🌷க.சோமசுந்தரி.
1.நதியில் நனைந்து இரவில் காய்கிறது
மிதக்கும் பௌர்ணமி நிலவு!
- உன் கோபத்தில் அழகாக வெளிப்படுகிறது
சொல்லாத உன் பிரியம்! - நீ பேசாத என் சொற்கள்
மொழி இன்றி தவிக்கிறது! - இரு இதயங்கள் எழுதிச் செல்கிறது
மௌனமாய் ஒரு கவிதை! - வெற்றிடத்தின் அடர்த்தியில் கனமாய் நிற்கிறது
நினைவுகளின் பெரும் சுமை! - தொடரும் பயணங்கள் முடிய வில்லை
கரை சேராத முகில்கள்!