குறள் என்பா

சிறகு இரவி

நாட்குறிப்பு எழுத உட்கார்ந்த பொழுது
டைரியைத் தேடியும் கிடைக்கவில்லை!
**

நாடோடிக் கலைஞன் கையில் டோலக்கு
பெண்சாதி காதில் புல்லாக்கு!
**

சிலையை அழகாக்க சிதறிய கற்கள்
அதற்கே கூரையான விந்தை!
**

தண்டவாளத்தை துண்டை அடித்தால் வகுப்பு
பெயர்த்தால் பெரும் இழப்பு!

  • *

சுவர்க்கோழி போல நான்
யாரும் கேட்பதில்லை என்னை!

  • *

One Comment on “குறள் என்பா”

Comments are closed.