02.01.2022
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: புத்தகக் காட்சி தள்ளிப் போயிற்றே?
அழகியசிங்கர் : ஆமாம். ஒரு விதத்தில் நல்லதுதான்.
ஜெகன் : எனக்குக் கூட தொற்றைப் பற்றி பயம் இருந்துகொண்டே இருந்தது.
மோகினி : நீங்கள் பயந்து விட்டீர்களா?
அழகியசிங்கர் : ஆமாம். மேலும் புத்தகக் காட்சிக்கு வந்து விருட்சம் ஸ்டாஙூல் புத்தகங்கள் வாங்குவார்களா என்ற சந்தேகம் இருந்தது.
மோகினி : ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்.
அழகியசிங்கர் : இப்பப் பரவப் போகிற கொரானால்தான் காரணம்.
ஜெகன் : நீங்கள் அதிகமாகப் புத்தகம் கொண்டு வர வில்லையே?
அழகியசிங்கர்: அது இன்னொரு காரணம்.
ஜெகன் : நீங்கள் அதிகமாகப் புத்தகங்கள் கொண்டு வந்தாலும், அதை வாங்க வருவது குறைவான பேர்கள்தான் இருப்பார்கள்.
அழகியசிங்கர் : புத்தக வெளியீடு வாழ்வாதாரமாக இருப்பவர்களுக்கு செம்ம அதிர்ச்சியாக இருக்கும்.
மோகினி : ஆமாம்.
ஜெகன் : இனிமேல் புத்தகக் காட்சிகளைப் பழையபடி நடத்த முடியுமா என்று தெரியவில்லை.
மோகினி : உண்மைதான்.
அழகியசிங்கர் :நான் இதுவரை 7 புத்தகங்களை அச்சடித்துள்ளேன்.
ஜெகன் : அது போதாதா?
அழகியசிங்கர் :ஆமாம். ஒரு பதிப்பாளர் என்னிடம் பேசினார் அவர் 100 புத்தகங்களைக் கொண்டு வருகிறோம் என்று சொன்னார். ஆடிப்போயிட்டேன்.
மோகினி : கோடிக் கணக்கில் முதலீடு செய்கிறார்கள்.
அழகியசிங்கர் : ஆமாம். ஆனால் என்னைப் போல் சாதாரண பதிப்பாளருக்கு ஒரு பயனும் கிட்டாது.
மோகினி : நான் பேசப் பேச நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஜெகன்: இதை இரவு 11 மணிக்குப் பதிவு செய்கிறோம்.
அழகியசிங்கர். ஆமாம். நல்ல இரவு. காலையில்தான் இதைப் பதிவிடப்போகிறேன்.
எழுதியது இரவு 10.51
நம்பிக்கை கொள்வோம். இதுவும் கடந்துபோகும்