நாகேந்திர பாரதி/இன்ப வாழ்க்கை


————
இரை தேடக் கிளம்பி விட்ட
பறவைகளின் இசை

வழி அனுப்பி வைக்கின்ற
இலைகளின் ஓசை

வரவேற்கும் ஆகாயம்
பசியாற்றும் பூமித்தாய்

சுற்றிக் காண்பித்த
சூரியனும் இளைப்பாற

நிலவின் வெளிச்சத்தில்
வீட்டின் வழி தெரியும்

இயற்கை காட்டுகின்ற
இன்ப வாழ்க்கை நிலை

———