தங்கேஸ் கவிதை 

கண்களை மூடிக்கொள்கிறேன் 

இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!

அந்த இளவேனிற் காலம்

திரும்பி வரும்போது

ரேடியோப் பூக்கள் பூத்த மலைச்சரிவுகளில் 

நாம்  பசுந்தளிர்களிடம்  

உரையாடியபடி நடந்து கொண்டிருப்போம் !

பால்கொடிகள்

 என் மேனியெங்கும் பற்றிப் படர

மெய்சிலிர்ப்பில்   நான் மீண்டும்  பனிச்சிலையாகி விடுவேன்

தெளிந்த வானமும் 

அதன் மீது நிலவும்

அரைவட்டமடித்துப் போகும்

வெண்நாரைக்கூட்டங்களும்

 மீண்டும் தோன்றும் போது

கடைக்கண்ணோரம் 

துளிர்க்கும் ஒரு துளி கடலில்

நீ  படைத்த அத்தனை  உயிரினங்களும் உன் முன்னால்

இரகசியமாய் நீந்தி மறைந்து விடும் கண நேரத்தில்

ReplyForward