
மழைதூறுகிற மாலைநேரம்
நனைந்து நடந்து கொண்டிருந்தேன்.
ஓடிவந்து
கறுப்புக்குடை விரித்துத்தந்தாய்.
அதனடியில் அடைக்கலம் புகுந்து
வீடு சேர்ந்தேன்
இன்று
ஓசையின்றி பெய்கிறது
நீண்ட மழை
எங்கு
நனைந்து கொண்டிருக்கிறாயோ
அறியேன்.
தெரிந்திருப்பின்
எடுத்து வந்திருப்பேன்.
திருப்பித்தர
மறந்துபோன
உன் குடையுடன்

Aha !
மழையில் குடை பிடிப்பது சுகம்.மழையில் குடை இல்லாதது வலி