சிற்பியும் சிறுபிள்ளைகளும்

வளவ. துரையன்

கம்பனைக் காண்போம்—4

கம்பனின் அவையடக்கம் தொடர்கிறது. ஒருகாட்சியைக் காட்டுகிறான்.

“சிறு பிள்ளைகள் நிலத்திலே வீடுகள் கட்டி விளையாடுகின்றனர். தங்கள் வீடுகளில் பல அறைகளையும், ஆடுவதற்காக அமைந்த மேடைகளயும் தரையில் கிறுக்கி அமைத்து விளையாடுகின்றனர். சிற்ப நூல்களில் தேர்ச்சி பெற்ற தச்சரும் சிற்பிகளும் அவற்றைக் கண்டு “இது சரியில்லை, அது சரியில்லை” என்று அவர்களிடம் கோபம் கொள்வார்களோ? அதுபோல இறையருளும் ஞானமும் பெறாத நான் இயற்றிய அற்பமான தமிழ்ப்பாக்களைப் பார்த்து முறையாக நூலறிவு பெற்ற சான்றோர்கள் என்னிடம் கோபம் கொள்வார்களோ?” என்று இப்பாடலில் கம்பன் கேட்கிறான்

  “அறையும் ஆடரங்கும் பட பிள்ளைகள்
தறையில் கீறிட தச்சரும் காய்வரோ
இறையும் ஞானமும் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ             

         [தறை=தரை]