிழ்ச்சி மழை

“அப்பா இவர் தான் பிரபல கிடாரிஸ்ட் பைஜு தர்மாஜன் , நம் கேரளாவில் கொச்சினில் பிறந்தவர். என் மானசீக குரு. இவரால் தான் எனக்கு கிடார் மேல் ஆசையே வந்தது . நானும் ஒரு நாள் இவரைப் போல வாசிக்கணும்பா”” ஏன் …

>>

சுஸ்ரீ/ஒரு பஸ்கரின் தினம்

லண்டன் நகரத்தின் ‘டிரஃபால்கர் ஸ்கொயர்’ எப்போதும் போலப் படு பிசி.ஜான் வெக்சல் மெதுவாகத் தன் பொருட்களை முதுகிலும் கைகளிலுமாகச் சுமந்து கொண்டு கூட்டத்துக்குள் நுழைந்து மெதுவாய் அவர்களை விலக்கியவண்ணம் நடந்தான். டூரிஸ்ட் கூட்டம் நிரம்பி வழியும் நேஷனல் காலரிக்கு எதிரில் உள்ள …

>>

ஸ்ரீராம்/அப்பாவின் காதல்

ஹால் சோபாவில் உட்கார்ந்து இருந்த ஜேம்ஸ், சுவரில் மாட்டியிருந்த அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அப்பாவின் நினைவு தினம் .அவர் இப்படித்தான் அடிக்கடி கொல்லைப்பக்கம் ஒரு பெட்டியின் மேல் உட்கார்ந்து அம்மாவின் நினைவில் கிடார் வாசித்துக் கொண்டிருப்பார். அம்மாவும் அப்பாவும் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/இசை வழிந்தோடும்

“அப்பா..அண்ணா அடிக்கிறான்..”ஆத்யாவின் அலறலில் என் கையிலிருந்த காஃபி மேலே சிந்தியது. என்ன குருஷேக்த்ரம் இன்று என்ற பதைப்பில் உள்ளே ஓடினேன்.எட்டு வயது தங்கையின் மேல் கிட்டத்தட்ட அமர்ந்து அவளை அடி விளாசிக் கொண்டிருந்தான் என் மகன் ஆரவ்.பன்னிரண்டு வயது.” ஆரவ், என்ன …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கலைமகளும், திருமகளும்

பாபுவுக்கு எப்படி இசையில் அவ்வளவு ஆர்வம் வந்தது என்று தெரியாது.இளையராஜா இசையென்றால் உயிரை விடுவான்.‌அதுவும் அவர் இசையமைத்து வெளிவந்த எண்பது மற்றும் தொண்ணூறுகளில் வந்த படப் பாடல்களில் கிடாரை வைத்து அவர் செய்த இசை அற்புதத்தை மிகவும் ரசிப்பான்.படிப்பு ஏறாமல் பாதியிலேயே …

>>

மரு.ச.கந்தசாமி /முன் தினம் பார்த்தேனே

இளைய நிலா, பொழிகிறது “என்ற இளையராஜா பாடலை மோகன் பாட,அவன் விரல் கிட்டாரில் நடனமாடியது. மனமோ காற்றில் பறந்தது .எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன. கல்லூரி நாட்களில் மோகனும் கிடாரும் இணை பிரியா நண்பர்கள்.கல்லூரிக்கு தினமும் கிளாசுக்கு வருகிறானோ இல்லையோ, தினமும் கல்லூரி …

>>

சாந்தி சந்திரசேகரன்/இசைக்கலைஞன்..!

சூரியவொளி.. அந்தப் பிரபல இசைக்கலைஞனின் தற்போதைய நேரத்தைப் போல.. அஷ்டமித்துக் கொண்டிருந்தது.ஒரு காலத்தில் ஓராயிரம் கரங்கள்.. அவனின் ஒரு கையெழுத்துக்காக காத்திருந்த காலம் மாறி.. இன்று.. அவன் யாரென்று தெரியாத ஒரு நகரில்.. ஒரு பழைய மரப்பெட்டியின் மேல் தனியே அமர்ந்திருந்தான் …

>>

நாபா.மீரா/குறையொன்றுமில்லை கண்ணே!

“அம்மா, எங்க தலைமை ஆசிரியை இன்னைக்கு உங்களோடதான் பள்ளிக்கு வரணுமின்னு சொல்லிட்டாங்க., “அம்மாவின் முகத்தை எதிர்கொள்ளத் தயங்கி குனிந்த படியே பேசிய தேனருவியைப் பார்க்கப் பாவமாக இருந்தது யாழினிக்கு.சற்றே உதறலோடு தலைமை ஆசிரியை அறைக் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தாள் யாழினி.“உள்ளே வாங்க. …

>>

பி. ஆர்.கிரிஜா/இசை ஆர்வம்

தினேஷ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு படிப்பை விட கிடார் வாசிப்பதில் அதிக நாட்டம். அவன் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று பரிசுகள் வாங்குவான்.இந்தப் படிப்பும், இசையும் இவனுக்கு நல்ல வேலை வாங்கிக் …

>>

ஜி பி சதுர்புஜன்/மத்தளம்

பதைபதைப்புடன் என்னைப் பார்த்துக் கேட்டான் வைத்தீஸ்வரன். பழைய பள்ளி நண்பர்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து குருவாயூர் கிருஷ்ணனை தரிசிக்க வந்திருந்தோம். வெளிப்பிரகாரக் கம்பி வரிசைகளைப் பாம்பு போல வளைந்து வளைந்து கடந்து உட்பிரகாரத்திற்குள் அப்போதுதான் நுழைந்திருந்தோம்.எனக்கு வைத்தீஸ்வரனின் பதைபதைப்பு சுத்தமாகப் புரியவில்லை.“மொட்டையா …

>>

அழகியசிங்கர்/புனிதா

புனித பூமியான திருவண்ணாமலையிலா இந்த நிகழ்ச்சி நடந்தது.பானுமதி நிம்மதி இல்லாமலிருந்தாள்.ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் ரமண ஆச்ரமத்தில் சில நாட்கள் அவள் தங்குவது வழக்கம்.ஆனால் பேப்பரில் வந்து விழுந்த இந்தக் கொடூர செய்தியை அறிந்து திருவண்ணாமலையில் இருக்க வேண்டாமென்று தோன்றியது.சில கயவர்கள் புனிதா …

>>

கரந்தை இந்து /நீலவண்ண லிப்ஸ்டிக்

“ராணி கொஞ்சம் இங்கே வாயேன்” என்று அழைத்தான் அவள் கணவன் செந்தில்.” ஏங்க காலை நேரத்தில் நான் வேலை செய்யணுமா, வேண்டாமா? எதுக்குக் கூப்பிட்டீங்க ” என்ற கேள்வியோடு அவன் முன் வந்தாள்.“என் கூட பள்ளியில் படித்த சந்துரு திருநங்கை சாராவா …

>>

மரு.ச.கந்தசாமி/வைதேகி காத்திருந்தாள்

வாசலில் கிண்கிணி என சைக்கிள் மணி ஓசை கேட்க , வைதேகி படபடப்பானாள்.கண்கள் கடிகாரம் பார்க்க மணி8. “அம்மா நான் பள்ளிக்குச் செல்கிறேன்,” என உறக்க‌சொல்லிவிட்டு , லஞ்சை அள்ளி போட்டு, ஸ்கூல் பையுடன் துள்ளி குதித்து ஓடினாள். தெருமுனையில் விஜய் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நீல உதடுகள்

அலமேலு அவசரமாக சாப்பாட்டு கேரியர் அடுக்கிக் கொண்டிருந்தவள், திடீர் என்று மகன் குமார் நினைவு வரவே அவன் அறையைப் போய் பார்த்தாள்.“ஏண்டா ,இன்னும் குளிச்சு கிளம்பலை? டைம் ஆயிடுச்சு பாரு .சாப்பாடு கூட கட்டிட்டேன்” என்றவள் அவன் மேஜை மேல் இருந்த …

>>

அர்ஜுனன்/காதல் ஓவியம்

அந்த அம்மன்கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் இளைஞன், ஒரு ஓவியன் என்பது முதலில் நிறையப் பேருக்குத் தெரியாது.புதிதாக அந்த ஊருக்கு வந்த அவன், பொதுவாக யாரிடமும் பேசுவதில்லை.கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பவன், சில சமயங்களில் கரிக்கட்டியைக் கொண்டு ஒரு பெண்ணின் உருவத்தை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /பூத்தோடு

வெகு நாட்களாகத் தேடி வந்த தோழி அவள்.பள்ளி நாட்களில் ஊரில் ஒரு மஞ்சள் பூவைப் பறித்து, காதில் தோட்டிற்குப் பதில் மாட்டிக் கொண்டு வருவாள்.பள்ளிச் சீருடையான பச்சைப் பாவாடை, மஞ்சள் சட்டையின் வண்ணத்திற்கு அது மிகப் பொருத்தமாக இருக்கும்.காலங்கள் உருண்டோடி, இன்று …

>>

பி. ஆர்.கிரிஜா/ பரிவு

சுமதி ஒரு தனியார் அலுவலகத்தில் மேலதிகாரி. எப்போதும் கடு கடுவென்று முகத்தை வைத்திருப்பாள். வேலை அபாரம். எல்லோரும் அவளைப் போல் திறமையாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். இதனால் சக ஊழியர்களுக்கு அவளைப் பிடிக்காமல் போனது.ஒரு நாள் துப்புரவு பணியாளர் …

>>

அனுராதா ஜெயசங்கர்/நீல நெற்றிச்சுட்டி

விரிந்து பரந்த வெளி. பூரணமான ஒளி வெள்ளம். ஆயிரம் கோடி மின்னல்கள் விண்ணில் ஒன்றாய் உதித்து மண்ணைத் தீண்டியும் மறையாமல் ஒளித் தூண்களாக மாறி நிறைத்த பிரகாசம். சபேசன் அதனுள் தலை குப்புற விழுந்து கொண்டிருந்தார். புலன்கள் உணராவிட்டாலும் கண்களோ மனமோ …

>>

நாபா.மீரா/சம்போகம்

ஏண்டி எதையோ பறிகொடுத்தா மாதிரி எப்பவுமே இறுக்கமாகவே இருக்க… கேட்ட தோழி பாமாவுக்கு பதில் கூறாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் உமா.பாமா தோள்கள் பிடித்து உலுக்க… ஆங்… என்னடி கேட்ட..,சரியாப் போச்சு போ…உன் பிரச்சினைதான் என்ன…என்னத்தைச் சொல்ல… பொறந்த வீட்டுல சாப்பாட்டுக்கே …

>>

ஸ்ரீராம் /இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே..

பழசாகி பாதி ரசம் போன கண்ணாடியில் பார்த்து பொட்டு வைத்துக் கொண்ட போது “நீ பேசறதுக்கு முன்னாடி உன் கண்ணு பேசுதடி” என்று பாபு சொல்வது காதில் கேட்பது போல இருந்தது விஜிக்கு. சின்னவள் கண்ணாடியில் இவளுடைய லிப்ஸ்டிக்கால் கிறுக்கி வைத்து …

>>

சாந்திசந்திரசேகரன்/அவள்..!

அந்த பூர்வீகத்து தாத்தா வீட்டினை விற்பதற்காக, இளைய கண்ணன் ஊருக்கு வந்தான்.விற்கும் முன் அந்த வீட்டில் இருந்த சில பழுதுகளை சரிசெய்ய பொறியாளர் ஒருவரையும் வரச்சொல்லி இருந்தான்.பொறியாளர் வர தாமதமாகவே, வீட்டைச் சுற்றிப் பார்க்க..அவனது பால்யம் மொத்தமும் கண்ணனின் கண்முன் காட்சிகளாய் …

>>

கரந்தை இந்து /அக்கா எனும் தாய்

அந்த ” ஆரண்யா காப்பிக் கடை ” காப்பி, டீ இரண்டும் குடிக்கும் யாரையும் மறுபடி வரச் சொல்லும் சுவையுடன் இருக்கும்.சந்தோஷ் தனக்கு டீயும், சங்கீதாவுக்கு பில்டர் காப்பியும் ஆர்டர் செய்தான்.“சொல்லு சங்கீதா , எதுக்கு வீட்டுக்குப் போகும் முன் இங்கே …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/முடிவு

“ராம், உங்க முடிவில் மாற்றம் இல்லையே?”” இல்லை பிரியா, எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் மாறப் போறது இல்லை.”” பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை ராம்.அது ஏன் புரியமாட்டிங்குது?”” பேசினதையே பேச வேண்டாம் பிரியா. நடக்கப் போவதைப் பார்ப்போம்.”” …

>>

அ. கௌரி சங்கர் / “நாளை நமதே “

“அருண், எதற்காக வரச்சொன்னாய் ?” – காபியை துளி துளியாக குடித்துக்கொண்டு இருந்த ஹேமா கேட்டாள்.“காரணம் இருக்கிறது hemaa – இன்றைக்கு நமக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது, ” பதில் சொன்னான்.கையில் இருந்த கோப்பையில் இருந்த காபியை அவன் ரசித்து …

>>

நாகேந்திர பாரதி/காபி வேளை

‘அப்படி என்னங்க அவசரம், நேரே ஆபிசில் இருந்து இங்கே வரச் சொல்லிட்டீங்க. நீங்களும் வீட்டுக்குப் போகாம. பையன் அத்தையை என்ன பாடு படுத்துறானோ. சீக்கிரம் சொல்லுங்க , கிளம்பலாம். ‘ என்று காபியை அவசரமாக உறிஞ்சியபடி கேட்டாள் கீதா .‘முதல்லே காபியை …

>>

மாலா மாதவன்/காற்றோடு கைகுலுக்கு

இரண்டு ஆவிகள் பேசிக் கொண்டன.“பார்த்துக் கொண்டே இரு! நான் நீங்குவதற்குள் என்னைக் கொண்டவள் இவனிடம் காதல் சொல்லி விடுவாள்!”“சட்! அவளைத் தீண்டாத நீயே இப்படிப் பேசும் போது ஏற்கனவே அவனைத் தீண்டி விட்ட நான் அவன் உள் மனக் கிடக்கையை அறியாமலா …

>>

சாந்திசந்திரசேகரன் /இரவில் விழிக்கும் இன்பக்காதல்..!

அந்த நவநாகரீகக் காபி கடையில் அவர்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை.விளக்குகளின் வெளிச்சம் மட்டுப்பட்டாலும் நிலவொளியில் அவள் தேவதையாகத் தெரிந்தாள்.பகலினும் இரவில் மோகினியாய் மயக்கும் மங்கையின் மர்மம் அறியாத அவன் கண்கள் அவளை விட்டு விலகவில்லை.இதை அறிந்த அவள் இதழ்கள் ஒரு …

>>

சசிகலா விஸ்வநாதன்/கனிந்த காதல்

பேராசிரியர் காளிமுத்தனும் துறைத்தலைவை கமலாக்ஷியும் மருத்துவ கல்லூரியின் தேநீர் விடுதியில் அமர்ந்திருந்தனர். பணிமாற்றத்தில் காளிமுத்தன் மதுரை செல்ல இருக்கிறார்.‘இனி என்ன’ என்ற கேள்வி இருவர் மனத்திலும்.‘ இனியும் காத்திருப்பது எதற்காக?நாளையே வடபழனி கோயிலில் மணமுடித்து ஒன்றாகவே மதுரை சென்று வாழ்க்கையை ஆரம்பிப்போம்பெட்டர் …

>>

அழகியசிங்கர்/சரியாய் வராது

திலக் அவளைச் சந்தித்தப்போது, விழியை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் சொன்னாள்: “எனக்கும், உனக்கும் சரியாக வராது. “அவள் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு போனாள். விஜயலக்ஷ்மி கண்ணன் /மாஸ்டர் பிளான் – விருட்சம் நாளிதழ்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /மாஸ்டர் பிளான்

ஊருக்கு வெளியே மலை அடிவாரத்தில் இருந்த அந்த சிறிய தேநீர் விடுதி முன் காரை நிறுத்தி ராபர்ட் கிளாராவுடன் உள்ளே சென்று ஒரு மூலையில் இருந்த வட்ட மேஜையருகே போட்டிருந்த எதிர் எதிர் நாற்காலிகளில் அமர்ந்தனர்.இந்த இடம் இருவருக்கும் பழக்கப் பட்ட …

>>

அர்ஜுனன்/தவறிய கணக்கு

அவர்கள் இருவரும் ஒரு சிற்றுண்டி கடையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.காபி கிண்ணத்தில் எழுந்த நீராவி, புது மணத்துடன் ஆடிக்கொண்டிருந்தது.அவனது முகம் துண்டுகளாக உடைந்த கண்ணாடி போல இருந்தது. அது அவனது உடைந்த மனதை வெளிப்படுத்தியது.அவளது பார்வை, அவனை குற்றம் சாட்டுவது போல இருந்தது.“நாம் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /புலனப் புகைப்படம்

பவித்ராவுக்கு ஒன்றும் பெரிய ஆசை இல்லை.புதுக் கணவன் அரவிந்த்துடன் பால்கனியில் அமர்ந்து,காஃபி அருந்துவது போல ஃபோட்டோ எடுத்துக் கொண்டு , புலனத்தில் போட வேண்டும்.கூட்டுக் குடும்பத்தில் நடக்குமா? அரவிந்த் வாங்கித் தந்த பூவைக் கூட ஓரகத்தியருக்கும், நாத்தனார்களுக்கும் பங்கிட்டுத் தர வேண்டும்.அமெரிக்காவில் …

>>

ஸ்ரீராம் /நாளை முதல் நீ வேறோ நான் வேறோ…

அந்த காஃபி ஷாப் இருவரும் ஏற்கனவே பலநாட்கள் வந்த இடம்தான். கல்யாணத்துக்கு முன் தினமும் சந்தித்த இடம். அதன்பின் இப்போது விவாகரத்து தீர்ப்பாகி இன்று மறுபடியும் இங்கே.. பிரிவுக்கு முன் கடைசியாக ஒருமுறை இங்கேதான் சந்திக்க வேண்டும் என்று இருவருக்குமே தோன்றியது …

>>

பூ.சுப்ரமணியன் /வெறுங்கை                            

                    அந்த கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாவைக்கூத்து நடைபெற்றது. பாவைக்கூத்தில் இராமாயணக்கதையைக் காண கிராமமக்கள்  ஆர்வமுடன் கூடியிருந்தார்கள்.         கூத்து நடத்துபவன் ஆண் குரலிலும் பெண் குரலிலும் தோல்ப்பாவையை குரலுக்கு ஏற்றபடி  திரைக்குள்ளிருந்து ஆட்டி ஆட்டி கிளைக் கதையை உணர்ச்சியுடன் கூறிக்கொண்டிருந்தான்.         …

>>

அழகியசிங்கர்/வேண்டாம் இனிமேல்

“ஏன் இங்கே தேடி வந்தாய்” என்று கேட்டாள் வைஜெயந்தி. “பொழுது போகவில்லை. அதனால் வந்தேன்,”என்றான் சுந்தர்.“பொழுது அபோகவில்லை என்றால் இங்கே வருவதா? அலுவலகத்தில்தான் உன் தொல்லை தாள முடியவில்லை.”“பிடித்தமான பெண்ணைப் பார்ப்பதால் தப்பில்லையே?”“காதல் கீதல் என்று உளறப் போகிறாய்?” என்று அவனை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பார்வையின் பொருளென்ன?

அந்த மதுமிதாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பிடிக்காது.அவளும்,அவளது பல வண்ண உடையும்,ஒற்றைக் கண் பார்வையும்!அவளுக்குக் கண்டிப்பாக வயது முப்பத்தைந்தைக் கடந்திருக்கும்.எப்பொழுது பார்த்தாலும் கல்லூரி மாணவனான சுரேஷைப் பார்ப்பதும், காரணமின்றி சிரிப்பதும் அவனுக்கு வெறுப்பையே தந்தன.நண்பர்கள் வேறு இவனை,” பார்ட்டிக்கு ஒரு கண் இல்லை …

>>

நாபா.மீரா/எது அழகு

மாநில அழகிப் போட்டிக்கு அணிவகுத்து நின்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த முதன்மை நடுவர் அருகில் அமர்ந்திருந்த சக தோழியிடம்….அதோ…அங்கே பேக்கு மாதிரி முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கே…. தமிழ்நாட்டில ஏதோ கிராமமாம்…. இதெல்லாம் இந்தப் போட்டியில் கலந்துக்கலைன்னு யாரு அழுதா….முதலில் …

>>

அர்ஜுனன்/மர்ம ஓவியம்

காட்டின் எல்லையில் இருந்த குகையின் சுவற்றில் வரையப்பட்ட அந்த பெண் ஓவியம் சற்று வித்தியாசமானது.அவளது கழுத்து சாய்ந்திருப்பதும், ஒற்றைக் கண்ணோடு இருப்பதும் பார்த்தவுடன் தெரியக் கூடியவை.அதன் கையில் தெரியும் சிவப்புக் கோடு, ரத்தக் கறை என்றும் அந்த ஓவியத்தின் பக்கத்தில் சென்றவர்கள் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/சிறப்புக் குழந்தை

அன்று வகுப்பில் உமா டீச்சர் பெரிய ஒரு பெட்டி நிறைய மரத்தாலான சிறிதும் பெரிதுமாக பல வடிவங்கள் , பல வண்ணங்களிலும் கொண்டு வந்தவைகளை , இரண்டு மேஜைகளை ஒன்றாக சேர்த்துப் போட்டு அதன் மேல் பரப்பினாள்.ரம்யா நான்காவது வகுப்பு படிக்கும் …

>>

சுஸ்ரீ/வேறென்ன வேண்டும்

“கணேசா சாயந்தரம் சீக்கிரம் வந்துடு பொண்ணு பாக்கப் போறோம்”அம்மாஎன்னவோ 32 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை. உற்ற நண்பன் வேலாயுதத்தின் திருமணம் நடந்து 8 வருஷம் இருக்குமா,அழகான பெண்னு ஆசையா கல்யாணம் பண்ணிண்டான் இப்ப பாவம் படற மன வேதனை சொல்லி …

>>

கௌரிசங்கர்/மேற்பார்வை

காலையில் எட்டு மணிக்கே கணேசன் வீட்டிற்கு வந்து விட்டான். மாலை மூன்று மணிக்கு வீட்டிற்கு திரும்பிவிடலாம் என்று சொன்னான். வேலை அவ்வளவு கடினம் இல்லை. சுலபம் தான். மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும். வேலை முடிந்தவுடன் சம்பளம் தந்து விடுவார்கள் என்றும் …

>>

நாபா .மீரா/சுமைதாங்கி 

நான் சொல்லுறதைக்  கொஞ்சம் பொறுமையாக் கேளுடிகீது ….இனியா மகப்பேறு மருத்துவமனையின் ஆறாம் தளத்திலிருந்து மின் தூக்கி வாயிலாகக்கீழ்த் தளத்திற்கு இறங்குகையில் தோழியிடம் வாதிட்டாள் மீனலோசனிதோழி பேசியது காதில் விழுந்தாலும் அமைதி காத்தாள் கீதப்பிரியா. அருகில் அவள் புடவைக் கொசுவத்தைப் பற்றியபடிசற்றே தெளிவற்ற நிலையில் ஒரு ஐந்து வயதுப் பெண்.உன் புருசன்… ஏற்கனவே …

>>

அர்ஜுனன்/பிரசவ வைராக்கியம்

வீட்டிற்குள் நுழைந்த அவள், சுவற்றில் சாய்ந்து நின்றாள்.உள்ளுக்குள் மூச்சு மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.“உன்னால் தான் இந்த தவறு நடந்தது”அலுவலகத்தில் கத்திய மேலாளரின் குரல், மனதுக்குள் வீடுவரை வந்து விரட்டியது.‘அந்த தவறுக்கு காரணம் நான் இல்லை, நீங்கள்தான் என்று சொல்லும் துணிச்சல் நமக்கு …

>>

சந்தியா ஷங்கர்/அந்த கனவு

அந்த கனவு அவளுக்குத் தினமும் இரவில். ஏதோ ஒரு உருவம் அவளிடம் என்னமோ எதிர்பார்த்து நிற்கிறது. அந்த உருவத்தை உத்து பார்த்தாள் மங்கா.தலை ஒருபுறம், கைகள் பக்கவாட்டில் இல்லாமல் பொம்மலாட்டம் மாதிரி உணர்விழந்து, கால்கள் மட்டுமே தாளம் போடும் விதத்தில்.என்ன உருவம் …

>>

ஜெ.பாஸ்கரன்/சிறை

கட்டம் கட்டமாகக் கம்பிகள் கொண்ட தடுப்புக்கு அந்தப்புறம் ஒரே கூச்சல்.“எலே, எப்டி இருக்கே லே?” “நல்லா இருக்கிறீங்களா?” “வருத்தப் படாதீங்க, இன்னும் கொஞ்ச நாள்தான்…” “உனக்குப் பிடித்த பூந்தி..” “வக்கீல், கேஸு நம்ம பக்கம் தான் ஜெயிச்சிடும்னு திடம்மா சொல்றாரு..”இந்தப் பக்கம் …

>>

பி.ஆர்.கிரிஜா/தோற்றம்

ரமாவிற்கு தன்னுடைய ஒரு கால் மற்றொரு காலை விட சின்னதாக இருப்பதால் சற்றே விந்தி நடப்பாள். ஆரம்பத்தில் பள்ளியில் படிக்கும்போது சக மாணவ மாணவிகள் கேலி செய்யும்போது அழுகை முட்டிக் கொண்டு வரும். நாளடைவில் அவற்றை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். அவள் அப்பாவின் …

>>

சுஸ்ரீ/காற்று வெளியிடை

இளம் தென்றல் அவளை அப்படியே வருடிச் சென்றது,அந்தக் காற்றுக்கும் அலைகளின் இசைக்கும் ஏற்ப தலைமுடி சுருண்டு விளையாடியது.வேகமாக கால்களை நனைக்க வந்த வெண்ணுரை அலைகள் கோபமாக வந்து கால்களில் விழுந்து வணங்கி விட்டு அமைதியாகத் திரும்பியது.தூரத்தில் இரண்டு மீன் பிடி படகுகள் …

>>

ஸ்ரீராம்/என்னுள்ளில் ஏதோ

தான் ஏதோ ஒன்றைத் தேடுவது போலவும், அது கிடைக்கவில்லை என்றுமே எப்போதும் தோன்றுவது போல இருக்கும் சத்யாவுக்கு.மற்றவர்களுடன் தாமரை இலை தண்ணீர் போல பழகுவதும், தனக்குள்ளேயே உள்ளுக்குள்ளே ஆழ்ந்து போவதும், மற்றவர்களிடமிருந்து இவளை கொஞ்சம் விலக்கித் தான் வைத்திருந்தது.உண்பதுவும், கழிப்பதுவும், ஊடுவதும், …

>>

நேற்று இல்லாத மாற்றம் – ஸ்ரீராம்

அதென்னவோ KK க்கு எப்போதும் அடுத்த பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதே வழக்கமாகிப் போனதை நினைத்து மருகினாள் ரியா.ஒவ்வொரு முறையும் அவன் சொல்லும் முகங்களை தன் முகத்தோடு ஒட்ட வைக்க முயல்வாள்.அதற்குள் அவன் அடுத்த முகத்தைக் கொண்டு வந்து விடுவான்.எப்போதும் கழுத்தில் …

>>

நாபா.மீரா/சித்திரம் பேசுதே

அப்பா எங்க ஸ்கூல்ல சித்திரக் கதைப்போட்டி ஒண்ணு அறிவிச்சிருக்காங்க…நா நல்லா ஓவியம் வரைவேங்கறதால எங்க கிளாஸ் மிஸ் என் பெயரைக் கொடுத்திட்டாங்க.உங்களத்தாம்பா நம்பியிருக்கேன் என்ற ஹரீஷிடம்….ஜமாய்ச்சுடலாம் கண்ணா…. சிறிது நேரம் செலவழித்து ஒரு காட்சியை மையப்படுத்தி ஓவியம் ஒன்று வரைந்து நீட்டினார்.சுத்தியிருக்கிற …

>>

ராஜாமணி/பிம்பச் சிறை

“சிறந்த நடிகை” விருதுடன் அனிதா விழாவிலிருந்து வீட்டுக்குத் திரும்பினாள்.விழாவின் ஒளியும் கைதட்டலும் வீட்டுக்குள் வரவில்லை; பெரிய மாளிகை அவளின் தனிமையைக் கூட்டியது.நகைகளை கழற்றி, ஒப்பனைகளை துடைத்து சோபாவில் அமர்ந்தாள்.டிவியில் இளம் நடிகைகள், “அனிதா எங்கள் ஆதர்சம்” என்றார்கள்.அதை கேட்ட அனிதாவுக்கு மனம் …

>>