இனிக்கும் தமிழ் – 153/ டி வி ராதாகிருஷ்ணன்

பொய்கை ஆழ்வாரின் முதல் திரு அந்தாதியில் சில பாசுரங்கள் ஆச்சரியமானவை.மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் இறைவனின் குணங்களைப் பாடும் பொழுது, இவர் மட்டும், இறைவனின் குணங்களை நம்பாதவர் மாதிரி, நீ உலகை அளந்தாயாமே ? அவ்வளவு பெரிய திருவடியா உனக்கு ? உலகை எல்லாம் உண்டாயாமே ? அவ்வளவு பெரிய வாயா உனக்கு ? நீ எப்போ அப்படி எல்லாம் செய்தாய் என்று எனக்குத் தெரியாது என்று கூறி சந்தேகப்படுவதுபோல் புகழ்கிறார்…

இனிமையான சந்த நயம் மிக்க பாசுரங்கள்…

பாடல்

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், – எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்?

பொருள்

மண்ணும்-இந்த பூமியும்
மலையும் -மலையும்
மறிகடலும் – அலை கடலும்
மாருதமும் – காற்றும்
விண்ணும்- ஆகாயத்தையும்
விழுங்கியது -நீ விழுங்கியது
மெய்யென்பர், -உண்மை என்று சொல்வார்கள்
எண்ணில் – எண்ணிப் பார்த்தால்
அலகளவு – அளந்து பார்த்தாலும்
கண்டசீ ராழியாய்க்கு – கடல் போன்ற குணங்களை கொண்ட உனக்கு,
அன்றிவ்- அன்று எந்தவுலகளவு முண்டோவுன் வாய்? = உலகளவு உண்டோ உன் வாய் ?

-