09.10.2021
அழகியசிங்கர்
ஜெகனும் மோகினியும் (அழகியசிங்கரைப் பார்த்து) : வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : உங்களால் முடியாதது எது?
அழகியசிங்கர் : புத்தகம் படிக்காமல் இருப்பது
ஜெகன் : உங்களால் முடிந்தது
அழகியசிங்கர் : புத்தகம் படிப்பது
மோஹினி : இன்றைய கதைஞர்கள் கூட்டம் எப்படி நடந்தது?
அழகியசிங்கர்: சிறப்பாக இருந்தது. ஒன்று சிட்டியின் கூட்டம். இன்னொன்று சீதா ரவி அவர்களின் கூட்டம்.
ஜெகன் : மொத்தம் எத்தனை பேர்கள் பேசினார்கள்.
அழகியசிங்கர் : எட்டு பேர்கள் பேசினார்கள்.
மோஹினி : கதைகளைப் படித்து அதுகுறித்துப் பேச வேண்டுமில்லையா?
அழகியசிங்கர் : ஆமாம். ஆனால் ஆறு நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.
ஜெகன் : ஆனால் உங்கள் கூட்டம் தவிர்க்க முடியாமல் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்து விடுகிறது.
அழகியசிங்கர் : ஆமாம்.
மோஹிணி : உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா?
அழகியசிங்கர் : எல்லோரும் திருப்தியாகப் பேசுகிறார்கள்.
ஜெகன் : இதுவரை 33 எழுத்தாளர்களைக் குறித்துப் பேசி விட்டீர்கள் போலிருக்கிறதே
அழகியசிங்கர் : ஆமாம்.. எல்லோரையும் கதைகளைப் படிக்க வைக்கிறேன். அதன் மூலம் ரசனையை ஏற்படுத்துகிறேன்.
மோஹினி : கதைகளைப் படிப்பது என்பது நல்ல அனுபவம்
ஜெகன் : ஆமாம்.
அழகியசிங்கர் : ஒவ்வொரு எழுத்தாளரின் மொத்தம் எட்டுக் கதைகளைப் படித்துவிடுவேன்.
மோஹினி : இப்படி படித்தால்தான் உண்டு.
அழகியசிங்கர் : இன்னும் படிக்க வேண்டிய கதைகள் ஆதிகமாக இருக்கின்றன.
ஜெகன் : சிட்டி கொஞ்சமாக கதைகள் எழுதியிருந்தாலும் அவர் கதைகள் வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன.
அழகியசிங்கர் : கதைகளைப் படித்துச் சொல்பவர்கள் எப்படிச் சொல்லப் போகிறார்கள் என்ற திகைப்பு இருந்தது.
மோஹினி : நாளை நாம் சந்திப்போம்.
அழகியசிங்கர் : ஆமாம்.