1.
எலியைக் பிடிக்கப் பூனை வளர்த்தோம்
பாலைக் குடித்துப் படுத்த பூனை
எலியார் வந்தும் எழும்பக் காணோம்
பூனை நல்ல பூனைதான்
2.
தேசம் எங்கும் ஊழல் நிரம்பும்
ஊழல் தடுக்க வன்முறை கிளம்பும்
வன்முறை முடிவில் மிஞ்சிய மனிதர்
வாழ்க வாழ்க வாழியவே
3.
சாப்பிட்டுப் படுத்துத் தூங்குதல் எளிது
தூங்கி எழுந்து படித்தல் எளிது
முடித்து எழுதும் என்பா எளிது
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது
Arumai
தூங்கி எழுந்து படித்தல் இதம்.ஊழல் வலி