
கோசல நாடும்,மருதத்தின் பீடும் என இரண்டையும் கம்பராமாயணத்தில் கம்பனின்
கவிநயத்தில் கண்டு வியக்க வைக்கும் பாடல், இது கம்பர் கோசல நாட்டின்
மருதநிலத்தின் வளத்தினை வர்ணிப்பதோடு அந்நாட்டின் செழிப்பினைத்
திரையிட்டுக் காட்டுகிறது.
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, – மருதம் வீற்றிருக்கும் மாதோ.
சோலைகளில் மயில்கள் ஆட, தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்க, மேகங்கள்
மத்தளம் போலொலிக்க , குவளைக் கொடிகளின் மலர்கள் அழகிய கண்ணென விழித்துப்
பார்க்க, நீர்நிலைகள் தம் அலைகளால் திரைச்சீலையாய் விரித்து காட்ட,
தேனொத்த மகர யாழிசை போன்று வண்டுகள் இனிது பாட, மருத நாயகி வீறு தோன்ற
அமர்ந்திருப்பது போன்றிருந்ததாம்… கம்பராமாயணத்தின் அற்புத வரிகள்.
கொண்டல் முழங்கின் மயில் ஆடும்; குவளை மலர்ந்திருக்கும் மாலைப் போதில்
தாமரை குவிந்துவிடும், கோசல நாடும்,மருதத்தின் பீடும் என இரண்டையும்
கம்பராமாயணத்தில் கம்பனின் கவிநயத்தில் கண்டு வியக்க வைக்கும் பாடல்..
(மருத நிலத்திலே உள்ள சோலையை நாட்டிய மேடையாகவும், மயில்களை நடன
மாதர்களாகவும், குளங்களில் உண்டாகும் அலைகளைத் திரைச்சீலையாகவும், தாமரை
மலர்களை விளக்குகளாகவும், மேகக் கூட்டங்களை மத்தளங்களாகவும், வண்டுகளின்
ரீங்காரத்தை மகர யாழின் இசையாகவும், குவளை மலர்களை இக்காட்சிகளை யெல்லாம்
கண்டுகளிக்கின்ற பார்வையாளர்களாகவும் சித்தரித்து மருத நிலத்தின்
சிறப்பைக் கம்பன் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றான்.)
| ReplyForward |
