ஆண் குதிரையும் பெண் குதிரையும்

லேவ் தல்ஸ்தோய் 

பகலும் இரவும் புல்வெளியில் மேய்ந்த பெண் குதிரை உழவில்லை. ஆனால் ஆண் குதிரை இரவில் மட்டும் மெய்ந்து பகலில் உழுத்து. ஆகவே பெண் குதிரை அதனிடம் சொன்னது:

”என் நீ உழுகிறாய்? உன்னிடத்தில் நானாக இருந்தால் போகவே மாட்டேன். அவன் என்னைச் சாட்டையால் அடிப்பான் என்றால் நானோ அவனைத் திரும்ப உதைப்பேன்.”

மறுநாள் ஆண் குதிரை பெண் குதிரை சொன்னது போலச் செய்தது. அது கீழ்ப்படியாமல் போய்விட்டதைக் கண்ட அதனது எசமானன் அதற்குப் பதிலாக உழுவ தற்குப் பெண் குதிரைக்குக் கடிவாளம் மாட்டினான்.