
எங்கேயோ எட்டாத் தொலைவில்
உருண்டு வரும் மீனதுவும்
உலகையெலாம்
எழுப்புகிறது, புல் வளரும்
வேகம் அது சந்தை இரைச்சலிலும்
பெரிதாகிக் கேட்கிறது. கிழவன் ஒருவன்பக்கத்தறையிலே
குந்தி அழுகிறான்.
யாரோ ஒருத்தி உதடசையாத
வாய்
வம்பால் பெருந் தீ ஏற்றி வைத்தாள் :
மூண்ட குருக்ஷேத்திரம்
காலத்தின் சந்து
பொந்துகளில் ஓடி ஒலிக்கிறது.குழந்தையொன்று
தொட்டிலில் கிடந்து
மெல்ல உதடசைத்து
ஊரை யெழுப்புறது
.
மரங்கள் துளிர்க்கும் ஓசை, பூக்கள்
பூக்கும் ஓசை, புழுக்கள் காலை உணவு
அருந்தும் ஓசை – இப்பேரிரைச்சலில்
என் சிந்தனைத் தேர் ஓட மறுத்துக்கிறீச்சிட்டு
அசைந்தாடி நின்று அதிர்
வேட்டும் உலுக்குமரமும்
கேட்கிறது.
