ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 27


அழகியசிங்கர்


அழகியசிங்கர்  : வணக்கம்.

மோகினியும், ஜெகனும் : வணக்கம்.

ஜெகன் : நீங்க புது தியரி ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறீர்களே?

அழகியசிங்கர் : ஆமாம்.  கதைகளை எல்லோரும் தயாரிக்கிறோம்.

மோகினி : ஏன் தானாகவே உருவாகவில்லையா? 

அழகியசிங்கர் : இல்லை.  

மோகினி : சிறந்த எழுத்தாளர்களுக்குத் தானாகத்தான் கதைகள் உருவாகின்றன.

அழகியசிங்கர் : நிச்சயமாக இல்லை.  அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள், மற்றவர்கள் மூலம் கேள்விப்படுகிற செய்திகள் இதைத்தான் கதைகளாக மாற்றுகிறார்கள். 

ஜெகன் : சிறந்த எழுத்தாளர்கள் கதை எழுதும்போது சிறப்பாக மாற்றி விடுகிறார்கள்.

அழகியசிங்கர் : ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறார்கள், மொழியில் அதை எப்படித் தெரிவிக்க முடியும் என்பதெல்லாம் தாயரிப்பதற்கான ரா மெட்டிரியல்ஸ்.

மோகினி  : நாளை இதைப் பற்றி இன்னும் பேசலாம்.

அழகியசிங்கர் : பேசலாம்.