
வயிறு வலிக்குது அப்பா” என்றாள் சின்ன மகள்
.
“எனக்கும்” என்றான் அவளைவிட சின்னவன்.
எதுவும் சொல்லாமல் மயங்கிக்கிடந்தது கைக்குழந்தை.
அவனின் குழந்தையை ஒத்திருக்கும் அம்மாவும் மயங்கியிருந்தார்.
“எத்தனை நாள் அடைபட்டிருக்க வேண்டும்? எதனால்?” கேட்டாள் மனைவி.
“யாருக்குமே தெரியாதே” என்றான் கணவன்
.
“நாமென்ன தீவிரவாதம் செய்தோம்?” அவள்.
“பிறந்ததே தீவிரவாதம் தானே” அவன்.
“வெளியே நாய்கள்கூட சுதந்திரமாக விளையாடுகிறதே?” கேட்டாள் மகள்.
“அவை மனிதனாக பிறக்கவில்லையே” என்றான் அவன்.

One Comment on “அப்புசிவா/உயிரி”
Comments are closed.