நகுலனின் சுருதி கவிதைகள்


நகுலன் 

லயம்

பிற்பகலில்
என் அறையில்
நான் தனியாக
“கூ கூ”
என்று குரல் கொடுக்கும்
இந்தக் குயில்
யாருக்கு
எதைச் சொல்கிறது?

\

சிலர்

சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள்.