மெளலானா ரூமி கவிதை

தமிழில் : க மோகனரங்கன்

என் இதயத்தின்
ஆழத்தில்,
உன் மீதான
என் அன்புக்கு
எல்லையே இல்லை.
எல்லாவற்றிலிருந்தும் மறைந்திருக்கும் நான்
வார்த்தைகள் இல்லாமல் உன்னிடம் பேசுவேன்.
கூட்டத்தின் நடுவே
கூறினாலும்,
உன்னைத் தவிர
வேறு யாரும்
என் கதையைக்
கேட்க மாட்டார்கள்.