முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /காஞ்சிப் பட்டுடுத்தி….

பவித்ராவுக்கு ஏன்தான் இந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறோமோ என்று எரிச்சலாக இருந்தது .சிறிய விஷயத்தை அடைவதற்குக் கூடக் கணக்குப் பார்ப்பதும், போராடுவதும் சே…எப்படியோ கஷ்டப்பட்டு காசைச் சேமித்து, வெகு நாள் ஆசையான ஒரு பட்டுப் புடவை வாங்கக் கணவனுடன் கடைக்குக் …

>>

வளவ. துரையன் கவிதைகள்

13-2-26- அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதைகள் ஒருவர் பின் ஒருவர்சட்டையைப் பிடித்துக் கொண்டுதொடர்வண்டி ஓட்டம் மாலதி வீட்டு வாசலில்அவளை இறக்கிவிடும்.வரும்போது ஏற்றிக் கொள்ளும். பயணச் சீட்டுகள்இல்லா இலவசப் பயணம் வருபவரைப் பொருத்தேபெட்டிகள் நீளும். முதலில் இருப்பவர்கூக்கூ …

>>

அர்ஜுனன்/காதலன் வரவு

மரக்கிளையில் சாய்ந்து அவள் கண்களை மூடி நின்றாள்.பொருள் ஈட்ட சென்ற தலைவனைப் பிரிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அவன் வராத ஏக்கம் அவளது நெஞ்சில் கனலாய் பூத்தது.அப்போது அவள் கூந்தலில் ஒரு பச்சைநிற வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது.அது தலைவன் வருகையை …

>>

சித்தவனம்/மண்ணடி பாபா

அருள்வெளி சித்தர் பாபா சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த ஒரு அண்மை கால சித்தர்.இவர் தொடக்கத்தில் சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து, பின் ஞானம் பெற்று சமூக வாழ்வியல் உணர்வுகளில் இருந்து விட்டு விடுதலையாகி சித்தராக பரிணமித்தார். (evolved/transformed)இவர் …

>>

வளவ.துரையன்

திருப்பாவை-பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய …

>>

சுயம்பிரகாசம்/ஸ்ரீவல்லி ராதிகா

தமிழில்: கௌரி கிருபானந்தன் லேசாகக் கசங்கியிருந்த காட்டன் புடவையில், தலையில்  கோடாலி முடிச்சுடன் கையில் காய்கறிப் பையுடன் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த பெண்மணியை பானுமதி என்று உடனே என்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. சாலையின் மறுபக்கம் காரை நிறுத்திவிட்டுப் பழங்களை …

>>

வளவ.துரையன்/பேச்சு

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 2 தலைவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கீழே தொண்டர்கள் உட்கார்ந்து கேட்கிறார்கள்.கீழே இருப்பதால் இவர்கள் தொண்டர்கள்தலைவர் எப்பொழுதும் மேலேதானேதலைவருக்குத் தெரியும்தன் பேச்சை அவர்கள் கேட்பதில்லையென்றுஅவர்களுக்கும் தெரியும்தமக்காக நம் தலைவர்பேசவில்லையென்றுஅவர்கள் தம்மை விட்டுப்போய்விடக் …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

இணையக் கவியரங்கம்17/20/25எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள். அயல் மொழி ஆண்டமொழிஅவ்வாண்டை மொழி கொண்டுஎழுதியிருக்கிறார்கள் சுவரெங்கும் நல்லதுகள் பயிராக வேண்டும்.மாநகராம் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் தேவாலயம் மய்யமாய்கிறிஸ்துவின் பிறந்தநாள் கூட்டம்பல வண்ண பொம்மைக்குவியல்இயேசு குழந்தையாய் மாட்டுத் தொழுவம் ஒன்றில்ஒளிர்ந்து தருகிறார் காட்சிமின்சார விளக்கு தெய்வீக …

>>

ப.மதியழகன்/பூனைகள்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த இரண்டாவது கவிதைகவிதை எண்: 2 பூனைகளை வெறுக்கிறேன்நாய்களை வெறுக்கிறேன்ஆடு, மாடுகளை வெறுக்கிறேன்மனிதர்களை நேசிக்கிறேன் பூனைகளை நேசிக்கிறேன்நாய்களை நேசிக்கிறேன்ஆடு, மாடுகளை நேசிக்கிறேன்மனிதர்களை வெறுக்கிறேன் புலால் உண்பவர்கள்ஜீவகாருண்யத்தைப் பற்றிபேசுகிறீர்கள் பரமசிவன் கழுத்திலிருந்துகேள்வி கேட்டால்பதில் சொல்லத்தான்வேண்டும் …

>>

பானுமதி/நிழல்

15 8 அன்று விருட்சம் கவியரங்கத்தில் நான் படித்த கவிதை ஒளி கருப்பு நிழலாகவும் காட்சி தரும்கோட்டுரு கொண்டு ஆடிப் பழிக்கும்முன்னும் பின்னும் தரையிலும் சுவற்றிலும் கூரையிலும் கீழும் மேலும் வடிவெடுத்து விளையாட்டு காட்டும்.இருந்தும் என் மன குகைக்குள் அது நுழையவில்லை …

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு/இது தேர்தல் காலம்..!

“விருட்சம்” நடத்திய 79ஆவது கவியரங்கில் (நாள்: 15/8/2025) நான் வாசித்தக் கவிதை எண்:3 யார்யாரோ வருவார்கள் இல்லம் தேடி!யாசகமே கேட்பதுபோல் வாக்கை நாடி,ஊருக்கு ஊர்கூடி, கொடிகள் ஏந்தி,ஓட்டுக்கே அலைவார்கள் படிகள் ஏறி!தேர்தல்கள் நெருங்குவதால் பாட்டுப் பாடி,திசையெட்டும் தொண்டர்கள் கூத்தும் ஆடி,ஈர்க்கின்ற வாக்குறுதிப் …

>>

சார்லஸ் புகோவ்ஸ்கி/ஹெமிங்வே ஒருபோதும் இதை செய்ததில்லை!

தமிழில் : க.மோகனரங்கன் – கையெழுத்துப் பிரதிகள்அடங்கிய சிறுபெட்டியை ரயிலில்அவர் தொலைத்துவிட்டார்,அவை பிறகு திரும்பக் கிடைக்கவில்லை என்று படித்தேன்.அந்த வேதனையுடன் என்னுடையதை ஒப்பிட முடியாது. ஆனால், அடுத்து ஒர் இரவுஇந்தக் கணினியில் நானொரு3 பக்கக் கவிதையை எழுதினேன் எனது கவனக்குறைவினாலோபயிற்சியின்மையாலோநிரலில் உள்ள …

>>

அழகியசிங்கர் /படிக்காமல பார்த்துக் கொண்டிருக்கிறேன்…

தமிழ் பேசுபவர்களை எடுத்துக்கொண்டால் பாதிக்கு மேல் படிக்காதவர்கள்தான் இருப்பார்கள். பெரும்பாலும் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது என்று பலர் இருப்பார்கள். இப்படிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களில் பலர் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள். என் குடும்பத்தில் நான் …

>>

என்றென்றும் அன்புடன்…(1)/ரம்யா வாசுதேவன்

நண்பர்களுக்கு வணக்கம்! இன்றிலிருந்து ‘‘என்றென்றும் அன்புடன்,,, ’’ என்கிற தலைப்பில் புத்தம் புதியத் தொடரை எழுத இருக்கிறேன். இதோ இந்த தொடரின் முதல் அத்தியாயம். சண்டைகள் பெருகுகிறது. யாருக்கும் யார் மேலும் நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அலைபேசிகள் அலைக்கழிக்கின்றன. ஆரம்பத்தில் இனித்த …

>>

நாகேந்திர பாரதி/அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் வாசித்த சிறுகதை மதிப்புரை

அழகியசிங்கர் கேட்டுக்கொண்டபடி எனது சிறிய அறிமுகம்.நான், நாகேந்திரபாரதி , அழகியசிங்கரின் இந்தியன் வங்கி. இலக்கிய வங்கி நண்பர் , தமிழில் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் பேசுவதிலும் , ஹிந்தியில் பாடுவதிலும் ஆர்வம். இப்போது சிறுகதை மதிப்புரைபிரபல கேரள எழுத்தாளர் பால் ஜக்கரியா அவர்களின் …

>>

ராபர்ட் ஃப்ராஸ்ட்/பயணிக்கப்படாத பாதை

– மஞ்சள் காடொன்றில் இரண்டு பாதைகள் பிரிந்தன,அனைத்தையும் பயணிக்க முடியாததால் வருந்தினேன்ஒரே பயணியாக நான் நீண்ட நேரம் நின்றுஒரு பாதையை முடிந்தவரை நோக்கினேன் –அது அடர்ந்த காடில் மடிந்தபோதுவரை. பின்னர் மற்ற பாதையை எடுத்தேன் – அது சமமானதாகவே இருந்தது,அது சற்று …

>>

ரவி அல்லது/புகை மண்டலம்

அழகிய சிங்கருக்காகக ஏதோவொன்று இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்ததுஅது பிறப்பெனசொல்லப்பட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.பள்ளிக்கான தேடலில்படிக்கும் கௌரவம்அரங்கேறியது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்ததுஅதுபருவமெய்தியதாககூறப்பட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது .அதுவருவாய்கள் ஈட்டும்வாழ்க்கையாக மாறியது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.இதுதான்துணையெனகூத்தொன்றுநடந்தது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.அதுஅடுத்த தலைமுறைக்குஅடித்தளமிட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.என்னைப்போலவேஒன்றுஎனக்கு முன்உலவியதால்உள்ளம் மகிழ்ந்தது இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.என்னைப்பிற்போக்கென புரிந்து பிள்ளைமுற்போக்கு …

>>

அழகியசிங்கர் /வீரன் நாமம் வாழ்க..

நான் பெரிய பக்தன் இல்லைஆனால் என் கிராமத்தில்வீரன் என்ற தெய்வம் குறித்து ஆச்சரியப்படுகிறேன்! முன்புநான் கொண்டு வந்தபுத்தகங்கள்அமோகமாக விற்க வேண்டுமென்று விண்ணப்பத்திக்கொண்டேன் வீரனிடம்! பின்அதை நானும் மறந்துவிட்டேன்வீரனும் மறந்து விட்டார்! சமீபத்தில்நான் எழுதிய கதை ஒன்றைபத்திரிகை ஆசிரியர் வீரன் கோயில் என்றுமாற்றி …

>>

அதங்கோடு அனிஷ்குமார்/ முடிவே தொடக்கம்

அந்தியின் முகத்தைஇரவு மூடுவது போலகால வீதியில்எதுவும் நடக்கலாம்.தளர்நடைக் காலத்தில்தளிரெனத் தோன்றும் கனவுகள்அகாலத்தில்அகல் விளக்கின்கடைசிப் புகையெனகாற்றில் கலக்கதன் நிழல்தன்னுடன் நின்றுறையஎரியும் ஊதுபத்தி வாசனைஎங்கும் வியாபித்தலையஎட்டு கால்கள்எட்டப் போய் வீசி வரலாம்.நிழலென தொடர்ந்தவையெல்லாம்மூழ்கி எழுந்துபுத்தாடை உடுத்திதிரும்பி நடக்கும் காலம்நித்திய இருப்பின் வாசனைநிரம்பித் தழும்பதளிர் நடையொன்றுதன்னிருப்பை …

>>

செல்வராஜ் ஜெகதீசன்/ உள்வாங்கும் உலகம்

“காபி டீ ஏதாவது வாங்கியாரவா சார்…?” என்ற முனுசாமியின் குரலால், படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்ந்து பார்த்தான் கண்ணன். கண்களோடு மொத்த உடம்பும் உள்ளொடுங்கிய உருவம். கண்ணனின் அப்பா வயதுதான் இருக்கும். இந்த வயதிலும் இரவுநேரக் காவலாளியாக வேலை செய்ய …

>>

கோபி கிருஷ்ணன்/இயக்கம்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் பிரபஞ்சத்தில் என்றோஒரு துகள்ஏன் என்று தெரியாதுஆனாலும்உருவெடுத்தது. காலம் உருள,துகளும் உருண்டது.பிற துகள்களுடன்உரசிமோதி, கலந்துசில உறவுகள், உணர்வுகள்பிரமைகள், அர்த்தங்கள் அனர்த்தங்கள்லட்சியங்கள் கொள்கைகள் வெறும் மாயைகள்உணர்வுகளில் சிக்கல்கள்முரண்படல்கள்ஒதுங்குதல்ஒதுக்குதல் சுமுகம் இணக்கம் வித்தியாசம் …

>>

அழகியசிங்கர்/ஒரு கவிதை எழுதுங்கள்

காலையில்என்நூலகத்திலமர்ந்துஇந்தக் கார்டில்ஒரு கவிதை எழுதுகிறேன்நான் எழுதுவதைநானேபடிக்கிறேன்மற்றவர் பற்றிஎனக்குக் கவலை இல்லைஎன் கையெழுத்துகோணல் மாணலாகப்போய்க் கொண்டிருக்கிறதுஎன்று இன்று காலைஅறிந்தேன்கவிதை எழுது எழுதுஎன்கிறது மனம்எழுதிக் கொண்டே இருக்கிறேன் (17.05.2025 அன்று தபாலில் எழுதிய கவிதை)

>>

எஸ்ஸார்சி 5 கவிதைகள்

காஷ்மீருக்கு உலா சென்றஅப்பாவிப்பயணிகளைச்சுட்டுப் பொசுக்கியதீவிர வாதிகள்பாகிஸ்தான் மண்ணில்தயார் ஆனவர்கள்தீவிர வாதிகளை வளர்த்துஉலகெங்கும் உலவ விட்டுஈனத் தொழில் நடத்தி வரும் பாகிஸ்தானையார்தான் கேட்க முடியும்அரசாங்கம் தீவிரவாதிகட்குகோட்டை போல் தங்குமிடம் அளிக்கும்தாராளம் பாகிஸ்தானிலுண்டுநோக்கம் சரியில்லாதவர்கள்நொந்து போவார்கள்ஒருநாள்சரித்திரம் எப்போதும்சரியாகவே தீர்க்கும்காலக்கணக்கு. 2 பொள்ளாச்சி பொள்ளாச்சி என்றாலேபெரிய …

>>

மோகன்ஜி/பாலா சார் – ஒரு இதமான சிநேகிதம்

பாலா சார் – ஒரு இதமான சிநேகிதம் 2001ஆம் வருடம் என்று நினைவு. வருடாந்திர முழு மருத்துவப் பரிசோதனை சென்னையில் செய்து கொண்டேன். பரிசோதித்த மருத்துவமனையோ, என் இதயத்தில் ஏதும் பிரச்னை இருக்குமோ என்று கலவரப்படுத்தியது. ‘ஹார்வே ஹாஸ்பிட்டல்’ இதய நோய் …

>>

ஆர்.வெங்கடேஷ் முகநூலில்..

நான் பிரதமர் மோடியின் பேச்சைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர் வெளிப்படையாக பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்தியதில்லை. இன்று, தனது உரையில் வெளிப்படையாக பாகிஸ்தானையும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அதன் நடவடிக்கையையும் கண்டித்துள்ளார்.இரண்டு, டொனாடு டிரம்ப், போர் நிறுத்தம் என்ற சொல்லைப் …

>>

ஞானத்தின் வழிக்குறிப்பு ஓயாமல் பேசிக் கொண்டிருந்த என் தோழி சில நாட்களாய் எதுவும் பேசுவதில்லை பேசிக் கொண்டிருந்தவள் பேசாமல் இருந்துவிட்டால் கவலையாகத் தானே இருக்கும்அதே கவலை தான் எனக்கும் போய்ப் பார்த்தேன் ஒருநாள் முன்பை விட மகிழ்ச்சியாக இருந்தாள் எப்படி? என்றேன்இந்தா …

>>

அதிரன்/இருக்கை

ஞாயிறு அன்றுசிறப்பு பயிற்சிக்கு வந்திருந்தபத்தாம் வகுப்பு ஜெயந்தியைதலைம ஆசிரியைஅறைக்கு சென்று வருகை பதிவேட்டை வைத்து வர பணிக்கிறார் வகுப்பு ஆசிரியை இன்று பள்ளி விடுமுறை என்பதால்தலைமை ஆசிரியை அறை ஆள் அரவமின்றி ஒய்வாகவே இருந்தது பதிவேட்டை வைத்து விட்டு திரும்புகையில்அவள் கண்ணில் …

>>

எஸ் வி வேணுகோபாலன்/ஓ….எங்கள் சையத்!

குதிரைஉன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது, சையத்.. ஃபஹல்கம் புல்வெளியின்பசுமை விரிப்பு முழுக்கஎப்போதும் இருந்ததுஉனது கால் தடம்இப்போது குருதியின் தடமும் குழந்தைகளைகாதலர்களைகுடும்பங்களைஉனது குதிரையிலேற்றிஊர் முழுக்கசுற்றிக் காட்டிக் கொண்டிருந்தாய் புகைப்படங்கள்எடுத்துக் கொடுத்திருப்பாய்அன்பைமொழியாக்கிஉரையாடி இருந்திருப்பாய்அயல் மொழிக்காரரிடத்தும் எங்கெல்லாம் செல்லஎன்னென்ன பார்க்கஎந்த உணவகத்தைத் தேர்வு செய்யஎல்லாம் சொல்லி இருப்பாய் …

>>

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள்…

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். 11.04.2025 25.04.2025

>>

ஹரணி/அஞ்சல் செய்த கவிதைகள்

6.4.25 (7)ஒருபோதும் முடிவதில்லைஎந்தப் பயணமும்…உள்ளவரைஉள்ளத்தில் இருக்கிறது..நினைத்தபோதுபயணிக்கவைத்துவிடுகிறதுஎல்லாவற்றையும்கடந்து.. (8) எழுதுவதற்குவெள்ளைத்தாள்எடுக்கையில்முற்றுப்புள்ளியைவிடச்சிறிதாய் அசைகிறதுபூச்சியொன்றுகடவுளைச் சுமந்தபடி… (9) பெயரன் கிறுக்கும்வண்ணங்களில்எதையும் கொண்டு வந்துவிடுகிறான்எனக்குத்தான் வரவில்லைசட்டென்றுஒரு சிறு கவிதைகூட… 000

>>

புதுமைப்பித்தன்/ ‘பூசனிக்காய்’ அம்பி

எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு அறிந்திருந்த சிறு பையனின் பட்டப்பெயர் என்றுதான் எனக்குத் தெரியும். அவனைப் ‘பூசனிக்காய் அம்பி’ என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். அவனுக்கு …

>>

அழகியசிங்கர் /புத்தர் இன்று பிறந்தால்..

ஜேப்படி திருடனாகமாறி இருப்பார்ஒரு அரசியல் கட்சியில்சேர்ந்துகொள்ளை அடிப்பவராகதோன்றி இருப்பார்பல பெண்களைமணந்து சகலகலாவல்லவராக இருந்திருப்பார்ஆனால்நீங்க நினைக்கிறநண்பராக இருப்பதுசந்தேகம்!

>>

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 2

பொருள் : விருட்சம் பரிசு பெற்ற கதைகள் – 2024 இடம் :அன்னை அரங்கம்,இரண்டாம் தளம்,சென்னை தோல் மருத்துவ வளாகம் , 12 பாகீரதி தெரு,காமராஜர் சாலை, சி.பி.ராமசாமி சாலை வழியாகராஜா அண்ணாமலைபுரம் , சென்னை 600 028 கூட்டம் நடக்கும் …

>>

வ.ரா./மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

4பாரதியாரின் தாயார் இறந்து போனபின், சின்னச்சாமி ஐயர் மறுதாரம் விவாகம் செய்து கொண்டார். அந்த அம்மாள் மூலமாய்ச் சின்னச்சாமி அய்யருக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள். பாரதியாரோ, சமஸ்தானத்துச் சிறு கவிராயர். தம்பியும் தங்கையும் சிறு குழந்தைகள். …

>>

ம.சக்திவேலாயுதம்/எங்கள் கண்கள் மட்டும்

அன்று அது எப்படியெனஇன்று வரைதெரியவே இல்லை..இன்று இதுஇப்படியெனஅன்று கூடநினைத்ததே இல்லை..என்றும் அன்று போலவோஇன்று போலவோஅமைந்தால் போதுமெனஎங்கள் கண்கள் மட்டும்இன்றும் பேசிக்கொள்கின்றனஎம் சக மொழியைஎம் சகஜ மொழியைஎங்கள் காதலை

>>

15. மதுவந்தி /கடலிடம் விடை பெறுதல்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கடற்கரை பார்த்தபின்கால் கூட நனையாமல்வர முடியுமா என்ன? வந்து வந்து பாதம்தொட்டுத் தொட்டுப்போகிற அலைகளில்ஆழ்ந்து நின்றிருந்தேன். வேகமாய் வந்த அலைகள்கால் தொட்டுபோ போவெனச் சொல்லபோகட்டுமாவெனக்கேட்டபடியே நின்றிருந்தேன். மீண்டும் கடலுக்குள்போகிற அலைகள்வா வாவெனச் …

>>

அழகியசிங்கர்/குள்ளம்

ராகவன் நல்ல உயரம்.  ஆறடி. ஆனால் அவன் மனைவி கஸ்தூரி ஐந்தடிதான்.  எப்போதும் கஸ்தூரி அவனுடன் வெளியே வரத் தயங்குவாள். அவன் எங்காவது கூப்பிட்டால் மறுத்து விடுவாள். ராகவனுக்கு அவள் மீது கோபம் கோபமாக வரும்.  ஏன் நான் கூப்பிட்டால் எங்கும் …

>>

அதிரன்/நான்காம் நாள்

கடக்கும் பொழுதெல்லாம்கவனிக்கத் தவறியதில்லைஎப்பொழுதும் எதையோஎதிர் பர்த்தப்படிஜன்னல்ஓரம் உட்கர்ந்துதெருவையே வெறித்துபார்த்துக் கொண்டிருக்கும்அந்த பெரியவரை. புதிதாக குடி வந்திருப்பவர்கள் போலும்.முந்தநாள்தான் அவனைப் பார்ததுமுதல் முறையாக மெலிதாகச் சிரித்தார் இரண்டு நாளாய் காணவில்லைஜன்னலும் சாத்தியே இருந்தது நோட்டமிட்ட அவனைமுறைத்தன பெரியவரின்முகஜாடையில் ஒரு ஜோடி கண்கள் நான்காம் …

>>

தங்கேஸ்/கதை சொல்லி

மரம் ஒரு கதை சொல்லிகதை கேட்டால் தான் உறங்கும்அடைந்திருக்கும் பறவைகள் ஒரு கிளையில் பிறக்கிறதுபுதிய இலைகருவிலிருந்து முளைக்கிறதுஒரு சிசு இலைக்கு தேவை ஊஞ்சலாட்டும் காற்றுத்தான் ஆதி அந்தம் இல்லாத அநாதியாய்ஆடும் பேரின்பம் லயத்தில் மனிதனுக்குள் ஒரு உலகம்எப்படியும் முளைத்து விடுகிறது அதை …

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 6

மதுவந்தியின் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘கேட்கும் செவிக்கு எங்கும் இசை’ சமீபத்தில் வந்த கவிதைத் தொகுதி.கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.இன்னும் வாசித்து இவர் கவிதைகளைப் பற்றி எழுதுகிறேன்.130 பக்கங்கள் கொண்டஇப்புத்தகத்தின் விலை ₹ 100.குவிகம் பதிப்பகம் மூலமாக வந்துள்ளது.

>>

அழகியசிங்கர்/வெள்ளைப் பூனை

வெளியே குதிக்க விரும்பவில்லை? ஏன் என்று கேட்டேன்? உன்னை விட்டுப்போக விரும்பவில்லைநான் போய்விட்டால்உனக்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றது உண்மைதான். துன்பம் வரும்போது உன்னைப்பார்த்தால்நிம்மதி அடைவேன்என்றேன் (விருட்சம் 128வது அட்டைப் படத்தைப் பார்த்து எழுதியது)

>>

எல்,ரகோத்தமன்/அக்னி

  – கையில் தீச்சட்டிஇடுப்பில்வேப்பிலைச் சாமிவேகம் வந்துஆடுகையில் உன் மேல்வந்த சாமி எச்சாமியோ! நேர்த்திக்கடன் கேட்டுகீழ்கருப்பன் வந்தானோ! வரண்ட வயக்காட்டின்துயர் காட்டபச்சைக்குதிரை மேல்வாவென்று அழைத்தாயோபச்சையப்பனை! விண் மேல்வீற்றிருக்கும்கருப்பண்ண சாமியிடம்மழைநீரைஏன் தடுத்துவைத்தாயெனபொங்கியெழுந்தாயோ! காவல் மறந்தஊர் காவல் வீரனைவாள் வீச்சிற்கழைந்நாயோ! ஊர் கன்னி பெண்களைகாத்து நிற்கும்கருத்தம்மாள்காக்க தவறியதேன்எனும் கோபத்தில்கண் நிவந்து  போனாயோ உருட்டு மீசை …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்/தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

கிருஷ்ணன் நம்பி : மருமகள் வாக்கு கிருஷ்ணன் நம்பி: கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும், சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், சாது சாஸ்திரி என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதி வந்த திரு.அழகிய நம்பி 1976-இல் திடீரென நோய்வாய்ப்பட்டு அகாலமரணமடைந்தபோது அவருக்கு …

>>

மோகன் ஜீ/உள்ளே வெளியே

கருக்கலில் என் துப்பட்டிக்குள்மெல்ல நுழைந்தாய்.நீயன்றி யார் வருவார்?கனவொன்றின் காட்டிலிருந்தேன்.மீட்டது உன் உள்ளங்கையின்தண்ணென்ற ஸ்பரிசம்.ஜென்ம ஜென்மங்களாய்நானறிந்த மென்தொடுகை.என்றும்போல் வாரியணைக்காமல்,அசைவின்றிக் கிடந்து பார்த்தேன்.உன் பிஞ்சுவிரல்களால் என்தலைமுடியை அளைகின்றாய்.வருடலின் சுகத்தில் மீண்டும்கனவுள் சரிகின்றேன்.‘சின்னஞ்சிறு கண்மலர்செம்பவழ வாய்மலர்’ எனஅம்மாவின் பூங்குரல் காதோரம்.அம்மா இல்லாத இந்த உலகத்திற்குநெற்றியில் முத்தம் …

>>

கல்யாண்ஜி/குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக

பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்று மதில் சுவர் ஓரம் ஒன்றுதொழுவத்து ஓட்டில் ஒன்றுமுருங்கையில் ஊஞ்சலாடிஒடிந்ததும் ஓடும் ஒன்று வயிற்றினில் பிள்ளை யேந்திசூலுற்ற குரங்கின் பின்னால்கவனமாய்க் காவல் போகும்கிழடான ஆண் குரங்கு பப்பாளிப் பழம் கடிக்கும்காக்கைகள் சத்தம் போடகண்ணாடி கண்மை டப்பிசிணுக்கோரி …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை 6.30(01.11.2024) சூமில் சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 102 100 வது இதழ் விருட்சம் கதைகள் தொகுதி 2 இரா.முருகன் எழுதிய வைக்கோல் கிராமம் …

>>

அழகியசிங்கர்/வெளியே மழை நின்று விட்டது

இன்று வந்துவிட்டாள்அம்மா!மழையும் கூட உள்ளேஎன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்ஆசீர்வாதம் செய்துவிட்டுப்போ என்றேன். என்ன செய்து கொண்டிருக்கிறாய்?உன்னைப் பற்றிகவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் வீண் வேலைஎதாவது உருப்படியாய்ச் செய் ஏன்? யாரும் படிக்க மாட்டார்கள் போகட்டுமென்றேன்யார் கவிதைகளை யார் படிப்பார்கள்யாரும் யார் கவிதைகளையும் படிப்பதில்லைஏன் அவர்கள் …

>>

செந்தில் பிரசாத்/தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

கடலோடி தீர்ந்தாலும்மிதவை என மிதந்துதொற்றிக்கொள்கிறது.காற்றோடி திரிந்தாலும்பறவை என பறந்துபற்றிக்கொள்கிறது.பனி பிரதேசம் சென்றாலும்நெருப்பாய் வந்து வெப்பம்கூட்டிக்கொள்கிறது.நினைவுகளில் நிலையாய்நிரந்தரமாய் நிற்கிறது.வண்ணங்களை விடவாழ்க்கையில் என்றுமே“வாழ்த்துகள்”. “அன்பு உள்ளங்களுக்கு

>>

அனங்கன்/எல்லோரும் கொண்டாட!

அரக்கன் பூமித்தாயைத் தூக்கிச்சென்றபோதுஅவளதுகற்புக்கு எந்தக் களங்கமும் இல்லை… காப்பாற்ற வந்த கடவுளால் கர்ப்பமுண்டாகிவிட்டது….எல்லாம் தெரிந்தவனால் எதையும் தடுக்கமுடியவில்லை. தீபாவளிக்கான கதைகள் அவரவர் மனம்போனபோக்கில் இருக்கட்டும்…அதனாலென்ன…கொண்டாடஒரு காரணம் கொண்டாடிவிட்டுப்போகட்டும். வியாபாரம் பெருகி…இல்லாதவர்களுக்குஆண்டுக்கு ஒருமுறையாவதுஊக்கத்தொகையும்…உடையும்கிடைக்கிறதே…ஆயினும் உலகில் போர்இருக்கும் வரைஅரக்கர்களும் இருப்பார்கள்…ஆனால் மீட்டெடுக்கஆண்டவன்தான் வருவதில்லை. மதங்களைத் …

>>

அழகியசிங்கர்/திரும்பவும்

அவர்கள் வாழ்க்கை திரும்பவும் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன், அவர்கள் தங்களுக்குள் நடந்த திருமணப் பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.அவன் அவளை நேசிப்பதில் எந்தக் குறையுமில்லை. ஆனால் அவள் அளவுகடந்து பேசுவதால் அவனால் அவளுடன் சேர்ந்து வாழ முடியாது என்று நினைக்கத் …

>>

லக்ஷ்மி ரமணன்/தேர்தல்

குறுங்கதை. மகேஷ் முகத்தில் சோகமும் ஏமாற்றமும் படர வீட்டில் நுழைந்தபோது அவன்அம்மா கஸ்தூரி பூஜை அறையில் இருந்தாள். மணி அடித்து மந்திரம்சொல்லி ஆரத்திகாட்டிபூஜையைமுடித்துவிட்டு வந்த அம்மாவைப்பார்த்ததும் அவனுக்குக்கோபம் வந்ததுஎத்தனை பூஜை, ஆராதனை எதுவுமே உபயோகமில்லாமல் போச்சு.”“ஏன் என்ன ஆச்சு?”“எதை எதிர்பாரத்தேனோ அது …

>>

அனங்கன்/மீதமிருக்கும் நாட்கள்

ஒரு சாதாரணமானவனின்ஒருசாதாரண தினத்தில்…பெரிதாய் என்னநடந்துவிடப்படுகிறது. அன்றாடம் வரும் தவிட்டுக்குருவிகளின் கூட்டம் கூடஇன்று வரவில்லை…இறைத்த சோளமணிகள் அப்படியே கிடக்கிறது… அதைஇரையாக்கத் துடிக்கும்பூனையும் காத்துகிடக்கிறதுஎன்போல… புத்தகச்சேமிப்புகளில் கரையானின் மண்கோடுகள்செம்மண் நிறத்தில் வேர்ப்பிரிவுகள்போல கிளைபிரித்துக் கிடக்கிறது. கலைத்துப்போட்டு அடுக்க ஆயாசமாய் இருக்கிறது…வாசிப்பென்பதுஉள்ளடங்கிப்போன காலஅளவை நினைவில்வைத்து என்னஆகப்போகிறது. …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/சென்னை கல்வெட்டுகள்

ஆசிரியர் கலைமகள்………………… நவராத்திரியை ஒட்டி நேற்று கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன அமைதி கிடைத்தது! பொதுவாக கல்வெட்டுக்கள் பற்றி எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. வீட்டுக்கு வந்ததும் சென்னை கல்வெட்டுகள் பற்றி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். சென்னை கல்வெட்டுக்கள் …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

வழிபாட்டுத் தலங்களுக்கும்மருத்துவமனைகளுக்கும்நடந்து நடந்துகால் வலித்துமனமுடைந்துதன் வீட்டுத் திண்ணையில்அமர்ந்திருக்கும்குழந்தையில்லா தம்பதி விடும்சோக மூச்சைசுவாசித்துக் கொண்டுகிளை விரித்துபூ காய் கனியெனஎல்லாம் உள்ளடக்கியஒரு நிமிர்ந்த மரம்காற்றோடு கொண்டு சேர்க்கமுயற்சிக்கிறதுதாய் தந்தையில்லாஒரு குழந்தைக்கு! நெருப்பு விழிகள்

>>

நாகேந்திர பாரதி/சொல்லுக சொல்லை

விழுந்த சொல் ஒன்றுமுளைத்து எழுந்துகிளைகள் பரப்பிஇலைகள் முட்களாய்க்குத்தவும் செய்யலாம் விழுந்த சொல் ஒன்றுபூத்துக் குலுங்கிவண்ணம் காட்டிமணத்தைப் பரப்பிமயக்கவும் செய்யலாம் ——

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை –(27.09.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 98 திலீப் குமார் கதைகள் கடிதம் – டாக்டர் பாஸ்கரன் கண்ணாடி – கே.வைதேகி மூங்கில் குருத்து – பேராசிரியர் …

>>

அதிரன் கவிதைகள்

விடாது அழுது கொண்டிருந்தகைக் குழந்தையிடம்எதோ ஒரு மொழியில்எதோ ஒரு வார்த்தையால்சமாதானம் சொன்னாள் பாட்டிசற்றைக்கெல்லாம் சிரிக்கத்தொடங்கியது குழந்தைதெய்வங்கள் பேசிக் கொள்ளும்வார்த்தைகளுக்குமொழியும் அர்த்தமும் தேவையில்லை போலும்.. – வாங்கி தந்தபலூனை காற்றில்நழுவ விட்ட மகன்பறக்கிறது பார்.. பறக்கிறது பார்என்றான்வாயு நிரப்பபட்ட பலூன்எல்லையில்லா வெளியில்உயர உயர …

>>

கத்திரிக்காய் மிளகு கூட்டு செய்வது எப்படி /திண்டுக்கல்சமையல்

கத்திரிக்காய் எப்பவும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்று. கத்திரிக்காய் வைத்து காரம்,புளிப்பாய் தான் குழம்பு,கறி செய்வோம். காரம்,குறைவான,புளிப்பில்லாத இந்த கூட்டை இன்று முயற்சி செய்து பார்த்தேன். இந்த மிளகூட்டலை, கேரட்,பீன்ஸ்,கோஸ் வைத்தும் செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பருப்பு – அரை …

>>

க.நா.சு. /முதற் சுடர்

வாழ்க்கையிலே அவனுடைய கடைசி நாள் அது.அதைக் கண்டாளா அவள்?மலைச்சரிவில் காலை வேளையில், இரு சிறு கற்களை மாறிமாறித் தூக்கிப் போட்டுப் பிடித்து அவள் அம்மானை ஆடிக் கொண்டிருந்தாள்.அவள் கையில் சிக்குண்ட கற்களைப் போலவே அவள் மனமும் தாவித் துடித்தது. கற்கள் திரும்பத் …

>>

திண்டுக்கல்சமையல்/தக்காளி இட்லி செய்வது எப்படி….

தேவையான பொருட்கள் இட்லி மாவு – 2 கப்பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)தக்காளி – 2 (நறுக்கியது)மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்கொத்தமல்லி – சிறிதுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் …

>>

சீவ.தீனநாதன்/ஸ்ரீ ரமண விருந்து

(‘சுவாமி! நான் சீக்கிரம் புறப்படவேண்டும். அதற்கு முன்பாகத் தங்களிடம் பேச விரும்புகிறேன்’) 1930-இல் ஒருநாள்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் பகவானைக் காண திருவண்ணா மலைக்கு வந்தார்; பகவான் சன்னிதானத்தில் பகவானுக்கு முன்பாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். ‘பகவானே! நான் …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே…

மினிகதை 6 அவன் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவனால் சற்றும் நம்ப முடியவில்லை.அந்த அறையிலிருந்து கிருத்திகா வரவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே அவளுக்கு இல்லையா?“ஏதோ கோபத்தில் அடித்து விட்டேன். அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்..இது மாதிரி நிகழ்ச்சி இனிமேல் நடக்காது.”“கிருத்திகா …

>>

அதிரன்/மூன்று கவிதைகள்

17/08/24 இன்றைய கவிதை அரங்கில் வாசித்த கவிதை முதலாம் கவிதை நீள் இரவு பேசியவை யாவும் பேசியும்கேட்டவை யாவும் கேட்டபின்தொடர்ந்த நீள் மெளனத்தின்கடைப்பொழுதில்மெல்ல அவள் கரம் பற்றுகிறேன்இன்னும் அடங்காத நடுக்கம்அவள் உடல் எங்கும்.தாளாது ஆரத்தழுவுகிறேன்வந்து தவழ்கின்றன ஒரு ஜோடிகண்ணிர் துளிகளஎன் தோள்களில்…..தொடங்கியது …

>>

கல்யாண்ஜி கவிதை

எல்லோரின் திசை முடிவில் இருக்கிறதுஒரு கடல்,ஒரு மகா நதி,ஒரு உப்பாறு,ஒரு ஓடை.ஒரு கம்மாய்,ஒரு துலாக் கிணறு,ஒரு அடி குழாய் தவிரதொண்டைக்குழியில் ஒரு எச்சில் சுனை.%2018

>>

ராஜு கருப்பன் செட்டி /பகவான் யோகி ராம் சுரத் குமார்

உன் பாதம் நான் சுமக்கஎன் பாவம் நீ விலக்க உன் நாமம் நான் ஏந்தஎன் சோகம் நீ நீக்க வரும் காலம் வளங்காலமாகவரம் தந்து வாழ்த்திடுவாயே

>>

மாலதி சுவாமிநாதன்/சொல்லும் செய்திஎன்னவோ?

சொல்லும் செய்திஎன்னவோ?மாலைப் பொழுதும்வந்து விட்டதே. பறவைகள்கூட்டம் கூட்டமாகஇரைந்து கொண்டுசெல்கின்றனவே! சொல்லும் செய்திஎன்னவோ? இதைத் தென்றல்சுமந்துஇலைகள் மீதுவைத்துச் செல்கின்றதே! இலை உதிரும்நேரம்செய்தியை அறிவோம்!பதில் கூறத்தேவையோ? கோலங்கள் தீட்டிபதில் கூறுவோமா?

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

நாளை(17. 08.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 24வது கூட்டம் இது. நம்முடைய …

>>

ஈசி கோதுமை ஹல்வா செய்வது எப்படி…

தேவையான பொருள்கள் கோதுமை மாவு – 1/2 கப்சீனி – 1 கப்ஏலப்பொடி — 1/4 ஸ்பூன்முந்திரி – 6குங்குமப்பூ – 1 சிட்டிகைநெய் – 1/4 கப்செய்முறைஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் சீனி சேர்த்து …

>>

மீ. விசுவநாதன்/தவத்தால் பெற்ற விடுதலை

அம்மா அப்பா ஆசான் தெய்வம்நம்முயிர் நாடி நரம்பெலாம் கலந்தபண்பின் சாரம்; பாமரன் கூடக்கண்மணி போலக் கருதிடும் தேசம்;குருவி காக்கை கொடும்விடப் பாம்புதெருவில் திரியும் நாய்பூனை மாடுகள்ஒளிதரும் இரவி உறுமிடும் வானம்களிதரும் மழலை கனிதரும் மரங்கள்ஆலம் விதையாய் அமைந்த உறவுகள்காலத்தி(ல்) உதவும் கையாய் …

>>

லக்ஷ்மி ரமணன்/நியாயம்

அன்றுமாலை மழை அந்த அளவுக்கு தீவிரமாகும் என்று சுமித்ரா நினைத்துக்கூடபார்க்காததால் பிரமித்துப்போனவளாக அந்தப்பக்கமாக வந்த ஆட்டோவை நிறுத்திக்கேட்டபோதுஆர்ஏபுரத்திலிருந்துஆள்வார்பேட்டைபோகஅந்த ஆட்டோஓட்டுனர் இருநூறுரூபாய் கட்டணம் கேட்டார்.“ஏம்பா ரொம்ப அநியாயமாய் இத்தனை ரூபாகேட்கறியே மழை இல்லாட்டி நான்நடந்தேபோயிடுவேன்”“நியாய அநியாயம் பார்த்தால்நாங்க எப்படிபிழைக்கிறது.?” என்று கோபத்துடன்”இதுவராது”என்று விட்டுபோய்விட்டார்.மழை …

>>

அழகியசிங்கர்/சவிதாவின் திரள்கனி என்ற கதையைப் பற்றி..

ஒரு கதையைப் படிக்கும்போது நமக்கு அந்தக் கதை மூலம் என்ன கிடைக்கிறது என்பது முக்கியம். எதுவும் கிடைக்கவில்லை என்றால் வாசிக்கிற மகிழ்ச்சியைத் தரவேண்டும்.இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் ஒன்பதாவது படிக்கும் மாணவி. அவள் மூலமாக கதை நகர்கிறது. ஒன்பதாவது படிக்கும் மாணவியின் …

>>

ஜெ.பாஸ்கரன்/மாற்றான்!

ஒரு வெக்கையான இரவு. புழுக்கத்தில் நடந்துகொண்டிருந்தேன். பூமி வெப்பமயமாகி வருகிறது. நீரின் அளவு குறைந்து வருகின்றது. பூமி அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது – கல்கி அவதாரம் எடுத்து வருவாறா? பிரபஞ்சம் என்பது என்ன? வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? மனிதன் அங்கெல்லாம் …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அது ஒரு அழகான சிறிய குன்று. அங்கு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார் அந்த சாது.அவ்வழியே, மாடுகளை மேய்த்து வந்த ஒருவன், அவர் மேல் பரிதாபப் பட்டு, தான் கட்டிக் கொண்டு வந்திருந்த உணவில் கொஞ்சம் கொடுத்தான்.இது தொடர்ந்தது. அவன் கொடுக்கும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா1.தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்.மருண்டு இறந்த மக்களின் சடலங்கள்வருந்தி கண்ணீர் சிந்துவது; இயற்கையின்நிருத்தம் ; மிக வருத்தம். 2.தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்;உறக்கம் தொலைத்தஇறைவனின் நாடு.இயற்கை புரியும் பெரும் பிழை;ஏன் என்றெமக்கு புரியவில்லை. 3.தோண்டத் தோண்டும் வரும் …

>>

ஜெ.பாஸ்கரன்/டொராண்டோ டைரி 5. (யூ எஸ் லிருந்து!)

வார நாள் ஒன்றில் காலையில் கிளம்பி, ஆஃப்ரிகன் லயன் சஃபாரி (African Lion Safaari) சென்றோம். டொராண்டோவின் மேற்குப் புகுதியில், (62 கிமீ) ஆண்டாரியோவின் ஹாமில்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த லயன் சஃபாரி.கனடா ஆர்மியைச் சேர்ந்த, ‘டான்’ டெய்லெ என்பவரால் …

>>

சரோஜா ராமமூர்த்தி/காமுவின் கண்ணீர்

சங்கரனின் தகப்பனார் நடேச சர்மாவின் குணமும், போக்கும் அலாதியானவை. அவர், எதையும் தன்னுடைய உரிமையோடு செய்யக் கூடிய மனம் படைத்தவர் அல்ல. சம்பாதிக்க வேண்டியது ஒன்றுதான் தன்னுடைய கடமை களில் ஒன்று என்று நினைத்திருந்தவர். அவர் வீட்டில் அவர் மனைவி மீனாட்சி …

>>

தினமும் அம்மன் 7

நன்றி : தினமலர் அல்லல் தீர விரத்தியால் வாழ்க்கை கசக்கிறதா. நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலுக்கு வாருங்கள். பழைய ஆற்றின் கரையில் உள்ளபடி ஈஸ்வரன் கோயிலில். சுந்தரேஸ்வரருடன் அழகம்மாள் இருக்கிறாள்.ஆடி வெள்ளி அன்று இங்குவிளக்கேற்றினால் உடல் நலம் சிறக்கும்.விருப்பம் நிறைவேறும். குறை …

>>

நாகேந்திர பாரதி/பூக்களைப் பறியுங்கள்

பூக்களைப் பறிக்காதீர்கள்என்று சொல்லாதீர்கள் இவை பறிக்க வேண்டியபூக்கள் பறித்துக் கசக்க வேண்டியபூக்கள் கசக்கி முகர வேண்டியபூக்கள் முகர்ந்து உணர வேண்டியபூக்கள் உணர்ந்து பகிர வேண்டியபூக்கள் ஆம் , இவைபுத்தகப் பூக்கள் ———-

>>

செ.புனிதஜோதி கவிதை

நீ வளர்த்தரோஜா செடி தான்கேட்டவுடனேவாமலர் தருகிறது? ஐந்து விரல்களுக்குள்ளும்சிறு இடைவெளியும்ஏற்றத் தாழ்வும் உண்டு காற்றுவளைக்கநினைத்த போதுதான்முறிந்துவிடுகிறதுகிளை நதியின் கால்களைஉன் திசைகளுக்கேற்பதிருப்ப நினைக்கிறாய் கொத்த,கொத்தமுதுகை காட்டும்எருமை அல்ல நான் தன் சிறகு காட்டும்திசையில் பறக்கும்சுயம்பு பறவை.

>>

ஜெ.பாஸ்கரன்/டொராண்டோ டைரி 1

ஜூலை 1 மாலை ஏர் இண்டியா விமானத்தில் கனடா பயணம் செய்யத் தீர்மானம் – சென்னை -டெல்லி, டெல்லி – டொராண்டோ எனத் திட்டம். ஜூன் 30 மாலை வரை கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட கூட்டங்கள் – எல்லாம் முடித்து, அவசர அவசரமாக …

>>

மனதுக்குப் பிடித்த கவிதை 166/அழகியசிங்கர்

தனசக்தி கவிதை பியூலாவின் யானைக்குபட்டாம்பூச்சியின் சிறகுகளைவரைந்திருந்தேன்கடலின் அலைக்கும்யானையின் நடைக்கும்அத்துனை ஒற்றுமைஇரண்டுமே பேரழகாய்ஒளிரக்கூடியவைபியூலா கண்களுக்குஎட்டா தூரத்தில்காற்றில் கலந்த பின்பும்அவளுக்குப் பிடித்த பட்டாம்பூச்சிவீட்டுப் புழக்கடையில்செம்பருத்திச் செடியின்வேரில் உறங்கும் அவளைக்காண வந்தமர்ந்துகொண்டேஇருந்தது ஒவ்வொரு நாளும்அந்தப் பட்டம்பூச்சியைத்தான்யானையாக மாற்றியிருந்தேன் நன்றி : பியூலா – கவிதைகள் – …

>>

தினகரி சொக்கலிங்கம் பதிவு

அப்பா இறக்கும்போது எனக்கு இரண்டரை வயசு… இறப்பதற்கு முன்புகூட அப்பா, அம்மாவிடம் ‘கமலா, கவலைப்படாதே… தைரியத்தைக் கைவிடாதே… மனதைத்

>>

சசிகலா விஸ்வநாதன்/வலையில்

“நீ இன்று பேசியது எவனிடம்?”அவள் மனம் இருண்டது போல் அவள் எதிர்காலமும் மங்கியது. தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள் மாலதி; எப்போதும் தாங்கும் அவன்; எங்கோ வெறித்த பார்வையுடனும்; கோப உறுமலுடனும்.இது நடந்து ஒரு வாரமாகி விட்டது. புது போன் …

>>

அழகியசிங்கர்/என்னிடம் சொல்

உன் மனக் கவலைகளைஎன்னிடம் தெரிவித்து விடுஏன் இப்படிஒவ்வொரு இடமாகநிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறாய்உனக்குஉன் பெயரைச்சொல்லத் தெரியுமா?நீ எங்கிருந்துவந்திருக்கிறாய்அதாவதுதெரியுமா?உன்னை ஒரு இடத்தில்பூட்டி வைத்து விட்டார்கள் நீவெளியே வரத்தெரியாமல் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறாய்உன்கற்றை முடிஉன் உடல் முழுவதும்பறந்து கொண்டிருக்கிறது!

>>

கே ரியான்/அறைக்குள் யானை

தமிழில் : க.மோகனரங்கன் ஏறக்குறையஅறை முழுவதும்யானையால் நிரம்பியுள்ளது.அது இல்லாத இடம் என்றுகிட்டத்தட்ட எதுவும் கிடையாது.மிகவும் பெரியதிடகாத்திரமான யானை.ஆகவேஅதைக் குறித்துப் பேசஅங்கே இடமில்லை.

>>

பி. ஆர்.கிரிஜா/இனிமேல் போண்டா திங்க முடியாது

அழகிய சிங்கரின் என்பா இனிமேல் போண்டா திங்க முடியாதுஉடம்பில் கொழுப்புச் சத்து அதிகம்;மருத்துவரின் எச்சரிக்கை காதில் ஒலித்தும் ;போண்டா ஆசை குறையவில்லை ! இனிமேல் போண்டா திங்க முடியாதுஎண்ணெய் விலையில் சாண் ஏற்றம்உளுந்தின் விலையோ அதைவிட உச்சம்போண்டா தின்பது சாத்தியமா ? …

>>

யூஜின் கில்லெவிக்/

கவிதைக் கலை தமிழில் : க.மோகனரங்கன் நான்எனக்காக பேசுவதில்லை.என் பெயரில் பேசுவதில்லை. என்னைப் பற்றியதுமல்ல இது.நான் ஒன்றுமில்லைகொஞ்சம் வாழ்க்கை,நிறைய பெருமைஅவ்வளவுதான். எதற்கு வடிவம் உள்ளதோஎவற்றிற்கு வடிவம் இல்லையோஎல்லாவற்றிற்காகவும்நான் பேசுகிறேன்.நான் கனமானவற்றிற்காக மட்டுமல்லஎடையற்றவற்றிற்காகவும்பேசுகிறேன். என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறித்து அறிவேன்.தொடர்ந்து மேலே செல்லவும்இன்னும் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/பரிதவிப்பு

நல்ல நடுங்கும் குளிர். ஜேம்ஸ் தன் இரு கைகளையும் இறுக முகத்தில் அழுத்திக்கொண்டு கண்களை மூடி வெலவெலத்து உட்கார்ந்தார்.அந்த அறையில் அவரைத் தவிர யாரும் இல்லை.அருகில் அடுப்பு ஓன்று அறைக்கு சூடு அளித்துக் சற்று குளிரை குறைக்க உதவிக் கொண்டிருந்தது.ஆனால், ஜேம்ஸ் …

>>

திவ்யா ஈசன் கவிதை

இந்த மலைகளுக்கு அப்பால்உலகம் முடிந்துவிடும் எனநம்பிக்கொண்டிருந்தவனைமலை உச்சியிலிருந்துதள்ளிவிடுகிறீர்கள் எந்த உலகத்தில் போய் விழுவேன் உலகமே இல்லாதஒரு உலகத்தில் போய் விழுவேன் (லக்ஷ்மி மணிவண்ணன் முக நூலிலிருந்து) _

>>