தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர்கள்/ஜி ராமநாதன்/டி வி ராதாகிருஷ்ணன்

ஜி. ராமநாதன் இசைமேதை என்றும், சங்கீதச் சக்கரவர்த்தி என்றும் சொல்வர். சுருக்கமாக ஜிஆர் எனவும் வழங்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகின் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதரின் திரைப்படங்கள், சேலத்தைச் சேர்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் கோயம்புத்தூரின் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். 1950-களில் வெளிவந்த சிவாஜி கணேசன், எம். ஜி. ராமச்சந்திரன் போன்றோரின் பெரும்பாலான சிறந்த திரைப்படங்களுக்கு இவரே இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார்கோவில் எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் கோபாலசாமி ஐயர் இந்திய இரயில்வேயில் துணை ஆய்வாளராக பணியாற்றினார். ராமநாதன் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார். 1942இல் திருமணம் முடித்த இவருக்கு இரண்டு மகன்கள், சத்ய சாயி பாபாவின் மேலுள்ள பக்தியினால் அவர்களுக்கு சாய், பாபா என்று பெயரிட்டார். தனது 18ஆவது வயதில் பாரத கான சபா என்கிற நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவராக சேர்ந்தார். அதன் பிறகு புகழ்பெற்ற வி. ஏ. செல்லப்பா நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்புடன் பின்ணணிப் பாடகராகவும் சேர்ந்தார். 1932இல் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட காலவரிசி என்கிற தமிழ்ப்படமே இவர் முதல் படம் எனலாம்.
1938-ல் எம். கே. தியாகராஜ பாகவதர் தயாரித்த சத்தியசீலன் என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்கிற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்தார்.
ஜி. ராமநாதன் முறையாக கர்நாடக இசை பயின்றதில்லை. ஆனாலும் கேட்டறிந்த கேள்வி ஞானத்தாலும், கர்நாடக இசையின் மீதிருந்த ஆர்வத்தாலுமே கற்றுக்கொண்டு இசையமைக்க ஆரம்பித்தார்.இவர் இசையமைக்கத் தொடங்கிய 1940-களில் தமிழ்நாட்டில் திரைப்படத்தைப் போலவே நாடகங்களும் பிரபலமாயிருந்தன. ஆகையால் இரண்டையும் கையாளவேண்டியிருந்தது.
இவர் இசையமைத்த காலகட்டங்களில் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டே திரையிசையும் இருந்தது. ஆனாலும், திரையிசை, கர்நாடக இசைக்கு சமமாக கருதப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. இதைத் தவறு என நிருபிக்கும் வகையில் இருந்தது எம். கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படத்தில்”மன்மத லீலையை வென்றார் உண்டோ?” என்ற பாடல்
ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோரின் குரல்களின் மீதும், இந்தி திரைப்பட இசையமைப்பாளர் நௌஷத்தின் இசை மீதும் ஒரு தனி விருப்பம் கொண்டிருந்தார். இவருடைய இசையில் பாடியதில் எஸ். வரலட்சுமி மற்றம் ஜிக்கி ஆகியோரின் குரல் இவருக்கு மிகவும் விருப்பமானது.. எம். கே. தியாகராஜரின் குரலின் மீது மிகப்பெரிய விருப்பம் கொண்டிருந்தார்; மேலும், ஒரு பாடகரிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எம்கேடியால் தான் தரமுடியும் என்பார்.ஜிஆர், அவரே ஒரு நல்லப் பாடகர், தன்னுடைய இசையில் பொன்முடி திரைப்படத்திலும், கே. வி. மகாதேவன் இசையில் வந்த அல்லி பெற்ற பிள்ளை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். எப்பொழுதும் பாடகரின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பார். பாடகர் டி. எம். சௌந்தரராஜன், ஜிஆரின் இசையில் அவருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பாடகரால் பாடமுடியும் என்றால், அந்தப் பாடகர் வேறு எந்த இசையமைப்பாளரின் இசையிலும், உலகின் எந்த மூலையிலும் எளிதாக பாடலாம் என்று சொன்னார்[.
தன்னுடைய இசையமைப்பின்போது பாடலை பதிவுசெய்யும் முன் பாடகர்கள் எப்படி பாட வேண்டும் என்பதையும் விளக்கிப் பாடிக் காட்டுவார். புதுயுகம் என்கிற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இவரின் கடைசி படம் தெய்வத்தின் தெய்வம் அருணகிரிநாதர் திரைப்படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தார் பிறகு இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா அந்தப் படத்திற்கு இசையமைத்தார்.
80 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவரின் சில படங்கள்
ஹரிஹரமாயா (1940)
பரசுராமர் (1940)
ஆர்யமாலா (1941)
சிவகவி (1943)
ஹரிதாஸ் (1944)
ஜகதலப் பிரதாபன் (1944)
ஸ்ரீ வள்ளி (1945)
ஆரவல்லி சூரவல்லி (1946)
கடகம் (1947)
குண்டலகேசி (1947)
மாயாவதி (1949)
பொன்முடி (1950)
சுதர்சன் (1951)
ஜமீந்தார் (1952)
அமரகவி (1952)
ரோஹிணி (1953)
குமாஸ்தா (1953)
இன்ஸ்பெக்டர் (1953)
தூக்குத் தூக்கி (1954)
புதுயுகம் (1954)
டாக்டர் சாவித்திரி (1955)
மகேஸ்வரி (1955)
நல்ல தங்கை (1955)
சதாரம் (1956)
அமரதீபம் (1956) (நாடோடிக் கூட்டம் நாங்க..பாடல்)
கோகிலவாணி (1956)
நான் பெற்ற செல்வம் (1956)
புது வாழ்வு (1957)
புதுமைப்பித்தன் (1957)
மணமகன் தேவை (1957)
வணங்காமுடி (1957)
கற்புக்கரசி (1957)
சக்கரவர்த்தி திருமகள் (1957) (ஆடல் காணீரோ..பாடல் சிறப்பு)
சமய சஞ்சீவி (1957)
காத்தவராயன் (1958)
உத்தமபுத்திரன்
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959)
ராஜா தேசிங்கு (1960)
சவுக்கடி சந்திரகாந்தா (1960)
கடவுளின் குழந்தை (1960)
தோழன் (1960)
நாகநந்தினி (1961)
கப்பலோட்டிய தமிழன் (1961)
பட்டினத்தார் (1962)
அரசிளங்குமரி (1962)
சித்தூர் ராணி பத்மினி (1963)
அருணகிரிநாதர் (1964)

மறக்க முடியா பாடல்கள் சில

“சொப்பன வாழ்வில் மகிழ்ந்து”,”வதனம் சந்திர பிம்பமோ””மன்மதலீலையை வென்றார் உண்டோ?”
” வாராய் நீ வாராய்” – மந்திரிகுமாரி
கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியர பாடல்கள்.
அம்பிகாபதியில்..”அன்பே..இன்பம் ..எங்கே..இங்கே” பாடல்
தூக்குதூக்கியில்..”ஏறாத மலைமேலே”சுந்தரி சௌந்தரி” “அபாய அறிவிப்பு””பெண்களை நம்பாதே” போன்ற அனைத்து பாட்ல்களும்.
அரசிளங்குமரியில், “சின்னப் பயலே..சின்னப் பயலே” பாடல்
வணங்காமுடியில், “ஓம் காரமாய் விளங்கும் நாதம்”. “மலையே உன் நிலையை நீ பாராய்”
உத்தம புத்திரன் படத்தில்,”முல்லை மலர் மேலே”.’உன் அழகை கன்னியர்கள்”. “யாரடி நீ மோகினி” பாடல்
“நாடோடி கூட்டம் நாங்க” அமரதீபம் பாடல்
வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் “போகாதே..போகாதே..என் கணவா”
மதுரை வீரன் படத்தில் ‘வாங்க மச்சான் வாங்க”
அருணகிரிநாதர்” படத்தில் முத்தைத் திரு பாடல்.இப்படப்பாடல். இசையமைத்துக் கொண்டிருந்த போது நோய்வாய்ப் பட்டார்.டி ஆர் பாப்பா பாட்ல்களைத் தொடர்ந்தார்.
இன்னைக் கவர்ந்த இசையமைப்பாளர் ஜி ஆர் ராமநாதன் என இசைஞானி இளையராஜா சொல்லியுள்ளார்.
1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் அமரர் ஆனார் ஜி ஆர்.