குறள் என்பா

🌷க.சோமசுந்தரி.

1.நதியில் நனைந்து இரவில் காய்கிறது
மிதக்கும் பௌர்ணமி நிலவு!

  1. உன் கோபத்தில் அழகாக வெளிப்படுகிறது
    சொல்லாத உன் பிரியம்!
  2. நீ பேசாத என் சொற்கள்
    மொழி இன்றி தவிக்கிறது!
  3. இரு இதயங்கள் எழுதிச் செல்கிறது
    மௌனமாய் ஒரு கவிதை!
  4. வெற்றிடத்தின் அடர்த்தியில் கனமாய் நிற்கிறது
    நினைவுகளின் பெரும் சுமை!
  5. தொடரும் பயணங்கள் முடிய வில்லை
    கரை சேராத முகில்கள்!