19.10.2021 – செவ்வாய்க் கிழமை
அழகியசிங்கர்
அழகியசிங்கர் : இருவருக்கும் வணக்கம்.
ஜெகனும், மோகினியும் : வணக்கம்.
அழகியசிங்கர் : வரும் சனிக்கிழமை அ.முத்துலிங்கம் சிறுகதைகளையும், ரேவதி பாலு சிறுகதைகளையும் எடுத்துப் பேசப் போகிறோம்.
மோகினி : நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் எழுத்தாளரையும் ஆண் எழுத்தாளரையும் கூப்பிட்டுக் கதைஞர்கள் கூட்டம் நடத்துகிறீர்கள் இல்லையா?
ஜெகன் : 30க்கும் மேற்பட்ட கதைஞர்களின் கூட்டம் நடத்தி விட்டீர்கள்.
அழகியசிங்கர் : இதன் மூலம் சிலர் கதைகளைப் பற்றிப்பேசத் தூண்டுகிறேன்.
ஜெகன் : சமீபத்தில் உயிர்மையில் தேவதச்சன் கவிதைகளைப் படித்தேன்.
அழகியசிங்கர் : அம்மாவின் உணவுகள் என்ற கவிதையைப் படித்தேன்.
மோகினி : சிலர் மட்டும் எப்போது எழுதினாலும் திறமையாகவே கவிதைகள் எழுதுவார்கள். அழகியசிங்கர் : அந்தக் கவிதையை எடுத்து இப்போது படித்துப் பார்க்கலாம்.
அம்மாவின் உணவுகள்
குழந்தை
பள்ளியிலிருந்து
திரும்பியதும்
அம்மா
அவசரமாக அவளது
டிபன்பாக்ûஸத்
திறந்து பார்ப்பாள்
பிறகு மாற்றுடை
போட்டுவிடுவாள்
மிச்சமிருக்கும் டிபனை
சாப்பிடுவாள்
நின்று கொண்டே..
ஜெகன் : எளிமையாக எவ்வளவு சிறப்பாக எழுதி உள்ளார்..
அழகியசிங்கர் : தினமும் நடக்கிற நிகழ்ச்சியைத்தான் பதிவு செய்கிறார். எத்தனையோ விஷயங்களைச் சொல்கிறார். . இந்தக் கவிதையில் குழந்தை மிச்சம் வைத்து விட்டு டிபன் பாக்ஸ் எடுத்துக் கொண்டு வருகிறாள் என்று அம்மா குழந்தையைத் திட்டவில்லை.
மோகினி : நின்றுகொண்டே சாப்பிடுகிற மாதிரி ரொம்ப குறைவாகவே டிபன் பாக்ஸில் டிபன் இருப்பதாகக் கூறுவதுபோல் தோன்றுகிறது.
அழகியசிங்கர் : இன்னும் பலருடைய கவிதைகளையும் படித்துப் பார்க்க வேண்டும்.
ஜெகன் : கடற்கரய்யின் ‘காஃப்காவின் கரப்பான் பூச்சி’ நீங்கள் திரும்பவும் படித்து முழுவதும் எழுத வேண்டும்.
அழகியசிங்கர் : ஆமாம்
மோகினி : இன்றைய சொற்பொழிவு முடிந்து விட்டது. நாளை சந்திப்போம்.
அழகியசிங்கர் : (கை கூப்பியபடியே) சந்திப்போம்.