எரிதல்/அதங்கோடு அனிஷ்குமார்

அப்பொழுதுதான்
வீட்டைப் பூட்டி
தெருவில் இறங்கினான்.

வீடு பற்றி எரிகிறது
என்றான்
எவனோ ஒருவன்.

திரும்பிப் பார்ப்பதற்குள்
எரிந்து விழுந்து
எழுந்து போனான்.