எனக்கு
முதல் குழந்தை
பெண்ணாகப் பிறந்தாள்
பிரசவ வேதனையில்
துடித்துக் கத்தினாள் மனைவி.
பிரசவ வார்டு
அருகிலிருந்த நான்
செய்வதறியாது திகைத்து நின்றேன்
பெண் குழந்தை என்று
செய்தியறிந்து
அழுது விட்டேன்.
என் கண்ணீரைத் தடுத்து
நிறுத்த முடியவில்லை.
பிரவாகம் போல் வழிந்தது.
பெண் குழந்தை
பிறந்தது என்று அழவில்லை
மனைவி
பிரசவ வேதனையில்
துடித்தாள்
என்பதற்காக அழுதேன்.
அதற்குப் பிறகு
எங்கள் குடும்பத்தில் அதிகமான
பெண் குழந்தைகள்
கடைசியில்
பிறந்த என் பேத்தி
ஆரபி
ஆறு வயதுதான் ஆகிறது
ஆனால் மாடர்ன் ஓவியர்.