பி. ஆர்.கிரிஜா/நம்பிக்கை

தொலை தூர நடை பயணம்
வறண்ட நீர் நிலை
பிளந்த நிலம்
கரடு முரடான பாதை
வெட்டப்பட்ட மரங்கள்
பசுமையற்ற மலை
நடந்து கொண்டே இருந்தேன்
தூரத்தில் பார்வையற்ற மனிதன்
முடவனுக்கு உணவளிக்கும் காட்சி
மனித மனதில் வற்றாத ஈரம்
இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்
நடை தொடர்ந்தேன் நம்பிக்கையுடன் !