
1.
ஆலாய் பற,
அருகாய் சிறு
பெரும் பொருள்
தேர்ந்து அறிய,
நேர்த்தியான முயற்சியுடன்
கருத்தின் தெளிவும்,
குவிய,கையகப்படும்
வானம்.
2
நாவிற்கு இனிக்கும்
நாலடியார் பாடல்கள்;
கருத்துக்கு பொருள்
சேர்க்கும் மூதுரை;
அனைத்துக்கும் சிகரம்
விநாயகர் அகவல்;
ஔவையை படி தினம்.
3.
தர்க்கமிடும் பர சமயம் தோறும்
அதுவே நன்னூல்
என நாட்டுவித்த
பின்னரே,சிவ சமயமே, சால
சிறந்ததென அறிந்தான் குருபரன்.
4.
தேவர் தேனார் அமுதம் உண்டிட;
பரனுக்கு ஆலகாலம்
மட்டும் கிட்டிட;
பரமனும் தன்னூழ்
எனவே விழுங்கிட;
கண்டத்தில் இருத்தினாள்;
பாகம்பிரியாள்.
5.
கனலும் கோபத்தை
அக்கணமே தணித்தும்;
வஞ்சகம் உடையோரை
சமயம் பார்த்தும்;
ஆசான் ஆவேசத்தை
அவ்வமயமே பணிந்தும்;
நீக்கிட இன்பம் தங்கும்.

Very nice
மிக மிக அருமையான பதிவு.வாழ்க வளர்க உன் பணி.
மிகவும் அருமை