நீ இல்லாத போதெல்லாம் பெய்கிறது
இந்த பொல்லாத மழை
வேண்டுமென்றே
என்னை
வதைத்துக் கொண்டு
இன்றுதான்
புரிந்தது
காரணம்
சிறு வயது முதல்
அதனை கொண்டாடி வந்த
நான்
என் வாழ்வில்
நீ வந்த பின்
அதனை லட்சியம்
செய்யவில்லை
என்று கோபம் அதற்கு
உன் மேல்
எப்படி புரிய வைப்பேன்
அதற்கு நோகாமல்-
அவன் வந்தால்
எனக்குள் பெய்கிறது மழை
என்று
சபாஷ்