எஸ்ஸார்சி கவிதைகள்

25/4/24

நாடும் நடப்பும்

தாங்கமுடியாத வெயிலும்
குளிரும் மழையும்
வெள்ளமும்
பருவமாற்றத்தால்
ஓயாமல் சொல்லி
வருகின்றனர் விஞ்ஞானிகள்.
அறிவியலாளர்கள்
அரசுக் கட்டிலுக்கு ஆர்வமாய் வருவதில்லை.
புவியின் வெப்பத்தைக்
குறைக்கமுடியாமல்
நிகழ்த்தும்
போர்களால் கூட்டிக்கொண்டே போகிறோம்
அன்றாட வாழ்க்கையே
இல்லை என்றாகும் போது
புவியின் வெப்பக்கூடல்
பற்றி எங்கே சிந்திப்பது
தீவிரவாதிகள் தொடங்கும்
கலகங்கள் போர்களாய்
முடிகின்றன
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் முஸ்தீபு
பாலஸ்தீனத்தில் ஓயாச்சண்டை
காசா முற்றுகை
இஸ்ரேலுக்கு வம்பே தொழிலாகி நிற்கிறது
ரஷ்யா புடினும் தொடங்கிய
போரை நிறுத்துவதாயில்லை
யார் அழிந்தால்
எனக்கென்ன வென்று
சாராயம் விற்கும்
அரசு போலே
அமெரிக்க ஜோபைடன்.


26/4/24

நாம்தான்

காசு சற்று கூடுதலாகக்
கொடுத்தால்
வரிசையில் நிற்காமல்
சாமிகிட்டே
சட்டென்று போய் நிற்கலாம்
சந்நிதி அய்யருக்கு
கொஞ்சம் சில்லறை
கொடு
பெரியமாலையாய்
கழுத்தில் விழும்
பிரசாதம் கையில் வரும்
சாமி முன்னே
கூடுதலாய் நின்று தரிசிக்க வாய்க்கும்
இது தவறு
இதில் மாற்றம் வரவேண்டுமென
விருப்பம் ஏதும் நமக்குண்டா?
ஒன்று பிள்ளையாரை உடைப்போம் இல்லை
பிள்ளையார் கரைப்பு ஊர்வலத்தில்
மேளம் கொட்டிக்குதிப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன