பொய்மை/செ.புனிதஜோதி

உன்னை நிரூபிக்க
எத்தனை வண்ணங்களைப்
பூசிக்கொள்வாய்
கழுவக்கழுவ
மீண்டும் அப்பிக்கொள்கிறது

மாறி மாறி
பூசிக்கொண்ட வண்ணத்தில்
உண்மை போல்
வெண்மையும் ஓர் ஓரத்தில்
நின்று
வெறித்துப்
பார்க்கிறது..

நீர் போல்
நிறங்களற்ற தன்மேல்
வண்ணம் பூசும்
உன்னைப் பார்த்து..
புன்னகையோடு நிஜம் கடத்து செல்கிறது

குழந்தையைப் போல்
களங்களற்ற உள்ளத்தில்
நிழலைப்போல்
கருமையைப்
படர்த்தினாலும்

நிஜத்தின்
முன்
பிரம்மாண்ட விஸ்தரிப்பைக்
காட்டமுடியாமல்
கைக்கட்டி நிற்கிறது