எனக்கொன்றும் இல்லை,
வெறும்
லிவர் ட்ரபிள் தான்;
டாஸ்டாயவ்ஸ்கிக்கு?
‘தண்ணி மட்டும்
போடாதே
வெந்நீரில் குளிக்கலாம்’
என்றார் டாக்டர்.
எனவே என்
எழுத்தில் நான்
தண்ணி போட
முடியாமல்
நடமாடும் பாலையின்
வெக்கை உண்டு
வரட்சி என்கிறீர்;
அதுதான் இது.
வெள்ளெலும்பு தெரிய
விரைத்துக் கிடக்கும்
பழம்பெரும்
பிணங்களும் உண்டே ;
விமர்சரைக் கேளும்.
(மனுஷ்யன்,
என்னமாய்
குடிக்கிறான்?)
வேறொன்றும் இல்லை:
எனக்கு லிவர் ட்ரபிள்;
பிரான்ஸ் காப்காவுக்கு?
க்ஷயமா?
புதுமைப்பித்தனுக்கும்!
பித்தனுக்கு முந்தி
பாரதிக்கு என்ன?
பாரதத்து கவிகளுக்கு
வாழையடி வாழையென
வந்த பரம்பரை நோய்
பசி!
ஏனோ அது என்னை
எட்டியும் பார்த்ததில்லை.
எங்களுக்குத் தெரியும்.
எழுத்துத் தொழில் அழகு.
எனவே நாங்கள்
எப்பவும் கொஞ்சம்
மெட்டீரியலிஸ்டுகள்.
அந்த இழுப்பில் போய்
கம்யூனிஸக் குட்டையிலே
அடியற்று விழுந்து
கிடந்து
உழன்றது ஒரு காலம்.
இருந்தும் அது ஒரு
ஸ்பெஷல் ரெப்புடேஷன்.
புரட்டிப் பாரும்
