க.நா.சுவும் பாரதியும்/அழகியசிங்கர்

எனக்கு
இப்போதெல்லாம்
க.நா.சு கவிதைகள்தான்
பிடித்திருக்கின்றன

க.நா.சுதான் என்
கையைப் பிடித்து
கவிதை
எழுதக் கற்றுக்
கொடுக்கிறார் என்று
நினைக்கிறேன்.

ஒரு காலத்தில்
பாரதியை அப்படி
நினைத்துக் கொண்டிருந்தேன்.

பாரதி
இந்திய விடுதலைக்குத்
தன்னை
நிலை நிறுத்திக்கொண்டார்.

புரியாமலும்
உச்சரிக்க முடியாத
கவிதைகளும்
எழுதியிருக்கிறார்.

அவருடைய வசன
கவிதைகள்தான்
எனக்குப் பிடித்திருந்தது
அதிலும்
வேதாந்த கருத்துகளை
அள்ளி வீசியிருக்கிறார்

செல்லம் மாவுடன்
அவர் வாழ்ந்த
வாழ்க்கையைக்
கவிதைகளாக எழுதவில்லை

உங்களுக்குப் பிடிக்காது
நான் இப்படி எழுதுவது
என்ன செய்வது
எனக்குத்
தோன்றுவதை
எழுதுகிறேன்