இரண்டு காணொளிகளையும் பதிவிட்டேன்

வணக்கம்.


தினமும் நவீன விருட்சம் டெய்லியில் தரமான படைப்புகளை வெளியிட வேண்டுமென்று நினைப்பேன்.


தூங்கும்போது யோசித்துப் பார்ப்பேன்.  என்னன்ன படைப்புகளை இன்று பதிவிட்டோமென்று.


இரண்டு காணொளிகளையும் பதிவிட்டேன்.


கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று மூன்று விதமாகப் படைப்புகளை வெளிப்படுத்துகிறேன்.  

‘விருட்சம் நினைவுகள்’ என்ற தொடர் கட்டுரையை நாளையிலிருந்து ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன்.


இன்று பெருந்தேவி, முபீன்  கதைகள் சிறப்பாக அமைந்தன.


தொடர்ந்து 300 பேர்கள் பார்க்கிறார்கள்.  உண்மையில் வாசிப்பவர்கள் எத்தனைப் பேர்கள் என்பது தெரியவில்லை.


விருட்சம் அச்சில் வந்தாலும் இத்தனைப் பேர்கள் வாசிப்பார்களா என்று தெரியாது.

 
சிறுபத்திரிகைகளில் வெளிவந்த தலையங்கங்கள் முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றும்.  அவற்றிலிருந்து ஒவ்வொன்றாகக் கொண்டு வரலாமென்று நினைக்கிறேன். இன்னும் என்னன்னமோ திட்டங்கள் வைத்திருக்கிறேன்.  நிறைவேற வேண்டும்.


வாழத்துகளுடன்,.


அழகியசிங்கர்