
என்னை எரியவிடு;
இந்த இருள்வெளியில் பிரகாசிக்கும்
தீபத்தைப் போல்
என்னை வளரவிடு;
இந்த அகல் நெருப்பின் ஒளிரும்
தீ ஜுவாலையைப் போல்
என்னை மூழ்கவிடு;
விளக்குழியில் அமிழ்ந்திடும்
எரிதிரியினைப் போல்
என்னை காயவிடு;
வான்வெளியில் மிளிரும்
பகல் நிலவைப் போல்
என்னை தேயவிடு;
தேய்ந்து தேய்ந்து
திரும்ப வளரும் தேய்பிறைப் போல்
நாம் இழப்பதும் இல்லை
எதையும் பெருவதும் இல்லை
19 நவ இரவு 9:17
