நாகேந்திர பாரதி/நம்பிக்கை

வண்ணப் பூக்கள் எல்லாம்
வாசம் வீசுவ தில்லை

வாசம் வீசும் பூவிலும்
விஷத்தின் தன்மை உண்டு

புறத்தில் சிரிப்பவர் எல்லாம்
அகத்தில் மகிழ்பவர் அல்லர்

ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்
அடிகள் சறுக்குவ தில்லை

நம்பிக் கெட்டவரும் உண்டு
நம்பாமல் கெட்டவரும் உண்டு