சொடுக்குக் கதைகள்

அழகியசிங்கர்

1.
அவன் யோசனை செய்தபடி நாற்காலியில் அமர்திருந்தான்.
2.
காக்காய் அந்தப் பூனையைக் கொத்த வந்தது. அதிலிருந்து தப்பித்து விட்டது பூனை

3.
தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது
அந்தப் பெண்ணிற்குத் தெரியும். யாரோ உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாரென்று.
4.
அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்தது. 8 மணி எப்போது முடியும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள்.

5.
தினமும் அலுவலகம் தாமதமாகப் போவான்.
அவன் உயர் அதிகாரி அவனை நிமிர்ந்து பார்ப்பார்.