
மிக அண்மையில்
சந்தித்தது –
மிக நெருக்கமாகத்தான் உரையாடியது..
வழக்கம் போலவே
சிரிப்பும் கொண்டாட்டமும் பஞ்சமின்றி
நான்காம் நாள் வந்து விழுகிறது இடி
நண்பர் மறைந்த சேதி
வாழ முயன்று கொண்டே
இருக்கிறேன்
வீடு தேடி வந்து
அவர் உடனிருந்து செலவிட்ட கணங்களுக்குள் –
அடங்கி விடுகிறது என்னுயிர்
அவர் வியந்து பார்த்திருக்க!

நட்பின் நடவு !
அன்பின் ஊற்றில்
வளர்ந்ததாலே!
வருத்தமாகத்தான் இருக்கிறது!
வாடும் பயிராய்
வானம் நோக்க
கண்கள் கலங்க வாராதோ என்பதைப்போல!
அருமையான கவிதை. நன்றி
வலிதரும் வரிகள்.
நட்பின் வலி. அனுபவித்து கவிதை யாய் பெருக்கெடுத்து ள்ளது.
நாம் கொண்ட அன்பின் வலி..
அருமை
உண்மைதான்.
நண்பர்கள் மறையும் பொழுது ,
வழி தரும் நினைவுகள் உயிர் பெற்று விடுகின்றன .
கடந்து செல்ல முடியாது .
தப்பித்துச் செல்லவே
வழிதேடும் மனது .