கனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதி மறைந்தார்

முகநூலில் : ஆர.கந்தசாமி

கனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதி மறைந்தார் என்ற தகவலை அகிலன் கண்ணன் அவர்களின் முகநூல் பதிவு வாயிலாக அறிந்தேன். அவரது பதிவுகள் நிறைய படித்துள்ளேன். அவரது கடைசி முகநூல் பதிவு ஐந்து நாட்களுக்கு முன்னர் வந்தது. அதில் அவர் பைபாஸ் சர்ஜரிக்கு அடுத்த மருத்துவமனைக்கு தான் மாற்றப்படப் போவதாகவும், உடல்நிலை சரியாகும் வரையில் பழைய பதிவுகளைப் பதிவிடப்போவதாகவும், பின்னர் புதிய பதிவுகளைக் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.

நிறைய தகவல்களைத் தந்து கொண்டே இருந்த பெரிய பொக்கிஷம் மறைந்தது தமிழுக்கு மிகப் பெரும் இழப்பு.