ஓசிப் மாண்டெல்ஸ்டாமின் கவிதை: சுவாசிக்காத நிலவு/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி


செவிப்பறை தன் உணர்வின் பாய்மரப் பயணத்தை விரிக்கிறது
அகண்ட பார்வை வெறுமையாகிறது
பாடாத நள்ளிரவுப் பறவைகளின் கூட்டம்
மௌனத்தில் நீந்துகிறது
நான் இயற்கையைப் போலவே
ஏழ்மையுடன் இருக்கிறேன்

ஆகாயத்தைப் போலவே
நிர்வாணமாய்

என் சுதந்திரம்
பொய்த்தோற்ற பேய்மையால் ஆனது

நான் சுவாசிக்காத நிலவைப் பார்க்கிறேன்
தாளை விட வெளுத்த ஆகாயத்தையும்
உங்கள் விசித்திரமான நோயுற்ற உலகையும்

வெறுமையை நான் வரவேற்கிறேன்