S அர்ஜுனன் /தத்துவமஸி

தெருவில் பஜனைப்பாடலை பாடிக்கொண்டு சென்றவர்களை
வேடிக்கை பார்த்த சிறுவன் தினேஷ்..
“அம்மா.. நீயெல்லாம் இப்படி பஜனை பாடுற மாதிரியோ.. அடிக்கடி கோவிலுக்கு போகிற மாதிரியோ தெரியலையே?.. ஏன்?..” என்றான்.
தாய் நிதானமாக பதில் சொன்னாள்..
“பக்தி என்பது இப்படி வெளிப்படையா காண்பிக்கிறது மட்டுமில்ல.. எல்லா உயிரும் கடவுள்னு நினைச்சா எங்கேயும் எப்பவும் வணங்கலாம்..”
“அப்படியா?..”
“ஆமா.. அதனால்தான் நமது பிரார்த்தனையின் போது ‘அஹம் பிரம்மாஸ்மி’ – நான் பரம்பொருளாக இருக்கிறேன் – என்றும், அடுத்தவரை வாழ்த்தும்போது ‘தத்துவமஸி’ – நீ அதுவாக (இறைவனாக) இருக்கிறாய் – என்றும் சொல்லும் வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது..” என்று முடித்தாள் அவள்.


One Comment on “S அர்ஜுனன் /தத்துவமஸி”

Comments are closed.