அழகியசிங்கர்
நான் எளிதாக கவிதை எழுத
குறள் என்பாவை நாடுகிறேன்
2.
நண்பனைப் பார்க்கச்
சென்றேன் பொழுதுபோகாமல்
அவன் எங்கோ போய்விட்டான்
3.
ஏன் எழுதுகிறாய்
குறள் என்பா
என்றார் ஞானக்கூத்தன்
கனவில்
4.
எல்லோரிடமும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
யாரும் நல்லவர்களாக இருப்பதில்லை
5.
ஐந்து பேர்களைத்
திருமணம் செய்தவள்
எப்படி அவர்களை சமாளித்தாள்
6.
என் முதல் கவிதைத் தொகுப்பு
யாருடனும் இல்லை. இப்போதும்
7.
கவிதை என்றால் என்ன எழுதுவது
பேசாமல் இருந்தால் போதும்
8.
எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது
என்று நினைத்தால் பயம்
9.
காஷ்மீரில் பயங்கரவாதிகள்
அப்பாவி மக்களைக்
கொன்று கொன்று குவிக்கிறார்கள்
10.
நான் போர்ஹே புத்தகங்களை இரண்டு
வைத்திருக்கிறேன்
எப்போது படிக்கப் போகிறேன்.