
என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை;
ஏதோ நாவல்
ஏதோ கதை
என்றெழுதிய
வையும்
குப்பைக் கூடையின்
ஏக வாரிசு;
என்றாலும் என்ன?
சுசீலாவே
செத்து விட்டாள்
என் எழுத்து மறைந்தபின்
நான்
இருந்தென்ன
இல்லாமல் போனால்
தான்
என்ன?

என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை;
ஏதோ நாவல்
ஏதோ கதை
என்றெழுதிய
வையும்
குப்பைக் கூடையின்
ஏக வாரிசு;
என்றாலும் என்ன?
சுசீலாவே
செத்து விட்டாள்
என் எழுத்து மறைந்தபின்
நான்
இருந்தென்ன
இல்லாமல் போனால்
தான்
என்ன?