கவிதை எழுத நேரமில்லை/கேள்விக்காரன்

1.

நானும் கவிதையும்
தனித்து விடப்பட்டதில்

கவிதை எழுத நேரமில்லை என்றேன்

உன்னை எழுதவா என வெகுண்ட

கவிதை காணாமல் போனது!

**********

2.


அந்த வீதி நேரானதென
அறிவேன்

அந்த மேடை சீரானதென்றும் தெரிவேன்

மயிலறகுப் பொதியை
இரும்பெனப் புரிந்தேன்

கவிதை எழுத நேரமில்லை!