நகுலனின் சுருதி கவிதைகள்

நவீனன் சொன்னது

என்ன மனிதன்!
வாயைத் திறந்து
பேசவே பயப்படுகிறான்
நவீனன்
‘நகுல’னிடம்
சொன்னது.

அடை

வீட்டுக்
கொல்லையில்
பெட்டைக்
கோழி
அடைகாக்க

என் குச்சுக்குள்
நான் நீண்டு கிடக்க
சுவர்க்கோழி
“க்ரீச், க்ரீச்”
என்று கூவ
சாலையில்
ஒரு பாரவண்டி
நக்ஷத்ர ஒளியில்
மெல்லச் செல்லும்.