வெங்கடேஷ் சக்கரவர்த்தி (சக்ஸ்) நினைவேந்தல் கூட்டம் காணொளி../வாசுதேவன்

கடந்த சில நாட்களாகவே என் மனநிலை சரியில்லை. கூடுமானவரையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கூடுதலாக நேற்று நடந்த நினைவேந்தல் கூட்டமும் என்னை நிலைகுலைய வைத்தது மட்டுமின்றி நெகிழ்ச்சிப் படுத்தியது. ‘அவர்’ ஒருபோதும் தன்னை முன்னிருத்தியதில்லை. அந்த கூட்டத்தில் பேசியவர்கள் மிகப்பெரிய ஆளுமைகள். இன்று மாலை நண்பர் ஒருவர் அழைத்து சினிமா வியாபாரத்தை பற்றி பேசினார். அருண் எம், கோகுல் பிரசாத் போன்ற சின்ன பசங்களுக்கு திரைப்படம் என்றாலே அரிச்சுவடிக்கூடத் தெரியாது. இலக்கியம்,ஓவியம், இசை, தத்துவம் பற்றிய எந்த பயிற்சியும் இவர்களுக்கு இல்லை. இன்று முகநூலில் இம்மாதிரியான முதிர்ச்சியற்ற சின்ன பசங்களின் வெத்து உதாரர்களை பொருட்படுத்துவது வீண் வேலை என்றாலும், ஒரு கலையை தங்களுக்கு லாவகமாக வளைத்து காசு/புகழ் சம்பாதிப்பது மகா அயோக்கியத்தனம். நவீன மோசடித்தனம். இத்தகைய போலி வெத்து வேட்டுகளை உரித்து எடுக்க வேண்டும் என்ற கோபத்தில் எழுதுகிறேன். இந்த பேர்வழிகளுக்கு சினிமாவும் தெரியாது, கலையும் தெரியாது, ‘அவரையும்’ தெரியாது. இணையதளங்களில் கலை, இலக்கியம், திரைப்படத்தை முன்வைத்து நூதன மோசடிவசூல் நடந்துவருவது சகிக்கமுடியவில்லை. ‘அவர்’ நினைத்திருந்தால், முதுகை வளைத்திருந்தால், சிரித்திருந்தால், கோடிக்கணக்காக சம்பாதிருத்திருப்பார். ஆனால் ஒருபோதும் சமரத்திற்கு ஆட்பட்டதில்லை. ‘அவரை’ப் பற்றி இப்போது பலருக்குத் தெரியாது. பல விதைகளை நட்டுள்ளார். அது மிகப்பெரிய ஆலமர விருட்சமாக மாணவர்கள் ரூபத்தில் உருவாகும். அந்த காலம் வெகுதொலைவில் இல்லை.

One Comment on “வெங்கடேஷ் சக்கரவர்த்தி (சக்ஸ்) நினைவேந்தல் கூட்டம் காணொளி../வாசுதேவன்”

Comments are closed.